தொண்டை வலி வந்தால் கடும் வேதனையையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும். தொண்டை வலியானது பொதுவாகவே பாக்டீரியா தொற்று அல்லது வைரஸ் தொற்றால், குரல்வளை தொண்டையின் பின்புறம் உள்ள குழாயில், நமது குரல் பெட்டிக்கும் டான்சில்களுக்கும் இடையில் நுழைகிறது. எனவே, தொண்டையில் வீக்கம் ஏற்படுவதோடு வலியும் ஏற்பட்டு அசௌகரியத்தை நமக்கு கொடுக்கிறது. டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்புறத்தில் உள்ள இரண்டு திசுக்கள் ஆகும்.
Table of Contents
இவை தான் சுவாசப்பாதையில் நுழைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை கொள்கிறது. இது தொண்டையில் எற்படும் அலர்ஜியால் வருவதால் தொண்டை அலர்ஜி என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்து வயதினருக்கும் பொதுவாக ஏற்படுகிறது. தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த வலியானது குறிப்பாக நாக்கு, டான்சில்ஸ் போன்றவற்றை அதிகம் பாதிக்கிறது. இதனால் எச்சி முழுங்குதல் முதற்கொண்டு பேசுதல் வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தொண்டை வலியானது குறிப்பாக குளிர் காலத்தில் அதிக அளவு வருகிறது.
தொண்டை வலியானது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் தொற்ற கூடியதாகும். தொண்டை புண்ணானது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சரியாகிவிடும் ஆனால் தொடர்ந்து வலியும் வீக்கமும் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
தொண்டை வலியின் காரணங்கள்:
தொண்டை வலியானது அடிக்கடி வருவதோடு மற்றுமல்லாமல் கடுமையான வலியையும் வேதனையையும் கொடுக்கிறது. தொண்டை வலியானது பொதுவாக தொண்டையில் இருக்கும் பாக்டீரியாவின் காரணமாகவே வருகிறது. தொண்டை வலிக்கான வேறு காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
- வைரஸ் தொற்றுகள்: பெரும்பாலாக தொண்டை வலி ஏற்பட வைரஸ் காய்ச்சல் காரணமாகிறது. இதனால், தொண்டை வலியுடன் மெல்லிய தடிமன், உடல் உழைப்பு குறைவு போன்ற அறிகுறிகளுடன் வருகிறது. அதேபோல் குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்றானது பேசுவதில் சிரமம் கரகரப்பு போன்றவற்றுடன் தொண்டை வழியையும் உண்டாக்கும்.
- GERD: காஸ்ட்ரோ ஈஸோபாக்கல் ரிப்ளக்ஸ் என்பது நமது செரிமான அமைப்பில் ஏற்படும் குறைபாடே ஆகும். இதனால் கூட தொண்டை வலி வரும்.
- வயது: வயதை அடிப்படியாக கொண்டே தொண்டை வலி வருவதில்லை. ஆனால், பெரும்பாலும் குழந்தைகளுக்கு தொண்டை வலி ஏற்படுகிறது.
- பாக்டீரியா தோற்று: தொண்டை வலிக்கு பல பாக்டீரியா தொற்றுகள் காரணமாக உள்ளது. அதிலும் குரூப் எ ஸ்ட்ரெப்டோகோகஸ் பாக்டீரியல் அடிக்கடி தொண்டை வலி ஏற்படுகிறது.
- காயம்: தொண்டை வலியை ஏற்படுத்த தொண்டையில் உள்ள காயமும் ஒரு காரணமாகும். இந்த காயமானது நம் உண்ணும்போதோ அல்லது கத்தும்போதோ ஏற்படுகிறது.
- ஒவ்வாமைகள்: காற்றில் பரவும் தூசிகள், புகை, ரசாயனங்களின் உணர்திறன் மற்றும் மகரந்ததாலும் தொண்டையில் வலி ஏற்படுகிறது ஆகியவற்றால் தொண்டை வலி வர வாய்ப்பு உள்ளது. இப்படி ஏற்படும் ஒவ்வாமையானது நாசிக்குழியிலிருந்து தொண்டைக்கு கீழே வடியும் சளியை மீண்டும் மீண்டும் தொண்டை வலியோடு இருமலையும் தூண்டுகிறது.
- வறண்ட காற்று: நாம் வறண்ட காற்றை சுவாசிப்பதாலும் தண்ணீர் பற்றாக்குறையால் வாய் வறணடு காணப்படுவதாலும் தொண்டை வலி ஏற்படுகிறது.
