Table of Contents
நம் உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை மூட்டு என்கின்றோம். உடலில் உள்ள மூட்டு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தை அல்லது வலியையே நம் “மூட்டு வலி” ஆகும்.
உடலில் எலும்புகள் நகர்வதால் மூட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடல் இயக்கத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அனுமதிக்கின்றது. நமது உடலில் எலும்புகளை நகர்த்த மூட்டுகள் அனுமதி அளிக்கின்றன. மூட்டில் உள்ள எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் வீக்கமடையலாம். நம் உடலில் கால், கை, இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முதுகுத்தண்டில் மூட்டு வலிகள் பொதுவாக ஏற்படுகின்றன.
மூட்டு வலி ஒரு சில நேரங்களில் நீண்டு வலிக்கும் அல்லது சிறிது நேரம் விட்டு விட்டு வலி எடுக்கும். மூட்டு வலி ஏற்படுவதனால் மூட்டுக்கள் பொதுவாகவே விறைப்பாக இருக்கின்றன. இதற்கேற்ப உடற்பயிற்சி அல்லது நீட்சியினை செய்வதன் மூலமே வலி குறைந்து காணப்படும். அளவிற்கு அதிகமாக உடற்பயிற்சி அல்லது நீட்சி செய்வதனால் எதிர்மறை விளைவாக இன்னும் மூட்டு வலி மோசமாகிவிடும்.
மூட்டு வலி மிகவும் பொதுவான உடல் பிரச்சனைகளில் ஒன்றாகும். மூட்டு வலி உள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகின்றது.
மூட்டு வலிக்கு வயது வரம்பு இல்லை. அனாலும் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளின் நெகிழ்வுத்தன்மை தொடங்குவதால் 30 முதல் 40 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. என்னென்ன காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகின்றன மற்றும் அதை எப்படி சரிசெய்வது என விரிவாக பார்க்கலாம்.
மூட்டு வலியின் வகைகள்:
மூட்டு வலிகள் நம் உடலில் எந்த இடத்திலும் எளிதில் ஏற்படுகின்றன. இவை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
கடுமையான மூட்டுவலி: இவை ஒரு மூட்டை பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் மூட்டு அல்லது காயங்களில் அதிக தொற்று ஏற்பட்டால் மூட்டுகளை அதிகம் பாதிக்கின்றது.
இவை பொதுவாகவே திடீரென தோன்றி மறையும் அல்லது சில நாட்கள் நீடிக்கும். இந்த வலியினை சிகிச்சையின் மூலம் முழுவதுமாக குணப்படுத்தலாம்.
நாள்பட்ட மூட்டுவலி: நாள் கணக்கில் இல்லாமல் சில வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் வலி இவை ஆகும்.
இவை ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகளை பாதிக்கின்றது. இதனால் வலி படிப்படியாக அதிகரித்து தீவிரமான வழியாக இறுதியில் மாறும். இதற்க்கான சிகிச்சை அளிப்பது கடினம். இவை முற்றிலுமாக மாறலாம் அல்லது குணமடையாமலும் கூட போகலாம்.
மூட்டு வலிக்கான அறிகுறிகள்:
மூட்டு வழிகளை எளிதாக கண்டறிந்தாலும் மூட்டு வலிகளோடு தொடர்புடைய நிறைய அறிகுறிகள் உள்ளன. இதன் அறிகுறிகள் மிகவும் லேசாக ஆரம்பித்து ரொம்ப கடினமாகும் வரை இருக்கலாம். இதன் அறிகுறிகளை வைத்து லேசான வலிக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

- நம் உடலில் மூட்டு வலி மற்றும் வீக்கம் திடீரென வருவது முக்கிய அறிகுறியாகும்.
- மூட்டை சுற்றி மென்மையாக காணப்படும். அதன் பிறகு மூட்டுகள் முற்றிலும் சிவந்து காணப்படும்.
- சூடாக காணப்படும் மூட்டுகள் வலி இருக்கும்போது முழுவதும் பூசப்பட்டு அசையாமல் இருக்கின்றன.
- மூட்டு வலி இருக்கும்போது காய்ச்சல் ஏற்படும்.இதன் பிறகு மூட்டுகள் விறைப்பாக காணப்படும்.இதனால் மூட்டுகளின் இயக்கத்திற்கான வரம்பு குறைகின்றது. இதனால் காய்ச்சலுக்கான மற்ற அறிகுறிகளான இரும்பல் தும்மல் தலைவலி போன்றவை இருக்காது.
- மூட்டு சிதைந்ததாக தெரியும் போக போக தீவிர மூட்டு வலி உடலில் சுற்றியுள்ள பாகங்களில் கடுமையாக பரவும். மூட்டை சுற்றியுள்ள தசைகள் கொஞ்சம் கொஞ்சமா பலவீனம் ஆகும்.
