நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

உடல் உறுப்புகளிலே மிகவும் முக்கியமானது நுரையீரல். நுரையீரலால் மட்டுமே நம்மால் சுவாசிக்க முடிகிறது. ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இருந்து இறக்கும் வரையிலும் சுவாசம் என்பது இன்றியமையாதது. நுரையீரலின் வேலையே நமது உடலிற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றில் இருந்து உள்ளிழுத்து உடலிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுவது ஆகும். இதனால், நமது சுவாசம் சீராக நடைபெறுகிறது. இப்படி சுத்தமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் நன்றாக செயல்படுவதோடு நமது மனமும் உடலும் சீராக செயல்படுகிறது. நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சை உள்வாங்கி வெளியே விடுகிறோம். நுரையீரல் தான் இதயத்திற்கு ஒரு பாதுகாப்பானாக செயல்பட்டு அதிர்வுகளில் இருந்து இதயத்தை காப்பாத்துகிறது. மாறிவரும் காலநிலை மற்றும் வாழ்கை முறையினால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு சுவாச பிரச்சனைகள் நமக்கு தருகின்றது.

நுரையீரல் நோய்கள்:

நுரையீரலின் வெவ்வேறு பகுதிகளையும் அவற்றின் புரனியையும் பாதிப்பதே நுரையீரல் நோய்கள் எனப்படும். இவை எளிதில் நுரையீரலின் செயல்பாட்டை குறைக்கிறது. இந்த நோய்கள் பொதுவாக காற்று பாதை நோய்கள், நுரையீரல் திசு நோய்கள் மற்றும் நுரையீரல் சுழற்சி நோய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருசில நோய்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

  1. நுரையீரல் உயர் ரத்த அழுத்தம்: இது இதயத்தின் வலது பக்கத்தையும் நுரையீரல் தமனியையும் பாதிக்கும் நிலை ஆகும்.
  2. நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்: இந்த நோய் நுரையீரலில் காற்று ஓட்டம் தடைபடுவதால் உருவாகிறது.
  3. காசநோய்: இவை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயாகும்.
  4. நுரையீரல் வீக்கம்: நுரையீரலில் சிறிய ரத்த நாலங்களின் சுவர்கள் பாதிக்கப்படுவதையே நுரையீரல் வீக்கம் என்கிறோம்.
  5. நுரையீரல் தக்கையடைப்பு: கால்களில் ஏற்படும் ரத்த உறைவு உடைந்து ரத்த நாலங்கள் வழியாக பாய்ந்து நுரையீரல் தமனியை அடைக்கிறது. இதனால், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. நிமோனியா: நிமோனியா என்பது பாக்டீரியாவால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும். இவை சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் வரும்.
  6. கடுமையான சுவாச கோளாறு நோய்க்குறி: இவை உடலிற்கு ஆபத்தான நோய்களின் விளைவாக நுரையீரலுக்கு தீங்கு ஏற்படும்போது உருவாகிறது.
  7. நுரையீரல் புற்றுநோய்: இவை நுரையீரலின் எந்த பகுதியிலும் உருவாகிறது. இந்த புற்றுநோயின் விளைவாக காற்று பைகளுக்கு அருகில் கட்டிகள் தோன்றுகின்றன.
  8. ஆஸ்துமா: மூச்சு திணறலை ஏற்படுத்தும் சுவாச கோளாறு நோயை ஆஸ்துமா என்கின்றோம். இதன் அறிகுறிகளாக மாசு, ஒவ்வாமை போன்றவற்றை கூறலாம்.
  9. சிஸ்டிக் பைப்ரோசிஸ்: இது காற்றுப்பாதையில் ஒட்டும் மற்றும் தடித்த சளியால் அடைக்கப்படுவதற்கு காரணமாக உள்ளது. இது பரம்பரை பரம்பரையாக வரும் மரபணு நோய் ஆகும்.
  10. மூச்சுக்குழாய் அலர்ஜி: நுரையீரலில் இருந்து காற்றை எடுத்து செல்லும் குழாய்கள் மூச்சுகுழாயை வீக்கமடைய செய்வதால் இதனை மூச்சுக்குழாய் அலர்ஜி என்கின்றோம்.

