Table of Contents
தலை வலியானது நமது தலையில் தாங்க முடியாத வலியை தருகிறது. தலைவலியை நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு கட்டத்தில் அனுபவித்து தான் ஆகவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தலைவலியானது பத்தில் எட்டு பேருக்கு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துத்துவதால் தலைவலியை புறக்கணிக்க முடிகிறது.
தலை வலியானது மற்ற நோய்களுக்கு ஒரு அறிகுறியாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமக்கு ஏற்படும் தலை வலியானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. தலை வலியானது வரும் நபரையும் அவரின் நடத்தையும் பொருத்து மாறுபடுகிறது.
தலை வலி:
நமது தலை அல்லது கழுத்து பகுதியோடு தொடர்புடைய எந்தவொரு இடத்திலும் ஏற்படுகிற வலி தலைவலி ஆகும். பெரும்பாலான தலை வலிகள் தீடீரெனவோ அல்லது படிப்படியாகவோ ஏற்படுகிறது. இவற்றில் பாதி உடலிற்கு எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. தலை வலியானது நமது வாழ்வில் லேசான அசௌகரியம் முதல் பலவீனமான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால், நம்மில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தலை வலியின் வகைகள்:
நமக்கு வரும் தலைவலிகள் பெரும்பாலானவை வேறுபட்டு காணப்படும். பல வகையான தலை வலிகள் வருகின்றன. அதில் அதிக அளவு வரக்கூடிய தலைவலிகளை பற்றி பார்க்கலாம்.
ஒற்றை தலைவலி: ஒற்றை தலைவலி வருவதற்கான காரணங்கள் ஏதுமில்லை. இது ஒரு நரம்பியல் நிலையை குறிக்கிறது. நம் உடல் சோர்வாக இருப்பதாலும் தூக்கமின்மையால் இவை ஏற்படுகின்றன.
டென்ஷன் தலைவலி: இவை முகம் மற்றும் கழுத்து தசைகள் கஷ்டப்படுவதால் ஏற்படுகின்றன. இவை பதற்றத்தை உருவாக்கி நீண்ட நாட்கள் நீடித்து காணப்படும். இவை சங்கடத்தையும் அசௌகரியத்தையும் தரும்.
கொத்து தலைவலி: கொத்து தலைவலி அரிதாகவே வருகின்றன. ஆனால், உடலில் ஏதேனும் ஒரு பகுதியை பாதிப்பதோடு மோசமான விளைவை தருகிறது.
சைனஸ் தலைவலி: சைனஸ் தொற்று காரணமாகவே இந்த தலைவலி ஏற்பாருக்கிறது. இவை சளி மற்றும் காய்ச்சல் இருபவவர்களை எளிதில் உண்டாக்குகிறது.
நீரிழப்பு தலைவலி: நம் உடல் அதிக அளவு தண்ணீரை இழப்பதால் நீரிழப்பு தலைவலி ஏற்படுகிறது. இதனால் நமக்கு தலையில் வலி தண்ணீர் தாகம் ஆகியவை ஏற்படும்.
மீண்டும் வரும் தலைவலி: நம் தலைவலியை குறைக்க வலி நிவாரணிகளை எடுத்து கொண்டால் அவ்வப்போது தலைவலி குறைந்தாலும் அதை பயன்படுத்துவதை நிறுத்திய பின்னர் தலைவலி திரும்ப வருகிறது.
க்லஸ்ட்டர் ஹெடெஸ்: இந்த தலைவலி பொதுவாக அனைவரிடமும் காணப்படும். இவை ஏதேனும் ஒரு பகுதியிலே பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகை தலை வலியானது கண்ணை சுற்றிய கண் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
தலை வலிக்கான காரணங்கள்:
தலைவலியானது பல்வேறு காரணங்கள் மற்றும் தூண்டுதல்களால் ஏற்படுகிறது.
மனஅழுத்தம்: மனஅழுத்தம் கூட தலை வலியை உண்டாக்குகிறது. மனஅழுத்தத்தால் வரும் பதட்டம் கூட ஒரு காரணமாகும்.
நீரிழப்பு: நமது உடலிற்கு போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பதும் தலை வலிக்கான காரணமாகும்.
தவறான உணவு பழக்கங்கள்: நம் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்,சில பாலாடை கட்டிகள் போன்ற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதாலும் தலைவலி வருகிறது.
சைனஸ் பிரச்சனை: சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் தலைவலிக்கு ஆலாகின்றனர். தலை வலி ஏற்பட சைனஸால் ஏற்படும் அலர்ஜி மற்றும் தொற்றே காரணம்.
தசை பதற்றம்: நம் உடலில் உள்ள தசைகள், தோள்பட்டைன் மற்றும் தலையில் உச்சந்தலையில் ஏற்படும் வலியால் கூட தலைவலி வருகிறது.
கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்: அதிக நேரம் கண்ணிற்கு வெளிச்சம் தரக்கூடிய போன் மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து பயன்படுத்துதல் கண்ணில் பாதிப்பு ஏற்படுகிறது. இது நேரடியாக தலை வழியை உண்டாக்கும். அதேபோல் நம் கண்ணில் எதாவது பிரச்னை தொடர்ந்து இருந்தால் தலை வலி ஏற்படும்.
ஹார்மோன் மாற்றங்கள்: பொதுவாகவே அனைவருக்குமே ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றனர். அதிலும் பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பம் போன்ற நேரத்தில் தலை வலி ஏற்படுகிறது.
மோசமான தோரணை: நாம் நீண்ட நேரம் ஒரே இடத்தில நின்று அல்லது உட்கார்ந்து வேலை செய்வதால் கூட தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் பாதிப்படைந்து தலைவலி ஏற்படுகிறது.
மது: மது அருந்துபவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. ஆல்கஹால் உடலில் ரத்த நாளங்கள் விரிவுபடுத்திவதால் ரத்தம் அதிக அளவில் பாய்கிறது. இதனால் மூலையில் திடீரென பதற்றம் ஏற்பட்டு தலைவலிக்கு வழிவகுக்கும்.
தூக்கம்: நம் குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது தூங்குவது உடலிற்கு நல்லது. அப்படி இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது.
வானிலை மாற்றம்: வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தீவிர வானிலை நிலைமைகளாலும் அதனை தாங்க முடியாமல் தலைவலி ஏற்படுகிறது.
தலை வலியை வீட்டிலேயே சரிசெய்தல்:
நம் அனைவருமே இன்றைய காலத்தில் தலை வலி வந்த உடனே மாத்திரைகளையோ வலி நிவாரணிகளையே விரும்புகின்றோம். ஆனால், நம்மால் ஆரோக்கியமாக வீட்டு வைத்தியத்தின் மூலமே தலை வலியை எந்த வித பக்க விளைவும் இல்லாமல் சரிசெய்ய முடியும். எனவே, தலை வலியை சரிசெய்ய சில எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.
எள்ளு: எள்ளு விதைகளில் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் ஈஸ்ட்ரோஜன் அளவு சரி செய்யப்படுகிறது. எனவே, தலைவலி குறைகிறது. அதுவும் இது மாதவிடாய் காலங்களில் மிகவும் உதவியாக இருக்கிறது. ஏனெனில், எள்ளு விதைகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தலைவலியை குறைகிறது.
சந்தன பொடி: சந்தனத்தை எடுத்து அதனை மை போன்று நன்கு அரைத்து நெற்றியின் மீது பற்று போடுவதால் தலைவலி சரியாகும்.
இஞ்சி: இஞ்சியில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. இது சளியால் ஏற்படும் தலைவலியை குறைக்க பயன்படுகிறது.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சாப்பிடுவதன் மூலம் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலைப்படுத்தப்படும்.இதனால், ரத்த குழாய்கள் தவிர்க்கப்பட்டு தலைவலி குறைகிறது.
ரோஸ்மெரி எண்ணெய்: ரோஸ்மெரி எண்ணையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, தலைக்கு மசாஜ் செய்யும் எண்ணெயுடன் ஒரு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய் விட்டு நன்கு மசாஜ் செய்வதன் மூலம் தலை வலி குறைகிறது.
தயிர்: நம் உடலில் சில நேரங்களில் கால்சியம் குறைபாடு காரணமாக மூளையில் தலைவலி வரக்கூடும். எனவே கால்சியம் அதிகமுள்ள கொழுப்பு அல்லாத உணவுகளான சர்க்கரை சேர்க்கப்படாத தயிர், யோகர்ட் போன்றவை குடலிற்கு நன்மை அளிக்கும் ப்ரோபயாடிக் ஆகியவை தலைவலியை குறைக்கிறது.
