Table of Contents
நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது. ‘நீரின்று அமையாது உலகு’ என்று வள்ளுவர் கூறியது முற்றிலும் உண்மையே. தண்ணீர் இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது. ஒரு உயிர் வாழ அடிப்படை ஆதாரமே தண்ணீர் தான்.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணற்றவை, எனவே நாம் பருகும் நீரானது மூன்று அணுக்களால் ஆனது. இவை இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒன்று ஆக்சிஜன் அணுவால் ஆனது. நீரானது வேதியல் முறையில் H2O என அழைக்கப்படுகிறது
நம் உடலானது திறம்பட செயல்பட தண்ணீர் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாக செயல்படுகிறது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது. நம் உடலில் உள்ள தசைகளில் 70% தண்ணீரும் மூளையானது 90% தண்ணீராலும் ரத்தமானது 83% தண்ணீராலும் உருவாகின்றது. அதிலும், குறிப்பாக செரிமான அமைப்பு, இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றிற்கு தண்ணீரானது மிக முக்கியமாக செயல்படுகிறது. தண்ணீரானது எந்தவொரு மனமும் சுவையும் நிறமும் இல்லாமல் வெளிப்படையாக காணப்படுகிறது.
நாம் அனைவரும் உணவிற்கு காட்டும் அக்கறையை குடிக்கும் தண்ணீருக்கு காட்டுவதில்லை. உணவு இல்லாவிட்டாலும் கூட கொஞ்ச நாட்கள் நம்மால் வாழ முடியும். ஆனால், தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நம்மால் வாழவே முடியாது. நம் உடலிற்கு தேவையான அளவு தண்ணீரை குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது.
நம்மில் பலர் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது தெரியாமல் மிக குறைந்த அளவே தண்ணீர் பருகுகின்றனர். இன்னும் ஒரு சிலர் அதிக நேரம் வேலையில் கவனம் செலுத்துவதிலும் தண்ணீர் பருக நேரம் கிடைக்காமல் போகிறது என கூறுகின்றனர் .
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நம்ப முடியாத உண்மை என்னவென்றால் தண்ணீர் குடிப்பதால் பல நோய்களை நம்மால் தடுக்க முடிகிறது. இந்த காரணத்தினாலே மருத்துவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதையே அனைவருக்கும் பரிந்துரைக்கின்றன. நம் அனைவரும் உடலின் நீரின் அளவு, வயது, உடல் எடை ஆகியவற்றிக்கு உகந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
நம் உடலில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கிறதா என்பதை நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் அளவையும் நிறத்தையும் வைத்து கண்டுகொள்ளலாம். உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரானது குறைவாகவும் தெளிவில்லாமலும் மங்கலாகவும் அல்லது பழுப்பு நிறமாக இருந்தால் உடலில் நீரேற்றம் குறைவாகவே உள்ளது என அர்த்தம். எனவே, அவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீறாவது குடிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லுதல், வெளியே பயணம் செய்தல் ஆகிய காரணங்களாலும் தண்ணீர் குடிப்பது குறைந்து போகிறது.
தண்ணீர் குடிப்பதற்கென நேரம் ஒதுக்கி ஒரே தடவையே அதிக அளவு குடிக்காமல் கொஞ்ச கொஞ்சமாக குடிப்பது நல்லது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் நாள் ஒன்றிற்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம்.
எப்பொழுதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்:

தண்ணீரை குடிப்பது உடலிற்கு நல்லதை தரும் என்றாலும் ஒரு சில நேரங்களில் எப்படி தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை நம் தெரிந்திருக்க வேண்டும்.
காலை எழுந்தவுடன்: நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் பல் விளக்கிய பிறகு ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது மற்றும் நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஏனெனில், இரவு முழுவதும் தூங்குவதால் காலையில் எழுந்த உடனே தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்தை தரும்.
சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும்: நம் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். ஏனெனில், நாம் குடிக்கும் தண்ணீரானது வயிற்றை நிரப்பி பசியை குறைத்து உண்ணும் உணவின் அளவை குறைக்க செய்யும்.
அதேபோல், சாப்பிட்ட உடனே தண்ணீர் பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நம் சாப்பிட உணவானது இன்னும் செரிமானமாகாமல் குடலில் கொஞ்சம் தங்கியிருக்கும். உடனே தண்ணீர் பருகுவதால் அவை அப்படியே அடித்து செல்கின்றது செரிமானமாகாமலே. எனவே, உணவு சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் பருக வேண்டும்.
உடற்ப்பயிற்சி செய்யும் முன்னரும் பின்னரும்: தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் அப்படியே பயிற்சி செய்வதை தவிர்க்கவும். ஏனெனில், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடல் சோர்வாக காணப்படும். எனவே, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து பயிற்சியை தொடங்கலாம். பயிற்சியின் இடையில் குறைந்த அளவே தண்ணீர் பருக வேண்டும்.
அதேபோல் பயிற்சி முடிந்த உடனே தண்ணீர் பருகுவதை தவிர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் பருக வேண்டும் அத்தோடு வேக வேகமாக குடிக்காமல் பொறுமையாக குடிப்பது நல்லது.
தலைவலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது தண்ணீர் குடிக்கலாம்.
இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
தண்ணீரை குடிப்பதால் நம் உடல் எந்தவொரு நோயும் இல்லாமல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

வெந்நீரை குடிப்பதால்: தண்ணீரை அப்படியே குடிக்காமல் சிறிது நேரம் சூடாக்கி வெதுவெதுப்பாக குடிப்பது இன்னுமே உடலிற்கு நல்ல பலனை கொடுக்கும். அதிலும், காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில் வெந்நீரை குடித்து வந்தால் உடலில் செரிமான மண்டலத்திற்கு பல நன்மைகளை விளைவிக்கும்.
வெந்நீரை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதனால், மலச்சிக்கல் இன்றி நிம்மதியாக வாழலாம். அதேபோல், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குல் வைத்திருக்கவும் உடல் எடையை குறைக்கவும் வெந்நீர் பயன்படுகிறது. வெந்நீர் குடிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளையும் குறைகிறது.
உடல் எடையை குறைப்பதற்கு: தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் மற்றும் எடையை சீர்படுத்தும் என்று சொல்வது ஆச்சர்யமே.நாம் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்னரே தண்ணீர் குடிப்பதால் பசியினை கட்டுப்படுத்தி உணவை குறைவாக சாப்பிட முடியும். இதனால் செரிமானமும் சீக்கிரமாக நடைபெறும்.
நம் உடல் எடைக்கு தகுந்த அளவு தண்ணீர் பருகுவது மிகவும் நல்லது. அதாவது 20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் என கணக்கு போட்டு நாம் எத்தனை கிலோ எடை உள்ளோமோ அதற்கேற்ப தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும். அதுவும் சுடுதண்ணீர் குடிப்பது உடல் எடை இழப்பிற்கு மிக நல்லது.
சரும பராமரிப்பு: நமது சருமத்தில் உள்ள செல்களானது போதிய தண்ணீர் இல்லாததால் வாடிப்போய் சுருங்கி காணப்படுகிறது. நீரிழப்பினால் நுண்ணிய கோடுகள் உருவாகி சருமம் வயதானது போல் தோற்றமளிக்கும். ஆனால், நம் உடலிற்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தால் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதன் விளைவாக சருமத்தில் உள்ள நுண்ணிய கோடுகள் குறைந்து இளமையாக இருப்போம். இதுமட்டுமல்லாமல் முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றவுக் தண்ணீர் உதவுகிறது.
மூட்டு உராய்வை குறைகிறது: நம் உடலின் அனைத்து பாகங்களையும் ஒன்றிணைப்பது மூட்டுகள் ஆகும். இவை நம் உடல் பாகங்களில் முக்கியமான ஒன்றாகும். எனவே மூட்டுகள் திறம்பட செயல்படவும் மூட்டுகளுக்கு இடையே ஏற்படும் உராய்வை தடுக்கவும் தண்ணீர் பருகுவது அவசியம். இல்லையெனில், மூட்டு வலிகள் ஏற்படும்.