நுரையீரல் நோயின் காரணங்கள்:

நுரையீரல் நோய்கள் வர பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் என பல விதமான காரணமாக உள்ளன. எந்தெந்த காரணங்கள் அதிக அளவில் நுரையீரல் நோயில் வருகின்றன என பார்க்கலாம்.

  • காற்று மாசு: நாம் சுவாசிக்கும் காற்றில் மாசுக்கள் மற்றும் தூசுக்கள் இருக்குமேயானால் அவை நமது உடலிற்கு உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கிறது. இதனால் ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்றவை நமக்கு வருகின்றன. புகை பிடித்தல்: நாம் புகைபிடிப்பது தான் நுரையீரல் நோய் வர முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்க்கு இவை முக்கிய காரணமாகும்.
  • ஒவ்வாமை: தூசிகள், நுண்ணுயிரிகள் மூலம் தூண்டப்படும் இவை நுரையீரலின் காற்றுப்பாதை மற்றும் காற்று பைகளை சுற்றியும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
  • ரேடான்: ரேடான் வாயுவால் ஏற்படும் கதிர்வீச்சின் காரணமாக நுரையீரல் செல்கள் பாதிக்கப்படுகிறது.
  • கல்நார்: நாம் அஸ்பெண்டஸ் இலைகளை தொடர்ந்து உட்கொள்ளுவதால் தொடர்ச்சியான நுரையீரல் நோய் ஏற்படுகிறது.

நுரையீரல் நோயின் அறிகுறிகள்:

  • நமது நுரையீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவை நமக்கு பல்வேறு அறிகுறிகள் ஏற்படுத்துகிறது.
  • அதிக அளவு சளி உற்பத்தி ஏற்படுவது முதல்கட்ட அறிகுறியாகும்.
  • எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபடாமல் எப்பொழுதும் சோர்வாகவே காணப்படுதல்.
  • அடிக்கடி சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
  • மார்பு வலி ஏற்பட்டு மார்பில் கனமாக இருத்தல் அல்லது இருக்கம் இருப்பது போல் உணர்வு மற்றும் குத்துவது போல வலி ஏற்படுதல்.
  • நம் மூச்சுக்காற்றை சுவாசிக்கும் பொழுது அசௌகரியம் அல்லது வலி ஏற்படுதல்.
  • நாம் சுவாசிக்கும் பொழுது போதுமான அளவு ஆக்ஸிஜன் பெற முடியாததால் மூச்சு திணறல் ஏற்படுதல்.
  • இரும்பும் பொழுது ரத்தம் வெளியேறுதல்.
  • அடிக்கடி வரும் இரும்லானது ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தல்.
  • ஒருசில நேரங்களில் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • காய்ச்சல் வருதல்.
  • தொடர்ச்சியான சுவாச தொற்றுநோய்கள் ஏற்படுதல்.
  • நமது தாடைகள் மற்றும் முதுகில் குடைச்சலுடன் வலி ஏற்படுதல்.
  • திடீரென உடல் எடை குறைந்து காணப்படுதல்.

நுரையீரல் நோயை தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

நம் உணவு பழக்கங்களில் ஒருசில மாற்றத்தை செய்வதன் மூலம் நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க முடியும். நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