- புகையிலை பயன்பாடு: புகையிலை பிடிப்பதால் வெளிவரும் புகையானது தொண்டையை பாதிக்கிறது. இதனால் தொண்டை வலி மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது.
- தொண்டை அல்சர்: சில சமயங்களில் தொண்டை அல்சர் மற்றும் பூஞ்சை நோய்த்தொற்று தொண்டை வலியை ஏற்படுத்தும்.
- குளிர்ந்த தண்ணீர்: மிகவும் குளிர்ந்த நிலையில் உள்ள தண்ணீர் பனிக்கட்டிகள் அல்லது பானங்களை அதிக அளவு பருகுவதாலும் உண்பதாலும் தொண்டை வலி ஏற்படும்.
- நோய் தொற்று ஏற்படுதல்: ஏற்கனவே தொண்டை வலியால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு விரைவாக வலியானது தொற்றுகிறது.
- கீறல்கள்: சில நேரங்களில் சுவாசிக்கும் காற்றின் தரமானது குறைகிறது. இதனால் நமது மூக்கில் அடைப்பு ஏற்பட்டு நம் வாய் வழியாக சுவாசிக்கும் போது நம் தொண்டையானது வறண்டு காணப்படும். இதனால் தொண்டை வலி ஏற்படும்.
- சளி மற்றும் காய்ச்சல்: சளி மற்றும் காய்ச்சல் இருந்தாலும் தொண்டை வலி ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.
- கட்டி: நமது தொண்டை மற்றும் கழுத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் தொண்டை வழியையும் அசௌகரியத்தையும் நமக்கு தருகிறது.
- பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி: தொண்டை வலியானது நோயெதிர்ப்பு சக்தியை முழுவதும் குறைத்து பலவீனமாக்குகிறது. இதனால், உடலில் தொற்றுநோய்கள் வருகிறதோடு மட்டுமல்லாமல் காய்ச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இறுதியில் தொண்டை வலி அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தொண்டை வலியின் அறிகுறிகள்:
- நமது தொண்டையில் தாங்க முடியாத அளவிற்கு வலி மற்றும் அரிப்பு ஏற்படும்.
- நம் உண்ணும் உணவை விழுங்கும்போது கடுமையான வலி ஏற்படுகிறது.
- தொண்டையானது வீங்கி காணப்படும்.
- இருமல் மற்றும் தும்மல் அடிக்கடி வரும்.
- குளிர்ச்சியுடன் கூடிய லேசான காய்ச்சல் ஏற்படும்.
- கரகரப்பான குரல் மற்றும் மூக்கு ஒழுகுதல்.
- சுவாசத்தை விடுவதில் சிரமம் ஏற்படுதல்.
- தொண்டை வலியால் பல நேரங்களில் எச்சை கூட விழுங்க முடியாமல் இருப்பது.
- தொண்டையில் வெள்ளை அல்லது சிவப்பு திட்டுக்கள் காணப்படும்.
- டான்சில்ஸ் வீங்கி காணப்படும்.
- அடிக்கடி உடல் வலியுடன் தலைவலியும் ஏற்படும்.
- பசியின்மை எப்போதாவது ஏற்படும்.
- வாயின் உட்புறத்தில் சிவப்பு புள்ளிகள் காணப்படும்.
- எப்பொழுதுமே சோர்வாகவும் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
தொண்டை வலியை போக்க வீட்டு வைத்தியம்:
நம் தொண்டை வலியை சரிசெய்ய மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ளாமல் வீட்டிலேயே சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்தே குணப்படுத்த முடியும். நம் தொண்டை வலியை நீக்க பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடிக்கலாம்.
- இஞ்சி டீ: தொண்டை வலியை குறைக்க டீ குடிப்பது உதவுகிறது. அதிலும் இஞ்சியினை டீயில் சேர்த்து குடிப்பதால் தொண்டை வலி விரைவாக குணமாகிறது.
- உப்பு நீர்: தொண்டை வலியை குறைக்க உப்பு நீரினால் வாய் கொப்பளிப்பது ஒரு சிறந்த வழியாகும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும். இது விரைவாக பலனை வழங்கும்.
- மூலிகை தேநீர்: தொண்டை வலி மற்றும் வீக்கத்தை சரிசெய்ய மூலிகை தேநீர் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் கெமோமில் டீயில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. எனவே வலி வீக்கம் அனைத்தையும் குணப்படுத்துகிறது.
- திரிபலா சூரணம்: இரண்டு டம்ளர் நீரில் திரிபலா சூரணத்தை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இது கொதிக்க தொடங்கிய பிறகு சிறிது மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், இதனை ஆறவைத்த வெதுவெத்துப்பாக இருக்குபோது வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டை வலி குறையும்.
- ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் தொண்டை வலியை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஏனெனில், இது பாக்டீரியாவை கொள்ளும் பண்பை கொண்டுள்ளது.
- எலுமிச்சை: எலுமிச்சையில் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிகணேற்றங்கள் உள்ளன. எனவே நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எலுமிச்ச்சை சாறு சளி மற்றும் பாக்டீரியாக்களை உடைத்து வலி நிவாரணத்தை வழங்குகிறது. எனவே, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சார் மற்றும் தேன் சேர்த்து குடிப்பதால் தொண்டை வலி மற்றும் தொண்டை புண்கள் சரியாகும்.
- மஞ்சள்: தொண்டை வலியை சரிசெய்ய மஞ்சள் பெரிதும் உதவுகிறது. ஒரு கிளாஸ் பாலை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குடிப்பதன் மூலம் தொண்டை வலி விரைவில் சரியாகும்.
- துளசி மற்றும் கற்பூரவள்ளி: தொண்டை வலியை சரிசெய்ய நினைப்பவர்கள் துளசி இலை மற்றும் கற்பூரவள்ளி இலையை நன்கு மெண்ணு சாப்பிட வேண்டும். இது தொண்டை வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
- மிளகு கீரை: புதினாவின் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிப்பு மற்றும் ஆக்ஸிகனேற்ற பண்புகள் உள்ளன. ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி சில புதினா இலைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும். பின்னர், இதனை வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.
- இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய்: இலவங்கப்பட்டையில் ஆன்டி வைரஸ், ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகள் உள்ளன. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு இலவங்கப்பட்டை மற்றும் 4 ஏலக்காய் போட்டு ஒரு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதனை ஆறவைத்து வடிகட்டிய பிறகு காலை மாலை என இரு வேலையிலும் குடிக்கலாம். இதன்மூலம் தொண்டை வலி இரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
- ஓமம்: ஓமம் சலி, இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பயன்படுத்தப்படுகிறது. எண்ணெயில் சிறிதளவு ஓமத்தை போட்டு நன்கு சூடாக்கி ஆறிய பிறகு தொண்டை, கழுத்து பகுதிகளில் மசாஜ் செய்யலாம்.
- தேன்: தேனில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் காயத்தை குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது தொண்டை சம்மந்தப்பட்ட வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. வெதுவெதுப்பான தேநீருடன் சில துளிகள் தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் தொண்டை வலியை குறைக்கலாம்.
தொண்டை வலியை குறைக்க வாழ்க்கை முறையில் மாற்றம்:
- அதிக அளவு தூசி மற்றும் காற்று உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும்.
- எப்பொழுதும் சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
- நமது மூக்கு மற்றும் தொண்டை வறண்டு போக நாம் வறண்ட காற்றை சுவாசிப்பதே காரணமாகிறது. எனவே தொண்டை மற்றும் மூக்கின் ஈரப்பதத்தை அதிகரிக்க ஈரப்பத மூடியை பயன்படுத்தவும்.
- நம் வாய் உலர்ந்து போகும்போது கூட தொண்டை வலி ஏற்படுகிறது. எனவே, நாம் இருக்கும் இடத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும். உடலிற்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும்.
- அதிக அளவு திரவம் உட்கொள்ள வேண்டும்.
- புகை மற்றும் மாசுபாடு நமது தொண்டையை பாதிக்கிறது. எனவே இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- எப்பொழுதும் சுகாதாரத்தை கடைபிடிப்பது நல்லது. அதாவது சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவுதல் நமது அன்றாடம் பயன்படும் பொருட்களான பல்துலக்கி, துண்டு போன்றவற்றை மற்றவர்களிடம் பகிர்வதை தடுக்கவும்.
- எளிதில் விழுங்க கூடிய உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும்.
- மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- தொண்டை வலி ஏற்படும்போது நீராவி பிடிப்பது நல்லது.
- சூடான திரவங்கள் மற்றும் சூப்களை குடிக்க வேண்டும்.
- அதிக அளவு காரம், மசாலா சேர்க்கப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.