Table of Contents
பொதுவாகவே எல்லா வயதினர்க்கும் முகப்பருக்கள் அதிகம் வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதே. ஒரு சில பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள் அதிகம் வரும்.
நம் இந்த முகப்பருக்களை உடனே கிள்ளி விடுவது அல்லது அதனை எப்பொழுதும் அழுத்திக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை செய்வதால் முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறியாமல், முகப்பருக்கள் சிதைந்து அங்கு தழும்புகளாக மாறுகிறது. இவையே காலப்போக்கில் குழியாக மாரி முகத்தின் அழகையே குலைக்கிறது.
முகப்பருவிற்கான காரணங்கள்:
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே அனைவரும் முகப்பரு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. அதற்காக நிறைய தீங்கு விளைவிக்கும் சோப்கள் மற்றும் முகக் களிம்புகளை முகப்பரு உள்ள இடத்தில் போடுகின்றனர்.

நம் உடலின் அனைத்து பகுதிகளிலும் சுரப்பிகள் உள்ளன. நம் முகத்திற்குல் உள்ள சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தை சுரக்கிறது. இவை முகத்தின் இரண்டாம் அடுக்கில் ஏராளமாக எண்ணெய் சுரப்பிகளை கொண்டுள்ளது. இந்த சுரப்பிகள் அதிக அளவில் முகத்தில் உள்ளன. அதில் குறிப்பாக கன்னம், மூக்கு மற்றும் நெற்றியில் அதிக அளவு சுரந்து காணப்படுக்குறது. இந்த சுரப்பிகள் முகத்தசைகளை நன்கு விரிவடைந்து சுருங்க செய்து முகத்தில் இயக்கங்களை சீராக்குகின்றன. இவை சருமத்தில் வறட்சியை தடுத்து ஈரபதத்தோடு வைக்கிறது.
பொதுவாகவே, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பருவ வயதில் ஹார்மோன்கள் சுரப்பு ஏற்படுகிறது. அதிலும், ஆன்ட்ரோஜன் சுரப்பு இருப்பதால் மட்டுமே சீபம் சுரக்கிறது. இந்த சுரப்பு அதிகரிக்கும்போது கூடவே சீபத்தையும் அதிகமாக சுரக்க செய்கிறது என்பது உண்மையே. சீபம் அதிகரிப்பதால் முகத்தில் எண்ணெய் பசையின் அளவும் அதிகரிக்கிறது. இந்த சீபம் தான் முடிக்கால்களின் வழியாக தோலின் மேற்பரப்பிற்கு வருகிறது. இதன் விளைவாகவே நம் தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இளமை பருவத்திலே சீபம் அதிக அளவு சுரக்கிறது. சீபம் அதிகம் சுரப்பது அதிக எண்ணெய் பசைக்கு வழிவகுக்கும். காற்றில் உள்ள திசுக்களும் அழுக்குகலும் விரைவில் எண்ணெய் பசையில் ஒட்டிக்கிறது. இதன் விளைவாக எண்ணெய் சுரப்பியின் வாய்ப்பகுதியை மூடிக்கொள்கின்றன. இதன் விளைவாக தோலுக்கு அடியில் உள்ள சீபம் வெளியே வர முடியாமல் அவதிப்படுகிறது. எனவே சீபம் உள்ளேயே தங்கிவிடுகிறது. சீபம் அதிக அளவு சேர சேர தோலுக்கு அடியில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக முகத்தில் பருக்கள் வருகின்றன. நம் பருக்களுடன் வெளியில் செல்லும்போது நிறைய பாக்டீரியாக்கள் பருக்களின் மீது பட்டு முகபருவை தீவிரமாக்குகிறது.
முகப்பருவானது ஆரம்பத்தில் கருமை நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ காணப்படும். முகப்பரு நன்கு சிவந்த நிலையில் அதனை பிதிக்கினால் வெள்ளை நிற குருணைகள் வெளிவருகின்றன. தோலில் இந்த சமயத்தில் தான் இயற்கையாகவே உள்ள பாக்டீரியாக்கள் வீரியமடைந்து சீழ்பிடிக்க செய்கிறது. அழுக்கு படிந்த துணியினால் சீழ்பிடித்த இடத்தினை துடைப்பதன் மூலமாக முகப்பரு சிவந்து வலிக்க ஆரம்பிக்கும். பொதுவாகவே முகப்பருக்கள் முகத்தில் மட்டுமே வராமல் கழுத்து, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வருகிறது.
முகப்பருவை தடுக்க செய்ய வேண்டியவை:
- ஆவி பிடிப்பது முற்றிலும் தலைவலி சம்மந்தப்பட்டது என்றாலும், ஆவி பிடிப்பது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை போக்குகிறது. இதனால், முவப்பருக்களை உருவாக்கும் மாசுக்கள் அழிந்துவிடும்.