  1. கற்பூரவள்ளி இலை: இதில் நுரையீரலை சுத்தப்படுத்தக்கூடிய பண்புகள் நிறைய உள்ளன. சில கற்பூரவள்ளி இலைகளை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு சிறிதளவு தேன் சேர்த்து குடிப்பது நுரையீரலுக்கு சிறந்தது.
  2. ஆப்பிள்: ஆப்பிளில் நிறைய அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால் சுவாச பிரச்சனைகளை தடுத்து நுரையீரலை ஊக்குவிக்கிறது. எனவே, ஆப்பிள் சாப்பிடுவதால் நுரையீரல் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  3. திப்பிலி: திப்பிலியில் பைபரின் எனும் பொருள் உள்ளது, இவை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. திப்பிலியை பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
  4. இஞ்சி: இஞ்சியானது நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை நீக்கவும் நுரையீரலின் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே, இஞ்சியை டீ அல்லது ஜுஸில் கலந்து குடிப்பதால் சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
  5. அதிமதுரம்: அதிமதுர பட்டையின் வேரில் டானின்கள், கிளைசிரைசின் உள்ளது. இவை, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடி மீட்டெடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
  6. பீட்ரூட்: பீட்ருட் சாப்பிடுவதால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இதிலுள்ள நைட்ரேட் சத்துக்கள் நுரையீரலின் செயல்பாட்டை எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட வைக்கிறது.
  7. கிரீன்டீ: கிரீன்டீயை குடிப்பதால் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதை குடிப்பதால் தூசினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளை குறைத்து நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
  8. ஆடாதொடை மூலிகை: ஒரு தேக்கரண்டியில் கால்வாசி அளவு ஆடாதோடை பொடி, சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் இருக்கும் சளியானது வெளியேறுவதோடு நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
  9. ஆப்பிள் சீடர் வினிகர்: சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் நுரையீரல் பிரச்சனைகளை நீக்கவும் இது பயன்படுகிறது. இது இயற்கையாகவே ஒரு நச்சு நீக்கியாக செயல்படுகிறது.
  10. ப்ரக்கோலி: ப்ரக்கோலியில் கரோட்டினாய்டுகள், பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நுரையீரல் சேதப்படுவதை தடுக்கிறது.
  11. முழு தானியங்கள்: நாம் உண்ணும் உணவில் முழு தானியங்களான முழு கோதுமை, பிரவுன் ரைஸ் ஆகியவை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது சுவாசமும் சீராகி நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கிறது.
  12. பூண்டு: நமது உடலிற்கு பூண்டு இயற்கையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மையுடையது. இது உடலிலுள்ள நச்சுக்கள், புற்றுநோய் செல்களை அளித்து நுரையீரல் சீராக செயல்பட செய்கிறது. நான்கு பல் பூண்டை வாரத்திற்கு மூன்று முறை உட்கொள்ளுவதால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
  13. கேரட் ஜூஸ்: கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள வைட்டமின் ஏ நுரையீரலின் செயல்பாட்டை எளிதாக்குவதோடு நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. எலுமிச்சை: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் நுரையீரல் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
  14. பெர்ரி பழங்கள்: பெர்ரி பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை நீக்கி நுரையீரலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  15. மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்: மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் அதிக அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது நுரையீரல் தொற்றுக்களை எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல் நுரையீரல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  16. தான்றிக்காய்: தான்றிக்காயில் பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு பண்புகளை பலப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து குடிப்பதால் நுரையீரலில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது.
  17. அன்னாசி: அன்னாசியில் ப்ரோமைலன் இருப்பதால் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனை அப்படியாகவோ அல்லது ஜூஸாகவோ சேர்த்துக்கொள்வதால் நுரையீரல் பிரச்னைகளின்றி வாழலாம்.
  18. நட்ஸ் மற்றும் விதைகள்: நுரையீரலிற்கு ஆரோக்கியத்தை தர இவை பெரிதும் உதவுகின்றன. முந்திரி, பாதம், பூசணி விதைகள், பிஸ்தா, வால்நட், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை நுரையீரலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றன. இதனால் சுவாச பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகின்றன. மஞ்சள்: மஞ்சளில் உள்ள இயற்கையான ஆண்டிபயாடிக் பண்புகள் நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிப்பதோடு நுரையீரல் செயல்பாட்டையும் சீராக செயல்பட உதவுகிறது.
  19. துளசி: துளசியில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் தொற்றுநோய்களை எதிர்த்து சுவாச மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

நுரையீரல் நோயை தடுக்க செய்ய வேண்டியவை:

  • புகைபிடிப்பதை முதலில் நிறுத்தி விட வேண்டும்.
  • மற்றவர்களிடம் இருந்து நமக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • பொறித்த அல்லது வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • ஆரஞ்சு பழம், கொய்யாப்பழம், கிவி, மாதுளம் பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • தூசி மற்றும் மாசி நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்பொழுது முகமூடி பயன்படுத்த வேண்டும்.
  • நம் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
  • பால், வெள்ளை ப்ரெட், சாக்லேட், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க ஒருசில பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக மூச்சு பயிற்சி செய்வது நுரையீரலுக்கு சிறந்தது.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *