Table of Contents
சிறுநீரக பாதையில் அளவுக்கு அதிகமான அளவு யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் தேங்குவதால் தான் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. நம் uஅன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமும் மோசமான பழக்க வழக்கத்தினாலும் கூட கற்கள் உண்டாகின்றன. இந்த கற்கள் அதிக அளவு வலியை உண்டாக்குகின்றது.
கிட்னி கல் கரைய சித்த மருத்துவம் என்பது சிலருக்கு இந்த கற்களை கரைய உதவும்.அறிகுறிகள் இன்றி வரும் இந்த கற்கள் இறுதியில் சிறுநீரகத்தையே செயலிழக்காமல் கூட போக செய்யும் அபாயம் கொண்டவை. அதேபோல், இவைகள் ஒரு முறை வந்துவிட்டால் கடைசி வரை என்னதான் குணப்படுத்தினாலும் மறுபடியும் நீடிக்க வாய்ப்புள்ளது. பொதுவாகவே, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கற்கள் அதிக அளவு கெடுதலை கொடுக்கிறது. ஆனால் வெளியேறும் சிறுநீர் சீராக போகுமேயானால் கெடுதலை விளைவிக்காது.
சிறுநீரக கல்லின் வகைகள்:
சிறுநீரக கற்களில் 4 வகைகள் உள்ளது.
- யூரிக் அமிலக் கற்கள்: மரபணுக்க காரணிகளே யூரிக் அமில கற்களுக்கு காரணமாகிறது. அதிக புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது ஒரு காரணமாக உள்ளது.
- கால்சியம் ஆக்சலேட் கற்கள்: ஆக்சலேட் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படுவது ஆகும். உணவில் வைட்டமின் டி அளவிற்கு அதிகமான அளவு இருப்பதாலும் கூட வளர்ச்சிதை மாற்றத்தினாலும் கற்கள் உருவாகின்றது. இந்த கற்கள் உருவாக முக்கிய காரணங்கள் கால்சியம் குறைபாடு மற்றும் நீரிழப்பே ஆகும்.
- சிஸ்டைன் கற்கள்: இவை பரம்பரை வழியே வருகின்றன மற்றும் மிகவும் அரிதானவையே. சிஸ்டைன் கற்கள் இருப்பதாய் கண்டறிந்தால் இவை வாழ்நாளில் முழுவதுமே இருக்கும் நிலை ஆகும். இவற்றை முழுவதுமாக சரிசெய்ய முடியாது. அவ்வப்போது சிகிச்சை எடுத்து பலனை பெறலாம்.
- ஸ்ட்ரூவைட் கற்கள்: இவை பொதுவான தொற்று அல்ல. சிறுநீராக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றால் இந்த கற்கள் ஏற்படுகிறது.
சிறுநீரக கல் எதனால் வருகிறது:
- சிறுநீரகம் உடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள சில தாதுக்களையும் உப்புக்களையும் வெளியேற்ற போதுமான திரவம் இல்லாததே கிட்னி கல் உருவாக காரணமாகிறது. அதாவது சிஸ்டைன், சந்தைன், யூரிக் அமிலம், ஆக்சலேட், கால்சியம், பாஸ்படே ஆகிய பொருட்கள் அப்படியே படிகமாகி கடினமானதாக மாறுகின்றது. இது சில சமயங்களில் கடலை பருப்பு அளவில் அல்லது அதையும் விட பெரியதாக மாறுவதையே சிறுநீரக கற்கள் என்கிறோம்.
- பொதுவாகவே சிறுநீரக கற்கள் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே வருகின்றன. அதிலும் குறிப்பாக 30 வயதிற்கு மேல் அதிகமாக வருகிறது. பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிக அளவில் சிறுநீரக கற்கள் வருகின்றது. ஏனெனில், பெண்களில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிறுநீரக கற்களை உருவாக்கும் தன்மையை குறைக்கிறது.
- சிருநீரக கல் வர காரணம் என்று சொல்ல ஒன்றுமில்லை. பல ஆபத்தான காராணிகளை அடிப்படையாக கொண்டே சிருநீராக கல் உருவாகிறது.
- பொதுவாகவே வெயில் காலங்களில் குறைந்த அளவு தண்ணீர் பருகுவதால் வெயிலின் தாக்கத்தால் பருகும் தண்ணீர் வியர்வை வழியாக விரைவில் வெளிவருகிறது. இதனால் சிறுநீரக போக்கு குறைந்து சிறுநீரகம் வரட்சியாக காணப்படுகிறது.
- வெப்பத்தில் வேலை செய்யும் சுற்றுச்சூழல் உள்ளவர்கள் தேவைக்கேற்ப நீர் அருந்தாமல் விடுபவர்களுகு சிறுநீரக கல் வர அதிக வாய்ப்புள்ளது. உதாரணமாக, கட்டுமான பணியில் வேலை செய்பவர்கள் மற்றும் அடுப்படியில் ரொம்ப நேரம் வேலை செய்பவர்கள்.
- உடல் எடை அதிகரிப்பதும் கிட்னி கல் உருவாக காரணமாகும். பரம்பரையில் எவருக்கேனும் இந்த பாதிப்பு இருந்திருந்தால் சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு உள்ளது.
நாம் உண்ணும் உணவு முறையினாலும் கிட்னி கல் வருகிறது. உண்ணும் உணவில் அதிக அளவு ஆக்சலேட், யூரிக் அமிலம் மற்றும் அதிக அளவு உப்புக்களை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கல் அறிகுறி:
- இதற்கான அறிகுறிகள் கல்லின் அளவு, உருவம் மற்றும் வளரும் இடம் என அனைத்தயும் பொறுத்து வேறுபடுகிறது. சிறுநீரக கற்களின் ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு அறிகுறிகளும் தென்படாது. கற்கள் நகரும்போதே அறிகுறிகள் தென்படுகின்றன. இல்லையெனில், இவை எந்தவித வலியையும் கொடுப்பதில்லை.
