விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் ஜூனோடிக் நோய்கள் (Zoonotic Diseases) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் அல்லது பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. விலங்குகள் சில சமயங்களில் இந்த நோய்க்கிருமிகளைச் சுமந்து செல்லும் போது ஆரோக்கியமாகத் தோன்றினாலும், மனிதர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவும் சில பொதுவான வழிகள்: சில முக்கிய ஜூனோடிக் நோய்கள் மற்றும் அவற்றின் பரவும் முறைகள்: தடுப்பு முறைகள்: தெரு நாய்களிடம் மிகவும் உஷாராக … Read more

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

தவறான பயன்பாட்டினால் துன்பத்திற்கு உள்ளான குழந்தைகளை கண்காணித்தல், மதிப்பிடுதல் மற்றும் வழிமுறைகள்: குழந்தைகள் உதவிக்கரம் (Child Helpline) சமூக பணியாளர்களை நியமித்து, குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி புரிகிறது. குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல் உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கி, வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு அளிக்க வேண்டும். குடும்ப ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு … Read more

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

பூஞ்சை என்றால் என்ன? பூஞ்சை (Fungus) என்பது ஒரு வகை உயிரி ஆகும். இது மனித உடலில்‌ சில நேரங்களில்‌ தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. பூஞ்சை தோல்‌, நகங்கள்‌, வாய்ப்பகுதிகள்‌, உடலின்‌ உள்‌ உறுப்புகள்‌ என பல இடங்களில்‌ தாக்கத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக்கூடியது. பூஞ்சை தொற்று: பூஞ்சை தொற்று உலகெங்கிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ மில்லியன்‌ கணக்கான மக்களை பாதிக்திறது என்பது உங்களுக்குத்‌ தெரியுமா? இந்த நோய்க்கிருமிகள்‌ நமது தோல்‌, நகங்கள்‌ மற்றும்‌ உள்‌ உறுப்புகளில்‌ அழிவை … Read more

இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்

மனித தடைகாப்பு குறைவு வைரஸால் (HIV) ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும். இதில் நோய்த் தடைக்காப்பு மண்டலம் உடலின் நோய்க் காரணிகளை ஒடுக்குவதில் தோல்வியடைகிறது. இவை லிம்போசைட்டுகளைத் தாக்கி, பாதிப்படைந்த நபர்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980-களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார். இவரது குழுவினர் 1985-இல் இந்தியாவில் முதன் … Read more

இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி L160 ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம். இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர … Read more

இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்

வைரஸ்‌ நோய்கள்‌ என்றால்‌ என்ன? வைரஸ்‌ நோய்கள்‌ என்பது வைரஸ்களால்‌ ஏற்படும்‌ தொற்றுநோய்கள்‌ ஆகும்‌. வைரஸ்கள்‌ மிகச்‌ சிறிய உயிரணுக்கள்‌ ஆகும்‌, அவை மனித உடலில்‌ நுழைந்து நோய்களை ஏற்படுத்துதின்றன.வைரஸ் நோய்கள் மனித உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.எனவே மனிதர்கள் வைரஸ் நோய் உடலை தாக்காமல் ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.வைரஸ்‌ என்பது மிகச்சிறிய புரதங்கள்‌ மற்றும்‌ மரபணு பொருட்களை கொண்டதாகும்‌. உலகில்‌ நூற்றுக்கணக்கான வைரஸ்கள்‌ உள்ளன. வைரஸ்‌ தொற்றால்தான்‌ காய்ச்சல்‌ சளி போன்றவையும்‌ … Read more

மதுவினால் மனிதருக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சில மருத்துவ ஆலோசனைகள்

சமுதாயத்தில் செல்வந்தர்கள் மற்றும் ஏழை மக்களால் மேற்கொள்ளப்படும் ஆல்கஹால் பயன்படுத்துதல் (நுகர்வு) என்பது ஒரு சமுதாயத் தீங்கு ஆகும். ஆல்கஹாலை சார்ந்திருத்தல் மதுப்பழக்கம் எனவும், அடிமையாதல் மதுவுக்கு அடிமையாதல் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆல்கஹால் தவறான பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல் ஒருவரின் உடல், உடலியல் மற்றும் உளவியல் பாதிப்பிற்குள்ளாக்குகிறது. மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகள் நீண்ட காலமாக மது அருந்துவதால், அது “ஒரு மயக்க மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணி போன்றும் … Read more

குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது

கொடூரமான, வன்முறையான, தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும். இது உடல், உணர்வு அல்லது மனம், வாய்மொழி, குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியிலான தவறான பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும். இது குடும்பம் மற்றும் அக்குடும்பத்தை சாராத நபர்களினால் ஏற்படுகிறது. இனி சிறுவயது குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் சார்ந்த தவறான பயன்பாடுகள், அதன் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் … Read more

புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்

புகையிலையின் தவறான பயன்பாடு புகையிலையானது நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. இவற்றின் இளம் கிளைகளின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட இலைகள், உலகளாவிய வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில் பயன்படுகின்றன. அதிலிருக்கும் “நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும். புகையிலைப் பயன்பாடு புகைபிடித்தல், உறிஞ்சுதல் மெல்லுதல் போன்றவற்றிற்காக மற்றும் புகையிலை பயன்படுத்தப்படுகிறது. சுருட்டு, சிகரெட்டுகள், பீடிகள், குழாய்கள், … Read more

போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

ஆல்கஹால், புகைபிடித்தல் மருந்துகளை, மற்றும் உடல் மற்றும் மனம் சார்ந்திருப்பது அடிமையாதல் எனப்படும். இந்தப் பொருட்களிலுள்ள அடிமைப்படுத்தும். பண்புள்ள போதையானது, ஒருவரை தீய விளைவுகளுக்கு உட்படுத்தி, அவர்கள் அப்பொருள்களை நிரந்தரமாகச் சார்ந்திருப்பதற்கு இட்டுச் செல்கிறது. புகையிலை, ஆல்கஹால் மற்றும் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் தனிநபர், அவரின் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் தீய விளைவுகளை உண்டாக்குவது மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த ஆபத்தான நடத்தை முறையை, முறையான கல்வி மற்றும் வழிகாட்டுதல் மூலம் தடுக்க முடியும். … Read more