Table of Contents
18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர முடியுமா? இன்று பலரும் வளர்பருவத்தில் போதிய உயரம் அடைய முடியாமல் கவலைப்படுகின்றனர். உண்மையில், உயரம் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன, மேலும் சில சரியான முறைகளை பின்பற்றினால், 18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர வாய்ப்பு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஹார்மோன்களின் மாற்றம் மற்றும் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது உடல் வளர்ச்சி 40-60 சதவீதம் மரபணுக்களால் வளர்கின்றன. இதில் எந்த மாற்றமும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் மீதம் இருக்கின்ற 40-20 சதவீதம் நம்மால் மாற்ற முடியும். இந்த நிலையில் நம் உடலிற்கு ஏற்றவாறு தகுந்த செயல்களை செய்தால் எளிதில் உயரமாகலாம்.
நமது உடல் குறிப்பிட்ட வயதிற்கு மேல் உயரமாக கூடிய தன்மையை இழக்கின்றது என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் நாம் நினைத்தாள் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக உயரமாக வளர முடியும். நமது உடல் தோற்றத்தில் உயரம் மிகவும் முக்கிய பங்கு வகுகின்றது. நம் உடலில் அழகிற்கும் உயரத்திற்கும் பெரிய தொடர்பு உள்ளது. நம் ஒவ்வொருவருமே நமது வயதிற்கேற்ற உயரம் இருக்க வேண்டும் என்று ஆசைகொள்வோம் ஆனால் அனைவருக்கும் அப்படி அமைவதில்லை.
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போக உயரமும் கூட ஒரு காரணமாக அமைகிறது. உயரம் சரியான விகிதத்தில் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் இருந்தாலே அழகாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும். நம் அனைவருக்குமே உயரம் ஒரு கம்பீரத்தையும் தைரியத்தையும் குடுக்கின்றது. அதனாலே அனைவரும் உயரமாக வேண்டுமென எண்ணுகின்றனர். உயரமாக இருப்பவர்களை பார்க்கும்போது குள்ளமாக இருப்பவர்கள் பொறாமை படுகின்றனர். நம் உயரம் அதிகரிக்காமல் இருக்க நம் சுற்றுச்சூழல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நம் உடலில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிதான் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோனை சுரக்கின்றன. சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பை தூண்டவும் அதை சீராக வைத்திருக்கும் முடியும். உயரத்தை அதிகரிக்க நாம் ஆரோக்கியமான உணவை சாப்பிடுதல் மற்றும் தகுந்த உடற்பயிர்ச்சுகளை மேற்கொள்வதன் மூலம் உயரமாகலாம்.
18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர வாய்ப்புகள் இருக்கிறது

நம் பருவ வயதில் கூட உயரத்தை அதிகரிக்க முடியும். பொதுவாக பெண்களுக்கு 18 வயதிலும் ஆண்களுக்கு 18 முதல் 21 வயதிற்கு மேல் உயரம் வளரமாட்டார்கள் என சொல்வதெல்லாம் நம்பத்தக்கது.
உயரமாக வளர மாத்திரைகள் சாப்பிடுதல் மாய மருந்துகளை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்ய ஆரோக்கியமான உணவை சரிவிகித அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.
உயரம் அதிகரிப்பது என்பது எளிய செயல்முறை அல்ல. இவை ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஒரு சிலர்க்கு எளிதாக பலனை வழங்கும் இன்னும் சிலருக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
எதனால் உயரம் தடைபடுகிறது:
வயது மற்றும் DNA , தூக்கமின்மை… உடல் உயரமாகாமல் போக முக்கிய பங்களிக்கிறது. உடலின் நீண்ட எலும்புகளின் முனைகலுக்கு அருகில் உள்ள திசுக்களின் பெயர் “வளர்ச்சி தட்டுகள்” என அழைக்கபடுகிறது.
வளர்ச்சி தட்டுகள் ஒவ்வொரு நீண்ட எலும்பின் இரு முனைகளிலும் அமைந்துள்ளது. இவையே ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.நாம் குறிப்பிட்ட உயரத்தை அடைவதற்கு முன் வளர்ச்சி தட்டுகள் மூடப்படுவதே உயரம் குறைய முக்கிய காரணமாகும்.
உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை:
நல்ல தோரணையை பின்பற்றுதல்:
நாம் உட்காரும் போதும் நிற்கும் போதும் சரியான தோரணையை பின்பற்றுவதன் மூலமும் உயரமாகலாம். எப்பொழுதும் ஒரே இடத்தில குமிந்து அல்லது அமர்ந்து கொண்டே இருப்பதால் உடல் உயரமாகாமல் குன்றியே இருக்கும். நேராக அமர்வது முதுகெலும்பிற்கு நல்ல வலுவான ஆற்றலை கொடுத்து உயரமாக உதவுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் ஓடி ஆடி விளையாடுதல் போன்ற ஆரோக்கியமான செயல்களை யாருமே செய்வதில்லை. நாம் ஒரே இடத்தில அமர்ந்து கொண்டிருந்தால் உடல் குறுகளடையும் . கூன் போட்டிருந்தால் எலும்பு வளர்ச்சி குன்றி உயரமாக வளர முடிவதில்லை. எனவே,நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும்.
காலப்போக்கில் நாம் சரியாக அமராமலும் நிற்காமலும் இருப்பது உடலில் தளர்ச்சியை உருவாக்கும். இதனால், உயரம் பாதிக்கப்படுகின்றது. எனவே, சரியான முறையில் நேராக நிமிர்ந்து உட்காருதல், நடத்தல் ஆகியனவற்றை செய்தால் ஆரோக்கியமாக உயரமாகலாம்.
சூரிய ஒளியை பார்த்தல்:
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பல பேர் காலை சூரிய ஒளியையே பார்ப்பதில்லை . விடியற்காலையில் படும் சூரியஒளி நம் மீது விழும்போது அதில் இருந்து வைட்டமின் டி கிடைக்கின்றது.

அதிலும் குறிப்பாக காலை எட்டு மணிக்கு முன்னர் சூரிய ஒளி நம் மீது படும்படி செய்தால் நல்லது. இந்த வைட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
போதிய தூக்கம்:
போதிய தூக்கமின்மையும் உயரமாகுவதை தடுக்கின்றன. வளர்ச்சி ஹார்மோன்கள் நம் உடல் குறிப்பிட்ட நேரம் தூங்குவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுகின்றன. அதனுடன் திசுக்களும் புதுப்பிக்கப்படும். இதனால், உடலும் சீராக வளர்கின்றன. எனவே, போதிய ஓய்வு எடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சி அடையும்.
அன்றாடம் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரமாவது உறங்கவேண்டும் இது வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. பொதுவாக இரவு 10 மணிக்கு முன் தூங்கி காலை 6 மணி அளவில் எழுந்தால் ஆரோக்கியமாக வளரலாம்.
அளவிற்கு அதிகமாகவோ குறைவாகவோ தூங்கும்போது உடலிற்கு தீய விளைவுகளை தான் வரும். தூக்கத்தின்போது தான் பொதுவாகவே வளர்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படுகின்றது. எனவே, வளர்ச்சி ஹார்மோன்கள் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமே போதிய தூக்கமின்மையை ஆகும்.
இதனால் போதிய அளவு நம்மால் வளர முடியாது. எனவே, போதிய அளவிற்கு தூங்குவதன் மூலம் இதனை தடுக்கலாம்.
உடலிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர்:
தண்ணீர் பருகாமல் இருப்பதும் உடல் வளர்ச்சியை பாதிக்கின்றது. நம் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பானங்கள், காபின் போன்ற பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் அன்றாடம் அதிக அளவு நீரை பருக வேண்டும்.
அதிக நீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் அனைவரும் சராசரியாக 20 கிலோகிராமிற்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் எத்தனை கிலோகிராம் எடை இருக்கிரமோ அதற்கேற்ப தண்ணீர் பருக வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்கள் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. அதிக தண்ணீர் நம் உடலில் தகுந்த வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தருகின்றன.
புகைப்பிடித்தலை தவிர்த்தல்:
தொடர்ந்து புகைபிடித்தல் கூட உயரத்தை குறைக்க முக்கிய காரணமாகும். புகை பிடிக்கும் கருவுற்ற தாய்மார்களின் குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கு உடல் வளர்ச்சியில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன. மற்றவர்களை காட்டிலும் இவர்கள் உடல் நலக்குறைவால் குள்ளமாகவே இருக்கின்றன.
எனவே புகைபிடித்தல் பழக்கத்தை குறைத்தல் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
சரிவிகித உணவு:
இயற்கையாக உயரத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நம் உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிக முக்கியம் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அதிலும் நாம் உண்ணும் உணவில் குறிப்பாக வைட்டமின் டி, வைட்டமின் பி மட்டும் 12, கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும் . உணவில் நிறைய காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடும் உணவில் நிறைய ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், மாமிசங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் உயரமாக முடியும்.
புரதம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரதம் அதிக அளவில் பச்சை காய்கறிகளில் உள்ளது. இதன் மூலம் எலும்பு வளர உதவுகின்றது. எலும்புகள் வலுவாக இல்லாவிட்டால் உயரமாகவே முடியாது . கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான மீன், பால், முட்டை, பச்சை காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
பால் ஒரு முழு உணவு இல்லாமல் இருக்கலாம் ஆனால், இதில் புரதம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. பால் எலும்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றது.
எலும்பு வளர்ச்சிக்கு பாதாம் உதவுகின்றன. இதில் நிறைய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை, அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆற்றலை எலும்பிற்கு கொடுகின்றது.
கோழி இறைச்சி உடலின் திசுக்கள் மற்றும் தசைகளை உருவாக்க உதவுன்றன. இது ஒரு புரதத்தின் வளமான மூலம் ஆகும். அடிக்கடி சிக்கன் உண்பதும் உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.
கோழி இறைச்சியை போலவே அதன் முட்டைகளும் நிறைய ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரிய பங்கு வகிக்கின்றன. இதுவும் புரதத்தின் ஒரு ஆரோக்கிய மூலமாகும். முட்டை எலும்பு வளரவும் உடல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் விரைவில் உயரமாகலாம்.
உண்ணும் உணவில் முளைத்த தானியங்கள் முழு தானியங்களை விட நிறைய பலனை தருகின்றன. எனவே, நிறைய முளைகட்டிய தானியங்களை எடுத்து கொள்வது நல்லது. இதில் உள்ள புரதம் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி மற்றும் கால்சியம் அதிக அளவில் கருப்பு எள்ளில் உள்ளன. எனவே கருப்பு எள்ளிலான உணவு பொருட்களை அதிக அளவில் உண்பதன் மூலமும் உயரமாகலாம்.
உயரம் அதிகரிக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களான மாம்பழம், பப்பாளி மற்றும் திராட்சை போன்றவற்றை உண்ணலாம். இதில், அதிக அளவு பொட்டாசியம் போலேட், வைட்டமின் உள்ளன. இதன் சத்துக்கள் உயரத்தை அதிகரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் பயன்படுகின்றன.
அஸ்வகந்தா நிறைய மருத்தவ பலன்களை கூடுகின்றன. இவை மூலிகைகளின் ராஜா என அழைக்கப்படுகின்றன. உடலின் செல்களை உற்பத்தி செய்ய அஸ்வகந்தா தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடியை கலந்து குடித்தால் விரைவில் உயரமாக முடியும்.
எனவே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்றி உயரத்தை அதிகரிக்கவும்.
உடற்பயிற்சி செய்தல் :

பதின்ம வயதினர்கள் உயரம் அதிகரிக்க பெரிய பங்கு வகிப்பது உடற்பயிற்சி ஆகும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோர் ஒரே இடத்தில அமர்ந்து யாருடனும் தொடர்பு கொள்ளாமலும், விளையாடாமல் இருக்கின்றனர். இதனால், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்படுகின்றன.
இவை உடலில் வளர்ச்சி ஹார்மோன்களை தடை செய்கின்றன.
போதிய உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்வதன் மூலம் நமது உடல் மனநிம்மதியை பெறுகின்றது.
நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் கடினமாகின்றன. உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக தெரியும். இதன் விளைவாக கடினமான தசைகள் உயரத்தை அதிகரிக்கிறது.
ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுகளான கால்பந்து, கூடைபந்து, கிரிக்கெட், டென்னிஸ், நடனம், நீச்சல் போன்றவற்றை விளையாடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் இருக்கும்.
உயரமான கம்பியை பிடித்து தொங்குவது வளர்ச்சிக்கு மிகவும் உதவும் இந்த பயிற்சியானது உடலின் தசைகளை வலிமையுடைய செய்கின்றது. சிறிது நேரம் செய்வதன் மூலமே இவை எலும்புகளை நன்கு வலுவடைந்து வளர உதவுகின்றது.
ஸ்கிப்பிங் செய்வது கூட உயரத்தை அதிகரிக்க மிக சிறந்த வழி ஆகும்.
தினமும் 30 முதல் 50 வரை ஸ்கிப்பிங் குதிப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் உயரமாக வளர்வதற்கும் வழி வகுக்கும்.
யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலமும் உயரமாகலாம். யோகாவிலுமே உயரமாவதற்கென சில பிரத்தியேக பயிற்சிகள் உள்ளன அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் உயரமாக முடியும். எந்த ஒரு பயிற்சியினையும் முழுவதுமாக சரியான முறையில் கடைபிடித்து வந்தால் நாம் நினைத்த பலனை விரைவில் அடைய முடியும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.