• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions
Tuesday, June 24, 2025
BFH News
No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home Health Tips

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

Tamizharasan k by Tamizharasan k
May 25, 2025
in Health Tips
488 5
0
கடலை மாவின் அழகு அதிசயங்கள்
739
SHARES
3.5k
VIEWS
Share on Facebookhttps://www.facebook.com/profile.php?id=100018092919880Share on Twitterhttps://wa.me/qr/5HR2IDPTWT5YF1

நாம் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என நினைக்குறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அக்கறை கொள்கின்றனர் அதற்காக பல விலையுயர்ந்த அழகு சாதனங்களை வாங்குகின்றனர். அதெல்லாம் அப்பொழுது நல்ல பலனை வழங்கினாலும் காலப்போக்கில் தீய விளைவுகளை கொடுக்கும். நாம் அனைவருமே அழகான பொலிவான சருமத்தையே பெற எண்ணுகிறோம். ஆனால், எல்லாருடைய முகமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஒவ்வொருவர் சருமமும் ஒரு தன்மையை கொண்டுள்ளது. சிலருக்கு சருமம் வறண்டு போய் அல்லது எண்ணை பசையுடன் அல்லது முகப்பருகளுடன் காணப்படும். சிலருக்கு கரடு முரடான சருமம் இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்புகள் இருந்தாலும் அவர்கள் இதை தாராளமாக உபயோகிக்கலாம் எந்த தீங்கும் விளைவிக்காது சருமத்திற்கு. இதற்காக நீங்களே கடைக்கு சென்று விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டியதில்லை.

READ ALSO

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருளான கடலைமாவை வைத்தே முகத்தை அழகாக மாற்ற முடியும். பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு மட்டுமே உண்டு.

Table of Contents

  • கடலைமாவு:
  • கடலை மாவின் பயன்கள்:

கடலைமாவு:

காலம் காலமாக பெண்களின் அழகை மேன்படுத்த பயன்படுத்தும் முதல் பொருள் கடலைமாவு ஆகும். எல்லா வித சருமத்தினரும் கடலைமாவை பயன்படுத்தலாம். இதை தான் பாரம்பரியமாகவே நம் முன்னோர்கள் தோல் பராமரிப்பிற்கு பயன்படுத்தினார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தியே குளித்தனர். ஏனெனில், இது இயற்கையாகவே அழகை பெற உதவுகிறது. இது சருமத்தில் கருமை படிவதை தடுக்கிறது அது மட்டுமல்லாமல் சரும தொற்றுக்களை தடுக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கடலை மாவின் பயன்கள்:

கடலைமாவில் ஏராளமான ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால் இது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை விரைவில் நீக்கி சுத்தம் செய்து சருமத்திற்கு பொலிவை வழங்குகிறது. அதும் இந்த கடலை மாவை கொண்டு ஒரு சில பொருட்களுடன் சேர்த்து உபயோகித்தால் சருமத்திற்கு சிறந்த பலன்களை குடுக்கும். அதை எப்படியெல்லாம் செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.

1.முகத்தை சுத்தம் செய்ய கடலைமாவு: நாம் எப்போதும் முகத்தை அழகுபடுத்துவதற்கு முன் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள், தூசிகள், பிசுக்களை நீக்க முடியும். இதை செய்வதற்கு கடலை மாவு ஒரு தேக்கரண்டி மற்றும் தயிர் ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

2.சருமம் மென்மைக்கு கடலைமாவு: கடலை மாவை இப்படி பயன்படுத்துவதன் மூலம் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கடலை மாவை எடுத்து கொள்ளவும் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கலவை போல் தயார் செய்து கொள்ளவும். பின்னர், இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடம் உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடவும்.