முடி உதிர்வை குறைக்கும்: தண்ணீர் குடிப்பதால் முடி உதிர்வது குறைகிறது. ஏனெனில், நீரானது முக்கிய வைட்டமின்களை முடியின் வேரிற்கு கொண்டு வந்து முழு முடியையும் ஈரபதமாக்குகிறது. இதனால், முடி உதிர்வது குறைவதோடு வளரவும் செய்கிறது.
நெஞ்செரிச்சலை குறைகிறது: நம் உணவு சாப்பிட்ட பிறகு நமது வயிறானது உணவை செரிக்க நொதிகளை உருவாக்கும். இதனால், வயிற்றில் அமிலத்தன்மை அதிக அளவு உற்பத்தியாகி அடிவயிற்றை பாதிக்கும். நாம் தண்ணீர் அடிக்கடி குடிப்பதால் இந்த அமிலத்தன்மை குறைந்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
கழிவை வெளியேற்றுகிறது: நம் உண்ணும் உணவு மூலமாகவும் மாசுக்களாலும் உடலில் மில்லியன் கணக்கில் கழிவுகள் சேருகின்றன. இதனை முறையாக வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.
உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது: நமது உடலின் அனைத்து உறுப்புகளையும் சுறுசுறுப்பாக வைக்க ஆற்றலை தருவதே தண்ணீர் ஆகும். ஆற்றலை பராமரிக்க தண்ணீர் முதன்மை காரணியாகும். நம் உடலிற்கு எனர்ஜி வேண்டுமென்றால் தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.
மனஅழுத்தம் குறைகிறது: நம் சரியான விகிதத்தில் தண்ணீரை தினமும் பருகுவதால் மனஅழுத்தம் குறைகிறது. அதாவது உடலிற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதால் உடலிலுள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள்கள் படிப்படியாக குறைகின்றது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் இல்லாவிட்டாலே நாம் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்போம்.
சிறுநீரகங்கள் நன்கு செயல்படும்: சிறுநீரகமானது நமது உடலில் நீர்மட்டத்தை பராமரித்தல், ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. நம் நல்ல நீரேற்றத்துடன் இருக்கும்போது சிறுநீரக கற்கள் உருவாகாது. ஏனெனில் தண்ணீரானது உப்பு மற்றும் தாதுக்களை நீர்த்து போவதே காரணமாகும்.
இதயத்திற்கு நல்லது: இதயமானது செயல்பட நம் உடலில் போதிய தண்ணீர் இருப்பது அவசியம். ஏனெனில், நாம் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவில்லை என்றால் இதயம் பம்ப் செய்ய சிறமப்படுகிறது. இதனால், இதயத்துடிப்பு அதிகரிப்பதோடு ரத்த அழுத்தமும் குறையும். ஆகையால் நம் உடலிற்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
சோர்வை நீக்கும்: நாம் சோர்வாக உணரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நேரத்திலும் கூட உடல் சோர்வாக காணப்படும். இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலே உடல் சுறுசுறுப்பாகும்.
தசைப்பிடிப்பதி தடுக்கும்: நமது உடலில் உள்ள தசையானது 90% நீரால் ஆனது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் தசைகளானது பிடித்து விடும். ஏனெனில், நீரிற்கு பதிலாக தசைகளில் கழிவுகள் சேர்ந்து விடும். இதனை வெளியேற்ற தண்ணீர் அவசியம்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்: நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க தண்ணீர் மிகவும் உதவுகிறது.
முறையான குடலியக்கம்: இன்றைய மாறிவரும் காலத்தில் நிறைய பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வளககத்தைவிட அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில், தண்ணீரானது குடலியக்கத்தை சீராக வைக்க பெரிதும் உதவுகிறது.
உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது: நம் உடலிற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. சரியாக தண்ணீர் அருகாமல் விட்டால் உடலின் வெப்பமானது அதிகரித்து ஆபத்தை விளைவிக்கும்.
தலைவலியை மற்றும் ஜலதோஷத்தை குறைக்கும்: தலைவலிக்கு நீரேற்றம் குறைவும் ஒரு காரணமாகும். நம் உடலிற்கு நிறைவான அளவு தண்ணீர் குடிப்பதால் தலைவலியும் ஜலதோஷமும் குணமாகும். ஏனெனில், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தண்ணீரானது கிருமிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.