- நம் முகப்பரு வராமல் தடுக்க அதிக அளவு அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பதோடு இயற்கையாகவே அழகுபடுத்திக்கொள்ள வேண்டும்.
- இன்றைய காலக்கட்டத்தில் நம் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். முடிந்தவரை சூரிய ஒளியில் காலையில் இருக்கலாம். அதோடு செயற்கை காற்றுக்கு பதிலாக இயற்கையான காற்றை அனுபவிக்கவும்.
- முகப்பரு தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பது உணவு கட்டுப்பாடே ஆகும். எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவுகளை மற்றும் துரித உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை அழிப்பது உடலிற்கும் முகத்திற்கும் நல்லது.
- கொழுப்பு நிறைந்த இறைச்சி, ஐஸ்கிரீம், நெய், வெண்ணை, கேக் போன்றவற்றை உண்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
- வீட்டிலேயே செய்யும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். நிறைய அளவு காய்கறிகளை உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.
- காய்கறிகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் முகத்திற்கு பொலிவை வழங்குகிறது.
- போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அருந்துவதால் நம் உடல் எப்பொழுதும் நீரேற்றத்துடன் சுறுசுறுப்பாக காணப்படும். குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
- போதிய அளவு தூங்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் தூங்கலாம் என்பதை தவிர்த்து தினமும் ஒரே நேரத்தில் குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது இரவில் உறங்க வேண்டும்.அதேபோல், தூங்கும்போது முகத்தில் உள்ள முகக்களிம்புகளை முழுவதும் கழுவி விட்டு தூங்கவும்.
- மலச்சிக்கல் கூட ஒரு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சரியான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டு மலச்சிக்கலை சரிசெய்தல் வேண்டும்.
- அதேபோல், முகப்பருக்களை கிள்ளவோ அல்லது அழுத்தவோ கூடாது. இது இன்னும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி முகப்பரு பெரியதாக காணப்படும். அதை அமுக்குவதால் முகபருவில் உள்ள திரவம் தோலில் பட்டு பக்கத்தில் மற்றொரு முகப்பரு வர வாய்ப்புள்ளது.
- முகப்பரு உள்ள ஒவ்வொருவரும் தலையணை, சோப்பு, துண்டு ஆகியவற்றை தனிதனியாக வைப்பதன் மூலம் முகப்பரு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுக்கலாம்.
- பொதுவாகவே பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி இருக்குமேயானால் முகப்பரு கண்டிப்பாக வரும். எனவே, இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.
- மனசுத்தம், மன அழுத்தம் நீங்கி சந்தோஷமாக இருப்பதன் மூலமும் முகப்பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், அதிக கெமிக்கல்ஸ் நிறைந்த சோப்க்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் :
நம் கடைகளில் நிறைய விலையுயர்ந்த அழகுசாதன பொருட்களை வாங்கி முகப்பருவிற்கு போடுவதற்கு பதிலாக வீட்டிலே இயற்கையான முறையில் முகப்பருக்களை அகற்றலாம். நம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களை வைத்தும் கூட முகப்பருக்களை நீக்க முடியும். நிறைய பொருட்கள் முகப்பருவை குணப்படுத்த உதவுகின்றது. என்னென்ன பொருட்களை வைத்து வீட்டிலேயே முகப்பருவை குணப்படுத்துவது எப்படி என விரைவாக பார்க்கலாம்.

சந்தனம்: சந்தனம் சரும பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவுகிறது. சந்தனத்தை எடுத்து அதில் 2 முதல் 3 சொட்டு பன்னீரை விட்டு நன்றாக குழப்பி முகத்தில் பூசி கொள்ளவும். அதனை அப்படியே விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே முகப்பருக்கள் விரைவில் குணமாகும்.
பப்பாளி: பப்பாளி சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது. பப்பாளி இறந்த செல்களை அகற்றவும் சருமத்தை ஈரபதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள பப்பைன் நொதி சரும வீக்கத்தை குறைத்து முகப்பருவை தடுக்கிறது. பப்பாளியில் சிறிதளவு தேன் கலந்து அரைத்து அதனை முகத்தில் தடவ வேண்டும். பின்னர், இதனை 20 நிமிடங்கள் பிறகு கழுவிவிடவும்.
தேன்: தேனில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்கள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகை கொண்டுள்ளது. இது சருமத்தில் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது. தேனை எடுத்து கொண்டு அதனை நேரடியாக முகப்பருவின் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரினால் முகத்தை கழுவுவதன் மூலம் முகப்பருவை சரிசெய்யலாம்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு இயற்கையாகவே தொற்றுக்களை குறைக்க உதவுகிறது. இதனால், சருமம் பொலிவுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எலுமிச்சை சாறில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளதால் சருமத்தில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது. எலுமிச்சை சாரை நேரடியாக முகத்தில் தடவலாம்.