- நாம் பரிசோதனை செய்யும்போதே கற்கள் கண்டறியப்படுகிறது. ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது மட்டுமே தான் கற்கள் இருப்பது தெரியவரும். இதன் அறிகுறிகளாக நிறைய உடல் உபாதைகள் வருகின்றது.
- அவை சிறுநீர் சிவப்பு, பழுப்பு என நிறமுடையதாக வரும். பின்னர், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். வரும் சிறுநீர் குறைந்த அளவாகவும் ஒரு விசித்திறமான வாடையும் கழிக்கும்போது வலியையும் கொடுக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்து போதல்.
- இதனால் அடிவயிற்றில் மற்றும் முதுகுத்தண்டில் வலி தீவிரமாக ஏற்படும். இந்த வலியானது ஒவ்வொரு இடத்தை பொருத்தும் வலியும் அறிகுறிகள் மாறுபடும். வருகின்ற வலிமானது ஊமை வலி போல் இருக்கலாம். அதாவது திடீரெனெ தொடங்கி பொறுக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.
- எங்கு கல் உருவாகியுள்ளதோ அதற்கு பக்கத்திலேயே வயிற்றில் வலி ஏற்படும். அவ்வப்போது காய்ச்சல் மற்றும் வாந்தி வரும்.
சிறுநீரக கல் | கிட்னி கல் கரைய சித்த மருத்துவம் :
சிறுநீரக கற்களை வீட்டிலேயே சரிசெய்ய முடியும். அதாவது, கற்கள் அளவில் பெரியதாகிவிட்டால் அவற்றை வீட்டிலேயே கரைப்பது சாத்தியமற்றது. அவற்றிற்கு மருத்துவரையே அணுக வேண்டும். ஆனால், கற்கள் அளவில் சிறியதாக இருந்தால் வீட்டிலேயே நம் உணவு பழக்கங்களையும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை செய்வதால் சரிசெய்ய முடியும். அதாவது கற்களின் அளவு 5மில்லி மீட்டர் இருந்தால் மட்டுமே வீட்டிலேயே சரிசெய்ய முடியும்.

- உணவு பழக்கத்தில் மாற்றம்:
- ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, துளசி, பார்லி ஆகியவற்றை நன்கு அரைத்து கூலாக குடிக்கலாம். இவை ,உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- அனைத்திலும் சிறந்தது வாழைத்தண்டில் உள்ள தண்ணீர். இதனை, வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலனை விரைவில் குடுக்கும்.
- பழங்களில் அதிக அளவு நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த பழங்களை உண்ணலாம். வெள்ளரிக்காய், சொரைக்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவும்.
- அசைவ உணவுகளான மீன் இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை மிக குறைந்த அளவில் எடுத்துகலாம்.
- அதேபோல், முந்திரி, பாதம், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிடுவதை குறைத்து கொள்ளவேண்டும்.
- அதிக அளவு பருப்பு வகை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட், பீன்ஸ் வகைகள், முட்டைகோஸ், கீரைகள், கடுகு கீரைகள், பருப்பு, சோயா பொருட்கள், பீன்ஸ், தயிர், விதைகள் ஆகியவையும் சேர்ப்பதால் சிறுநீரக கற்களை குறைகின்றன.
- நாம் உண்ணும் உணவு சரிவிகித அளவிலும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் எடுத்து கொள்ளவும். மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உண்பதால் குடலில் ஆக்சலேட் பிணைப்பு ஏற்பட்டு சிறுநீரகங்களால் குறைவாக உறிஞ்சப்படும்.
- கிட்னி பீன்ஸ் கற்களை வெளியேற்ற உதவுகிறது. ஏனெனில், இதில் அதிக அளவு வைட்டமின் பி, நார்ச்சத்துக்கள் உள்ளது.சிறுநீரக கற்கள் சிறுநீர் வழியாகவே வெளியேறுகின்றன.
நீரேற்றமுடன் இருத்தல்:
நாள் ஒன்றிற்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரானது பருக வேண்டும். கற்கள் உருவாவதை முன்கூட்டியே தடுக்க இதுவே முக்கியமானதாகும். கோடை காலங்களில் அளவிற்கும் அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதற்காக அளவிற்கு அதிகமா 5 மேல் தண்ணீர் அருந்துவது தீய விளைவையே ஏற்படுத்து. எனவே, போதிய அளவு தண்ணீரை பருவ வேண்டும்.
சிறுநீரக கல் வராமல் இருக்க கீழே உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் :

- ஆக்சலேட் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஆப்பிள், அன்னாசி ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
- சிறுநீரக கல் இருக்குமேயானால் சோடியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ள முள்ளங்கி, கேரட், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை தவிர்க்கவும்.
- அதிக அளவு பியூரின் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- உப்பின் பயன்பாட்டை குறைத்து கொள்வது மிக நல்லது.
- சாக்லேட், கேக் போன்ற இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- அடிக்கடி குடிக்கும் பானங்களில் சர்க்கைரையின் அளவை குறைக்க வேண்டும்.
- அதிக அளவு உப்பை உணவில் சேர்க்க கூடாது. ஒரு நாளைக்கு அதிக அளவாக 5மிகி உப்பையே சாப்பிட வேண்டும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.