3.சாதாரண சருமத்திற்கு கடலைமாவு: பொதுவாகவே சாதாரண சருமத்தில் கடலை மாவை தேய்த்து சிறிது நேரம் விட்டு கழுவினால் சருமம் இழந்த பொலிவையும் அழகையும் திரும்ப பெரும். ஏனென்றால், கடலை மாவு முகத்தை பிளீச்சிங் செய்யும் தன்மையை கொண்டுள்ளது. முதலில் ஒரு தேக்கரண்டி கடலை மாவை கொஞ்சம் தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் சருமத்தில் தடவி கொள்ளவும். பின்னர், அதை கழுவி விடவும். பிறகு ஒரு கிண்ணம் எடுத்து கொள்ளவும் அதில் சிறிதளவு கடலை மாவு எடுத்து கொள்ளவும். 3 தேக்கரண்டி தயிரை எடுத்து அதை ஒரு துணியில் போட்டு நன்றாக ஈரப்பதம் போகும்வரை புளியவேண்டும். பின்னர், அந்த தயிரை கடலைமாவுடன் கலந்து ஒரு கலவையாக எடுத்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் தடவி உலர விடவும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தயிர்க்கு பதிலாக பாலை சேர்த்து கொள்ளவும். இந்த கலவையில் தயிர் சேர்ப்பதால் சருமம் சீக்கிரமா காயாது அதனால் 25 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை உபயோகிக்கலாம்.

4.எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு கடலை மாவு: குளிர் காலத்தில் சரும பாதுகாப்பிற்கு அதிக நேரமும் கவனமும் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும் எண்ணெய் பசை உள்ள சருமத்தினர் அதிகமாகவே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை அடைத்து முகப்பரு பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வெளி வர 2 தேக்கரண்டி கடலைமாவு ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சிறிதளவு பால் கலந்து நன்கு கலவையாக கலந்து எடுத்து கொள்ளவும். பின்னர் அந்த கலவையை நன்றாக முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலர விடவும். அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் முகத்தில் தெளித்து நன்றாக கீழிருந்து மேல் பக்கமாக நன்கு மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நன்றாக முகத்தை கழுவி கொள்ளவும். குளிர் காலத்தில் 3 அல்லது 4 நாட்கள் இதை செய்வதன் மூலம் எண்ணெய் பசை நீங்கி பொலிவான சருமத்தை பெறலாம்.

5.முகப்பரு உள்ள சருமத்திற்கு கடைமாவு: கடலை மாவு சருமத்தில் உள்ள முகப்பருக்களை நீக்க மிகவும் உதவுகிறது. ஏனெனில் கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது. பொதுவாகவே முகப்பருக்கள் நம் சருமத்தின் அழகை குலைகின்றன. ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் 2 தேக்கரண்டி கடலை மாவை போட்டு அதில் சிறிதளவு வேப்பந்தலையை அரைத்து சேர்த்து கொள்ளவும். மேலும் சிறிதளவு தயிர் மற்றும் முல்தானி இருந்தால் அதையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கலவையை தயார் செய்யவும். இந்த கலவையை நன்றாக சருமத்தில் தடவி 15 நிமிடம் உளர வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். இதனை வாரம் 3 தடவை செய்து வந்தால் முகப்பருக்கள் நீங்கி சருமம் மிருதுவாக காணப்படும்.

6.கரும்புள்ளியை நீக்க கடலைமாவு: பொதுவாகவே கரும்புள்ளிகள் முகத்திலும் கழுத்தை சுற்றியும் இருக்கின்றன. கரும்புள்ளி வர முக்கியக் காரணமே மெலனின் ஆக்ஸிடேசன். நம் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமா இருந்தால்கூட கரும்புள்ளி வருகின்றன. இந்த கரும்புள்ளிகள் இரண்டு வகையாக உள்ளது. அதில் ஒன்று பருவம் விட்டு சென்ற கரும்புள்ளிகள் மற்றொன்று மச்சம் போன்று தோன்றி கரும்புள்ளியாக இருப்பது. நாம் தொடர்ந்து பரு உள்ள இடத்தை தடவுவது தொடுவது போன்ற செயல்களை செய்தால் அந்த பரு சீக்கிரமாக குணமடையாது. சருமத்தை பராமரிக்காமல் அப்படியே வெயிலில் திரிவதன் மூலம் தூசி, மாசுக்கள் சருமத்தில் படிவதனாலும் காலப்போக்கில் இது கரும்புள்ளியாக மாறுகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க இரண்டு தேக்கரண்டி கடலைமாவு மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி விடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பொலிவு பெரும்.