ஒரு காட்டன் துணியில் எலுமிச்சை சாராய் நனைத்து அதனை முகப்பரு உள்ள இடத்தில தடவி நன்கு உலர விடவும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை செய்வதால் முகப்பரு மற்றும் அதன் வடுக்கள் குறையும்.
ஆப்பிள் சாறு வினிகர்: இது உடலிற்கு மிக நல்லது. ஆனாலும், இவை முகப்பருவை தடுக்க பயன்படுகிறது. அதாவது இவை நம் தோலில் உள்ள PH அளவை சமன் செய்து பாக்டீரியாக்களை எதிர்க்கிறது. இதனால், நம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை உலர செய்கிறது. 2 தேக்கரண்டி தண்ணீர் விட்டு அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சாறு வினிகரை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவுவதால் முகப்பரு குறையும்.
நெல்லிக்காய் தூள்: நெல்லிக்காய் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. முதலில் நெல்லிக்காய் தூளை எடுத்து கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக கலவையாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை முகப்பரு உள்ள இடத்தில பூசவும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். இப்படி செய்வதன் மூலம் முகப்பருக்கள் குறைவதோடு மட்டுமல்லாமல் கொலாஜின் அளவை அதிகரித்து முகத்தில் உள்ள கறைகளை குறைக்கிறது.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் முகத்தை சுத்தம்செய்யும் விட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. வெள்ளரிக்காய் அதிக அளவு குளிர்ச்சி தன்மையையும் ஆன்டி ஆக்சிடன்களுடன் இருப்பதால் சரும மாசுக்களை நீக்கி முகத்தை பொழிவாக்குகிறது. வெள்ளரிக்காயை நன்கு துருவி அதன் சாற்றை முகத்திர்க்கு பூசி வரவும். இதனால், முகப்பருக்கள் உடனே சரியாகிவிடும்.
ரோஸ்வாட்டர்: ரோஸ்வாட்டர் சருமத்தை மென்மையாகவும் பருக்களை வேகமாக விரட்டவும் பயன்படுகிறது. ரோஸ்வாட்டருடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகப்பரு உள்ள இடத்தில தடவவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவினால் முகப்பரு விரைவில் சரியாகும்.
மஞ்சள்: மஞ்சள் நிறைய இயற்கை குணங்களை கொண்டுள்ளது. மஞ்சளை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலவையாக்கவும். இந்த கலவையை முகப்பரு உள்ள இடத்தில தடவுவதன் மூலம் முகப்பரு குறையும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுவதனால் முகப்பரு குறைந்துவிடும்.
துளசி: துளசி தோலிற்கு ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இவற்றில் பூஞ்சை எதிர்புப்ப்பண்பு உள்ளதால் முகப்பரு உருவாவதை தடுக்கிறது. சில துளசி இலைகளையும் வேப்பிலையையும் அரைத்து எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்து விடவும். இந்த கலவையை முகப்பரு உள்ள இடத்தில தடவுவதன் மூலம் முகப்பருவை குணப்படுத்தலாம்.
வேப்பிலை: வேப்பிலை பலங்காலத்தில் இருந்தே மூலிகையில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்பை கொண்டுகளது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு கிருமி நாசினியாகவும் இது பயன்படுகிறது. நல்ல கொழுந்தாக உள்ள வேப்பிலையை எடுத்து கொள்ளவும். இதில் சிரிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கலவையாகும். அந்த கலவையை முகப்பரு உள்ள இடத்தில் பூசிக்கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் கழித்து கழுவுவதன் மூலம் முகப்பருவை சரிசெய்யலாம். இதன் எண்ணையை நேரடியாக முகத்தின் மீது பூசுவதால் முகப்பரு வருவதை தடுக்கலாம்.
கற்றாழை: கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் பண்பை கொண்டுள்ளது. கற்றாழையை எடுத்து அதன் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து அதனை நன்கு நீரில் அலச வேண்டும். இதனை தினமும் முகத்தில் பூசுவதன் மூலம் முகப்பரு வருவதையே தடுக்கலாம். இந்த காற்றாலை ஜெல் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பருக்களால் ஏற்படும் தலும்புகளையும் நீக்குகிறது.
குப்பைமேனி இலை: இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. குப்பைமேனி இலையுடன் அருகம்புல் பொடியையும் நீரை சேர்த்து கலவையாக எடுத்துக்கொள்ளவும். இதனை முகத்தில் தடவுவதன் மூலம் முகப்பரு விரைவில் குணமாகிறது. இரவில் இதனை பயன்படுத்துவது மிக நல்லது.
தக்காளி: தக்காளி சமையலுக்கு மட்டுமல்லாமல் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கும் பயன்படுகிறது. தக்காளியினை அரைத்து அந்த கலவையை முகப்பருவின் மீது வைத்து நன்றாக உலர விடவும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடுவதன் மூலம் முகப்பருக்கள் மறைந்து விடுகின்றன. இதனை தினமும் செய்வதன்மூலம் விரைவில் பலனை பெறலாம்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.