இந்த மூட்டு வலி ஒரு வாரத்திற்கு பிறகும் நீடித்து வலி நிவாரணிகளை பயன்படுத்திய பிறகும் வலி நீங்கவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
மூட்டு வலிக்கான காரணங்கள்:
நம் உடலில் மூட்டு வலி மிக லேசான நிகழ்வுகளின் காரணமாகவோ போதிய ஓய்வு இல்லாமை, அதிக காயம் இருத்தல், தேவையான சுய கவனிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன. மூட்டு வலி அதிர்ச்சிகரமான காயங்களால் ஏற்படலாம்.
- கீல்வாதம்: கீல்வாதத்தின் மிகவும் பொதுவான வடிவம் மற்றும் 45 வயதை கடந்த பெரியவர்களின் குறைக்கப்பட்ட குருத்தெலும்புகளின் விளைவே கீல்வாதம் ஆகும். குருத்தெலும்பு தேய்மானம் அடையும்போது மூட்டில் உள்ள எலும்புகள் ஒன்றை ஒன்று உறைந்து வலி விறைப்பு மற்றும் இயக்கத்தை குறைகின்றது.
- முடக்குவாதம்: இவை வித்யாசமான கீல்வாதம் ஆகும். இவை நம் உடலில் உள்ள குருத்தெலும்புகள், மூட்டுகள் மற்றும் அருகில் உள்ள எலும்பை சேதப்படுத்தும் தன்னியக்க நோயாகும். வலி வீக்கம் மற்றும் குறைபாடு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இவை நம் மூட்டுகளில் மட்டுமே தீங்கு விளைவிக்கும்.
- புர்சிடீஸ்: நம் மூட்டுகளுக்கு அருகிலுள்ள தசைநார்கள் குஷன் செய்யும் சிறிய சினோவியல் திரவம் நிறைந்த பைகளை பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் தோல்ப்பட்டை, முழங்கை மற்றும் இடுப்பில் ஏற்படுகின்றன.
- சுழுக்கு: மூட்டு வலி பெரும்பாலும் காயத்தின் விளைவாகவே ஏற்படுகின்றன. ஒருவர் திடீரென எந்திரிக்கும்போதோ அல்லது விழும்போதோ எலும்பு நரம்புகள் இழுத்து பிடித்து சுளுக்கு ஏற்படுகின்றன. இவை முழுமையாக குணமாகாத பட்சத்தில் காலப்போக்கில் மூட்டு வலிக்கு காரணமாகின்றன.
- வைரஸ் தொற்று: சில வைரஸ் தொற்றுகள் நம் உடலில் பரவலாகவே மூட்டு வழியை ஏற்படுத்தும். ஹெபாடிட்டீஸ் மற்றும் ரூபெல்லா ஆகியன காய்ச்சல் மற்றும் மூட்டு வழியை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஆகும்.
- மூட்டு அலற்ஜி: இதுவும் மூட்டு வலிக்கு பொதுவான காரணமாக அமைகிறது. நாள்பட்ட அலற்ஜியின் விளைவாக வீக்கம் ஏற்படடு வலி ஏற்படுகிறது.
- உடல் பருமன் மற்றும் அதிக தீவிர பயிற்சிகள்: நமது உடல் எடை அனைத்தையுமே மூட்டுகள் தான் தாங்குகின்றன. அதிக எடை உடல் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலே அதிக உடல் குறியீடு என் உள்ளவர்கள் எளிதில் மூட்டு வழியில் பாதிக்கப்படுகின்றன. அதிக தீவிர உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகளை விளையாடுபவர்களும் எளிதில் மூட்டு வலி ஏற்படுகின்றது. இவை மூட்டுகளின் கூடுதல் அழுத்தம் மற்றும் பயிற்சிகளை செய்யும்போது ஏற்படும் உடல் காயங்களின் கூடுதல் ஆபத்து காரணமாக இருக்கலாம்.
மூட்டு வழியை சரிசெய்தல்:
மூட்டு வலியை ஏற்படுத்தும் சில நிபந்தனைகளை நம்மால் தடுக்க முடியாது. அதிக உட்கார்ந்த நிலை மற்றும் வாழ்க்கை முறையினால் மூட்டு வலிகள் வருவதற்க்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. நம் உடலில் ஏற்படும் கடுமையான மூட்டு வழியை தடுக்கவும் அதிலிருந்து முற்றிலும் விடுபடவும் நிறைய ஆரோக்கியமான முறைகளை பின்பற்றலாம்.
1.எளிய வீடு வைத்தியம்:
நம் அனைவருமே வலி ஏற்பட்டால் முதலில் வீட்டு வைத்தியத்தையே செய்து பார்ப்போம். மிகவும் முடியாத அல்லது அதிக வலி வந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்வோம். வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்தே மூட்டு வலியினை சுலபமாக சரி செய்ய்யலாம்.
- நம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் மூட்டு வழியை சரிசெய்ய முக்கிய பங்கு வகிக்கின்றன. கீல்வாதம், முடக்குவாதம் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிப்பதில் உதவுகின்றது.
- இதில் குர்குமின் சக்திவாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.
- மூட்டு வலியை போக்க ஒரு கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் மற்றும் இஞ்சியினை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு தேன் கலந்து அருந்தவும்.