7.வறண்ட சருமத்திற்கு கடலை மாவு:வறண்ட சருமத்தை சரிசெய்வதில் கடலை மாவு முக்கிய பங்கு வகுக்கிறது. நம்மில் சிலருக்கு சருமம் வறண்டு போய் இருக்கும் அதும் பனி காலங்களில் வறண்ட சருமம் உள்ளவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள் இதனால். வறண்ட சருமத்திற்கு முக்கிய காரணமே காலநிலை மற்றம் சுடு தண்ணீரில் முகத்தை அடிக்கடி கழுவுதல் இவையெல்லாம் தான். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இதனால் நிறைய தீங்கு விலைவிக்கும் நமக்கு. இதனை உடனே தீர்க்க தவறினால் பல பிரச்சனைக்ளும் இன்னல்களும் ஏற்பட கூடும். நமது உடலில் எதாவது ஆரோக்கிய குறைபாடு உள்ளதை இது நன்றாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இதனை விரைவில் போக்க வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் சிறிதளவு கற்றாழை கலந்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையை சருமத்தில் தடவி 15 நிமிடம் நன்றாக உலர விடவும்.

8.சென்சிடிவ் மற்றும் டேமேஜ் சருமத்திற்கு கடலை மாவு:மற்ற சருமத்தினர் போல் இல்லாமல் சென்சிடிவ் மற்றும் டேமேஜ் சருமம் உள்ளவர்கள் எளிதில் அனைத்து விதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்த முடியாது. இது சருமத்தில் அலர்ஜி போன்ற ஒவ்வாமை நோயை உண்டாக்கும். இவர்கள் எல்லா காலகட்டத்திலும் சரும பிரச்சனை உள்ளவராகவே கருத படுகின்றனர். கரடு முரடான டேமேஜ் சருமம் உள்ளவர்களும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களும் இதை பயன்படுத்தி நல்ல பலனை பெற முடியும். இது நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலனை கொடுக்கும். ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவை எடுத்து கொள்ளவும். இதனுடன் மிக குறைவான அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும் மற்றும் தயிரில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி கெட்டியான தயிரை இதில் கலந்து கொள்ளவும். ஆண்கள் மஞ்சள் சேர்ப்பதை தவிர்க்கவும். இந்த கலவையை நன்கு முகத்தில் தடவி உலர விடவும். 15 நிமிடங்கள் கழித்து நன்றாக கீழிருந்து மேல் பக்கமாக கையை நீரில் நனைத்து சருமத்தில் மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரால் நன்கு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உபயோகிக்கலாம்.

இதையெல்லாம் செய்வது சருமத்திற்கு நல்ல பலனை விரைவில் குடுத்தாலும் இதற்காகவே சிறிதளவு நல்ல பலகங்களான அதிக காய்கறிகள், பழங்கள் சேர்க்கலாம், அதிக நீரேற்றதுடன் இருத்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவை சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன. கடலைமாவு பயன்பாடு எந்த தீங்கையும் சருமத்திற்கு விலைவிப்பதில்லை இருப்பினும் இதை பயன்படுத்துவதால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது சரும தடிப்பு போன்றவை வரும் என்றால் இதனை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Related Posts

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
Animal Disease

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது
Health Tips

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

June 23, 2025
இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
Desease

இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

June 23, 2025
குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது
Health Tips

குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது

June 23, 2025
புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்
Awareness

புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்

June 23, 2025
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி
Awareness

போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

June 23, 2025
Next Post
ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

Natural remedies for menstrual pain

மாதவிடாய் வலிக்கு இயற்கை மருந்துகள்

June 17, 2025
தலை வலி

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

June 7, 2025
விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
நகத்தின் நிறம் மாற காரணம்

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

May 25, 2025
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

மதுவினால் மனிதருக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சில மருத்துவ ஆலோசனைகள்

June 23, 2025

EDITOR'S PICK

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

May 11, 2025
உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

June 23, 2025
தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

June 20, 2025
வயிற்று வலி

வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

June 7, 2025

BFH News

Categories

  • Animal Disease
  • Awareness
  • Desease
  • Epidemic
  • Health Tips
  • Lifestyle
  • Virus Desease

Recent Posts

  • விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
  • தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்
  • பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
  • இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்
No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions

Copyright (c) 2025 BFH News All Right Reseved

No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு

Copyright (c) 2025 BFH News All Right Reseved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In