பசலை கீரை: பசலைக்கீரையில் மெக்னீசியம் சக்தி நிறைய உள்ளது. இது ஒற்றை தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. தலை வலியானது தலையை உடைக்கும் அளவிற்கு இருந்தாலும் பசலை கீரை வலியை சரிசெய்கிறது.
ஆளி விதைகள்: இது ஒமேகா 3 சக்தியின் ஆதாரமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் ஆளி விதைகளை எடுத்து கொள்வதால் தலைவலியால் ஏற்படும் வலியினை குறைக்க முடிகிறது.
குறைந்த கொழுப்புள்ள பால்: நீர்ச்சத்து காரணமாக தலைவலி ஏற்படும் குறைந்த கொழுப்புள்ள பாலை குடிப்பதால் தலைவலி சரியாகிவிடும்.
கொழுப்புள்ள மீன்கள்: கொழுப்பு மீன்களில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் மூலையில் உள்ள அலர்ஜி குறைகிறது. ஒரு சில மீன் வகைகள் தலைவலியை குறைக்க பெரிதும் உதவுகிறது.
வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல்:
- தலை வலியானது உடலிற்கு எரிச்சலூட்டுவதாகும் அன்றாட செயல்பாடுகளை சீர்குலைப்பதாகவும் உள்ளது. தலை வலியிலிருந்து வெளிப்பட சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
- தியானம், யோகா போன்ற தளர்வு செயல்பாடுகளை அடிக்கடி செய்வதம் மூலம் மனஅழுத்தம் குறைந்து தலை வலி சரிசெய்ய முடியும்.
- சரியான தூக்க மேலாண்மையை பின்பற்றவும். அதாவது, அனைத்து நாளும் ஒரே நேரத்தில் இரவு படுத்து தூங்கி காலையில் அதே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். நாம் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்கும்போது தலை வலி ஏற்படும். எனவே தினசரி 8 மணி நேரம் தூங்குவது நல்லது.
- தலை வலி அதிகமாக இருக்கும்போது வெந்நீரை கொண்டு தலையிலும் கழுத்திலும் ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்கும். மேலும் வெந்நீரால் குளிப்பதன் மூலம் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
- மனஅழுத்தத்தை குறைப்பதன் மூலம் தலைவலியை குறைக்க முடியும். இதனால் மூலையானது சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
தலைவலியை நீக்க குளிர் அல்லது சூடான நீரால் ஒத்தடம் குடுப்பது நல்லது. - இந்த தலைவலியை குறைக்க நெற்றியிலோ அல்லது கழுத்திலோ குளிர்ச்சியான அழுத்தத்தை பயன்படுத்துவதால் தலைவலி குறியாகிறது. அதேபோல் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக நெரிசலை தவிர்க்கவும் சைனஸ் தலைவலியை குறைக்கவும் சூடான அழுத்தம் பயன்படுகிறது.
- எப்பொழுதும் ஒரே இடத்தில அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது அல்லது ஒரே இடத்தில நிறைய நேரம் மடிக்கணினி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதன்மூலம் சரியான தோரணையை பெறுவதோடு தசைகளை நீட்டவும் ஓய்வெடுக்கவும் வைக்கிறது.
- உடலிற்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. எனவே தண்ணீரை நேரடியாகவோ அல்லது ஏதாவது ஒரு பானமாகவோ எடுத்து கொள்ளலாம்.
- தலைவலியை போக்க எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
- நாம் வழக்கமாக உடற்பயிற்சி, உடல் செயல்பாடுகளை செய்வதாலும் மனஅழுத்தம் குறைவதோடு தலைவலியின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைக்க முடிகிறது. எனவே, குறைந்த தாக்கத்தை உடலிற்கு ஏற்படுத்தும் பயிற்சிகளை செய்வது தலைவலியை குறைக்க உதவும்.
- நம் தலைவலியை போக்க தலை, கழுத்து மற்றும் தோள்கள் போன்ற பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் கூட தலைவலியை குறைக்கலாம்.
- தலை வலியை குறைக்க குறைந்த அளவு காபி குடிப்பது சிறந்தது. தலை வலியானது ஒவ்வொரு நபரிற்கும் காபி குடிப்பதால் குறையவோ அல்லது வலியை அப்படியே இருக்கவோ செய்கிறது.
- அக்குப்பஞ்சர் ஒரு பழங்கால முறையாகும். நமது கட்டை விரலுக்கும் ஆல்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளுக்கு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் தலைவலியை குறைக்கலாம்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.