- அஸ்வகந்தா கீல்வாதத்துடன் தொடர்புடைய வழியை குறைகிறது. இது அதிக மருத்துவ குணத்தை கொண்டுள்ள மருத்துவ மூலிகையாகும். மூட்டு வலிக்கான சிறந்த ஆயுர்வேத மருந்துகளில் இவை முதன்மை வகிக்கின்றன. அஸ்வகந்தாவை பால் அல்லது தண்ணீரில் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என உணவிற்கு பிறகு தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு எடுத்து கொள்வதன் மூலம் மூட்டு வழியை சரி செய்யலாம்.
- எப்சம் உப்பில் அதிக அலர்ஜி மற்றும் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் மூட்டு வலி மற்றும் அசௌகிரயத்தை குறைகின்றது. இவை ஒரு வலிமைமிக்க வலி நிவாரணியாகும்.மூட்டு வலி போக ஒரு கைப்பிடி அளவு எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
- துளசி முடக்குவாதத்தை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. இது ஆன்டிஸ்பஸ்மோடிக் மற்றும் அல்ர்ஜி எதிர்ப்பு வினைகளை கொண்டுள்ளது. மூட்டு மற்றும் மூட்டு வலி தொடர்பான வழிகளை குறைப்பதில் இது உதவுகின்றது. தினமும் ஒரு முறை துளசி டி குடிப்பதன் வாயிலாக மூட்டு வழியை தவிர்க்கலாம்.
2.உடற்பயிற்சி:

மூட்டுகள் மற்றும் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவதற்காக உடற்பயிற்சி மற்றும் யோகா பயன்படுகிறது. மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியமானது. இவை மூட்டுகளின் சகிப்புத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு மற்றுமல்லாமல் வலியையும் குறைகின்றது. மூட்டு வலி மற்றும் மற்ற மூட்டு நிலைகளால் ஏற்படும் வலி மற்றும் விறைப்பை தடுக்க உடற்பயிற்சி உதவுகிறது.
மூட்டு வழியை குறைக்க காலை தூக்குதல், நீட்டுதல், சுழற்றுதல் மற்றும் உயர்த்துதல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். மேலும், தொடை நீட்சி, கிக் பாக்ஸ், உட்கார்ந்து எந்திருத்தல் மற்றும் நீட்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் மூட்டு வலியை குறைக்கலாம்.
3.எடை மேலாண்மை:
நம் உடலில் உள்ள அதிக எடை மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. திடீர் எடை இழப்பு மற்றும் எப்பொழுதுமே உடல் சோர்வு இருப்பதால் சில நேரங்களில் வீக்கம் மற்றும் மூட்டு வலி ஏற்படுகின்றன. நாம் தினசரி செயல்பாடுகளை செய்யும்போது இடுப்பு, முழங்கை, முதுகு மற்றும் காலில் உள்ள மூட்டுகள் உடலில் மொத்த எடையையும் தாங்குகின்றன. செயல்பாட்டின் தன்மை மற்றும் அதிக அழுத்தத்தை பொறுத்து உடலின் அழுத்தம் அதிகரிக்கின்றது. இதனால் மூட்டுகளில் தேய்மானம் குறைந்து மூட்டு வலி ஏற்படுகின்றது. ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலமே நம் மூட்டுகளின் சுமையை குறைக்க முடியும். எடை இழப்பு மூட்டுகளின் செயல்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தினசரி செயல்பாடுகளை குறைகிறது.
நம் தினமும் அன்றாடம் ஆரோக்கியமான உண்ணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகமாகவும் குறைவாகவும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். இதனால் மூட்டு வழியை தவிர்க்க முடியும்.
4.உடல் தோரணையை மாற்றுதல்:
சரியான தோரணையை நேர்மையாக உணர்வுபூரணமாக பராமரிப்பது முக்கியமானது. நம் நேராக நிற்கும்போது உடலின் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். பின்னர், ஒன்றையொன்று அழுத்தி மார்பு மற்றும் வயிறு வெளியே இருக்க வேண்டும். நம் உட்காரும்போது நம் மையப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
தூங்கும்போது ஒரு மெதுவான மெத்தையில் வானத்தை பார்த்தபடி தூங்குவது நல்லது.
பொதுவாகவே டிவி மற்றும் மடிக்கணினியை உபயோகிக்கும்போது எங்கேயும் சார்ந்து உட்காராமல் நேராக உட்கார வேண்டும்.
5.போதுமான அளவு தூக்கம்:
மூட்டுகளை மிக விரைவில் குணப்படுத்த தூக்கமே உதவுகின்றது. நமது உடலில் உள்ள தசைநார்கள், எலும்புகள் மற்றும் தசைகள் பொதுவாகவே பகலில் வேலை செய்வதில்லை. அதனாலே, அவற்றை மீட்க அனுமதிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. காயத்திற்கு ஒரு சோர்வான திசு விரைவில் பாதிக்கப்படுகிறது. ஆனால், நாம் நாள்தோரும் போதுமான அளவு தூங்குவதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் திசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டு வழியை எளிதில் தவிர்க்க முடிகிறது.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்