"Create a realistic illustration showing a person with visible dark circles under their eyes. The focus should be on the face, especially the tired-looking eyes with prominent under-eye darkness. Include subtle signs of fatigue such as puffy eyes, dull skin, or slightly drooped eyelids. Next to the person, display natural remedies like cucumber slices, aloe vera gel, rose water, and a bowl of cold green tea bags to visually suggest home treatments. The setting should feel calm and home-like, using soft lighting and neutral tones. No words or labels in the image—only clear visuals

கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!

நம் உடலில் உள்ள எந்தவொரு சத்து குறைபாட்டையும் நோய்களையும் திறம்பட முகம் வெளிக்காட்டுகிறது. அதிலும் நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண் மிக முக்கிய பங்கு வகுக்கின்றது. நம் முகம் என்னதான் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருந்தாலும் கருவளையம் வந்துவிட்டால் முகத்தின் அழகு காணாமலே போய்விடும். இது முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் குறைத்து எளிதில் முதுமை தோற்றத்தை தருகிறது. இதனால் பெண்கள் பெரும்பாலானோர் கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவை, வைட்டமின் குறைபாட்டாலும் கண்ணில் ஏற்படும் அலர்ஜியினாலும் கூட வரும். பழங்காலத்தில் பெண்களுக்கு மட்டும் அதிலும் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் கருவளையம் வர ஆரம்பிக்கும். ஆனால், இப்பொழுது பருவமடைந்த பெண்களுக்கும் இளம்வயதினர்க்கும் மற்றும் ஆண்களுக்கு கூட கருவளையம் வருகிறது. கருவளையம் எதனால் வருகின்றது மற்றும் அதனை எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்.

கருவளையம்:

நமது கண்ணிற்கு கீழ் உள்ள பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். கண்ணிற்கு தேவைக்கேற்ப அதிக அழுத்தம் மற்றும் அதிக வேலை கொடுப்பதால் கண்ணின் இந்த மென்மையான பகுதி பாதிக்கப்படும். இந்த பகுதியில் உள்ள ஹீமோகுளோபின்களை என்சைம்கள் சிதைக்கும் பொழுது தான் தோலின் நிறம் மாற்றப்பட்டு கருப்பு நிறமாக மாறுகிறது. இதனையே நாம் கருவளையம் என்கின்றோம். பொதுவாகவே வயதாகும்பொழுது உடலில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் குறைய ஆரம்பிக்கும். இதனால், தோலில் உள்ள கொலாஜின் மற்றும் எலாஸ்டின் ஆகியவை தோலை தளர்ந்து கண்ணை சுற்றியும் கருமையாக்கி கருவளையத்தையும் சுருக்கத்தையும் ஏற்படுத்தும்.

கருவளையம் எதனால் வருகிறது:

பொதுவாகவே கருவளயத்திற்கு போதிய சரும பராமரிப்பின்மை, ஊட்டச்சத்து குறைப்பாடு என பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலின் வாத மற்றும் பித்த சமநிலைமை சீராக இல்லாவிட்டாலும் கூட கருவளையம் ஏற்படும். நமது கண்ணுக்கு கீழே வரும் கருவளயத்திற்கு பல காரணங்கள் உள்ளன.

  1. அலர்ஜிகள்: நமக்கு ஏற்படும் அலர்ஜியின் காரணமாக கூட கண்ணை சுற்றியும் நிறம் குறைந்து இறுதியில் கருமையாக மாரி கருவளையத்தை ஏற்படுத்தும்.
  2. மரபணு: மரபணு காரணமாகவும் கருவளையம் வருகிறது.
  3. முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள்: பொதுவாகவே நாம் அனைவரும் அழகாக இருக்க அன்றாடம் பல கிரீம்களை பயன்படுத்துகிறோம். இது ஒரு சிலருக்கு ஒத்துக்காமல் இறுதியில் கருவளையம் வர காரணமாகிறது.
  4. ஓய்வு இல்லாமை: நமது உடலிற்கு போதிய ஓய்வு கிடைக்காமல் இருப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் வருகிறது.
  5. வெயிலில் அலைவது: நாம் வெயிலில் அதிக நேரம் அலைந்து திரிவதால் தோலின் மெல்லிய பகுதியான கண்ணை சுற்றி கருவளையம் ஏற்படுகிறது.
  6. புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்: நாம் புகைப்பிடிப்பதாலும் மது அருந்துவதாலும் காலப்பகுதியில் கருவளையம் ஏற்படுகிறது.
  7. ஹார்மோன்கள் சுரப்பு: நமது உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சீராக இல்லாவிட்டாலும் கருவளையம் வருகிறது.
  8. நீரேற்றம்: உடலிற்கு தேவையான அளவு நீரேற்றம் இல்லாததால் கருவளையம் வரும்.
  9. உணவு காரணிகள்: நாம் உண்ணும் உணவில் சோடியம் அதிக அளவில் இருந்தால் கண்ணை சுற்றி திரவத்தை தக்க வைத்து வீக்கத்திற்கு வழிவகுத்து இறுதியில் கருவளையத்தை ஏற்படுத்தும்.
  10. திடீர் எடை இழப்பு: திடீரென உடல் எடை குறைந்தால், தோலில் அந்த இழப்பை உடனே ஏற்க முடியாமல் கண்ணை சுற்றியும் கருவளையத்தை ஏற்படுத்துகிறது.
  11. ரத்த நரம்புகள்: ஒருசில நேரங்களில் கண்ணுக்கு அடியில் உள்ள ரத்த நரம்புகள் கூட நிறம் மாரி கருவளையத்தை ஏற்படுத்துகிறது.
  12. இரவில் தூங்காமல் இருப்பது: இன்றைய காலத்தில் நாம் அனைவருமே மடிக்கணினி அல்லது கைபேசியை பயன்படுத்தி கொண்டு இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பதால் கருவளையம் வருகிறது.
  13. இரும்பு சத்து குறைவு: நம் உடலில் இரும்பு சத்து குறைவதால் ஆக்சிஜனின் அளவும் குறைந்து கருவளையம் ஏற்படுகிறது. இதனால், கண்ணை சுற்றி கருமையான வட்டங்கள் ஏற்படுகின்றன.

கருவளையத்தின் அறிகுறிகள்:

கருவளையம் வருவதை ஒரு சில அறிகுறிகளை வைத்தே கண்டுகொள்ளலாம்.
நமது கண்ணை சுற்றியுள்ள தோலின் நிறம் மட்டும் முகத்தின் நிறத்தை விட மாறுபட்டு இருக்கும்.
பெரும்பாலும் கருமை நிறம் கண்ணிற்கு கீழேயும் அல்லது கண்ணை சுற்றியும் ஏற்படும்.
கருவளையம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சோர்வாகவே காணப்படுவார்கள்.
ஒருசில நேரங்களில் கண்ணை சுற்றி வீக்கம் காணப்படும்.
இதனால் கண்ணை சுற்றியும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் காணப்படும்.

கருவளையத்தை தடுக்க வீடு வைத்தியம்:

கருவளையம் வந்துவிட்டால் அதனை போக்க நாம் அனைவருமே விலையுயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றோம். இது முகத்தின் அழகையே சீர்குலைக்கிறது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கருவளையத்தை நிரந்தரமாக தடுப்பது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

  1. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு முகத்தை பளபளப்பாகவும் கருவளையத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து கொள்ளவும். இதை தண்ணீர் சேர்க்காமல் எடுத்து கொள்ளவும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளலாம். பின்னர், இதனை பிரிட்ஜில் வைத்து விடவும். ஒரு மணி நேரம் ஆகிய பிறகு பிரிட்ஜில் இருந்து எடுத்து அதனை வைத்து கண்ணை சுற்றிலும் நன்கு மசாஜ் செய்து அப்படியே விட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடவும். இப்படி செய்வதால் கருவளையம் நீங்கி முகம் பளபளவென இருக்கும்.
  2. பாதம்: நாம் சிறிதளவு பாதம் மற்றும் பால் எடுத்து கொண்டு நன்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை கண்ணை சுற்றி நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுவதன் மூலம் கருவளையம் நீங்கும்.
  3. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை ஒரு காட்டன் துணியில் நனைத்து கண்ணை சுற்றி நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் சோர்வு நீங்கி கருவளையம் மறையும்.
  4. ரோஸ்வாட்டர்: அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக ரோஸ்வாட்டர் உள்ளது. இவை சருமத்திலுள்ள இறந்த செல்களை அழித்து சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. காட்டன் துணியில் சிறிதளவு ரோஸ்வாட்டர் சேர்த்து கருவளையத்தின் மீது வைத்து விடவும். பின்னர் 15 நிமிடம் கழித்து கழுவுவதன் மூலம் விரைவில் கருவளையம் காணாமல் போகும். கற்றாழை: கற்றாழை சருமத்தை பராமரிக்க பெரும்பங்கு வகுக்கிறது. நாம் சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து கொண்டு கண்ணை சுற்றி நன்றாக தடவி விடவும். இவை இரவு நேரத்தில் தடவி அப்படியே விடுவது மிக சிறந்தது. இதனை 15 நிமிடங்கள் நன்றாக வட்ட வடிவில் கண்ணை சுற்றி மசாஜ் செய்வதன் மூலம் விரைவில் கருவளையம் குணமாகும்.
  5. தக்காளி: தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கண்ணை சுற்றி வரும் கருவளையத்தை போக்கும் தன்மை கொண்டுள்ளன. நாம் தக்காளி சாறை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கருவளையம் உள்ள இடத்தில நன்கு தடவ வேண்டும். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவுவதன் மூலம் கருவளையம் சரியாகும். இதனை தினமும் 2 வேலை செய்யலாம்.
  6. வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. நாம் வெள்ளரிக்காயை கண்களில் அப்படியே வைப்பதால் சோர்வு நீங்கி கருவளையம் விரைவில் மறையும். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதனை கண்ணை சுற்றி தடவ வேண்டும். இதனை 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவுவதால் கருவளையம் மறைந்துவிடும்.
  7. குளிர்ந்த பால்: பாலில் அதிக அளவு லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த லாக்டிக் அமிலமானது சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி முகத்திற்கு பொலிவு தருவதோடு கருவளையத்தையும் நீக்குகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பாலில் ஒரு காட்டன் பஞ்சை நன்றாக நனைத்து அதை வைத்து கண்ணை சுற்றி நன்றாக 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவுவதன் மூலம் விரைவில் கருவளையம் மறைந்துவிடும்.
  8. விளக்கெண்ணெய்: விளக்கெண்ணெயில் அதிக அளவு வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சரும வறட்சியை தடுக்கிறது. நாம் இரவு தூங்கும் முன்பு சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு கண்ணை சுற்றிலும் நன்கு மசாஜ் செய்வதன் மூலம் விரைவில் கருவளையம் குணமாகும்.
  9. மஞ்சள்: மஞ்சளில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த கலவையை கருவளையத்தின் மேல் நன்றாக பூசி விடவும். பின்னர், குளிர்ந்த நீரினால் 15 நிமிடம் கழித்து கழுவி விடுவதன் மூலம் கருவளையம் நீங்கும்.
  10. எலுமிச்சை: எலுமிச்சை சாறை எடுத்து கொள்ளவும். இந்த சாற்றினை பஞ்சியில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் நன்கு மசாஜ் செய்வதன் மூலம் கருவளையம் மறையும். தினமும் இரண்டு வேலை இதனை செய்யலாம்.
  11. காபி தூள் மற்றும் தேன்: நாம் தேன் மற்றும் காபி தூள் இரண்டையும் எடுத்து ஒரு கலவையாக கலந்து கொள்ளவேண்டும். இந்த கலவையை கருவளையம் உள்ள இடத்திலும் மற்றும் முகத்திலும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். பின்னர், குளிர்ந்த நீரினால் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுவதன் மூலம் விரைவில் கருவளையம் நீங்கும்.
  12. வாழைப்பழ தோல்: வாழைப்பழ தோலில் உள்ள பொட்டாசியம் சருமத்திற்கு தேவையான சத்துக்களை கொடுத்து கருவளையத்தை குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பழ தோலை தேவையில்லை என்று எறியாமல் அதன் இரு பக்கமும் நறுக்கி விட்டு மீதியை கண்ணை சுற்றி நன்கு மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படியே 10 நிமிடங்கள் செய்து வர விரைவில் கருவளையம் நீங்கும்.

செய்ய கூடாதவை:

  • நம் கண்களை அடிக்கடி தேய்ப்பதையும் கசக்குவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • நமது கண்ணிற்கு அதிக வேலை மற்றும் அழுத்தம் தருவதை தவிர்க்க வேண்டும்.
  • அதிக நேரம் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரெட்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • நாம் எப்பொழுதுமே இருட்டில் மடிக்கணினி அல்லது கைபேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நம் உடலிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் முகப்பூச்சுகளையும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

  • அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளவும்.
  • உடலை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்து கொள்ள வேண்டும்.
  • நாள் ஒன்றிற்கு குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
  • உடலிற்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.
  • அடிக்கடி குளிர்ந்த நீரால் கண்ணை கழுவ வேண்டும்.
  • இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்கி விடவும்.
  • நமது கண்களை மூடிய பிறகு கண்ணை சுற்றிலும் வட்டமாக மசாஜ் செய்வதாலும் அடிக்கடி கண்ணை மூடி திறப்பது ஆகியவை கருவளையம் வராமல் தடுக்கவும் மற்றும் கண்ணை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *