சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

பற்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் சொத்தை பல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலில் நோய்கள் வருவதற்கான சாத்தியம் குறைகிறது.

நம் வாயில் இருந்து வரும் சொல்லை தெளிவாகவும் வலிமையாகவும் இருக்க பற்கள் உதவுகிறது. பல் இல்லாமல் இருந்தால் நம்மால் பேச கூட முடியாது. அதேபோல் எதையும் எளிமையாக உண்பது கூட சிரமமாக இருக்கும். பல் பராமரிப்பு உடல்நலம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், பல் இருந்தால் மட்டுமே நம்மால் சீராக வாழ முடிக்கிறது. எனவே, பல்லை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பற்சொத்தையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பல்சொத்தை பொதுவாகவே பல்லின் மேற்பகுதியில் ஏற்படுகிறது. நம் பற்களின் மேற்பகுதியில் ஏற்படும் குழிகளையே சொத்தப்பல் என்கிறோம். பொதுவாகவே, பல்சொத்தை வருவதை நம்மால் ஆரம்பத்திலே அறிய முடியாது.

நம் அனைவரது பல்லின் மேல் உள்ள வெள்ளை நிற பகுதியான எனாமல் தேய்ந்து போவதே பற்சொத்தைக்கு காரணமாகும். ஏனென்றால், இந்த எனாமல் பகுதி பற்களை சுற்றிய மிகவும் கடினமாக காணப்படும். குறைந்தது ஆறு மாதங்கள் ஆன பிறகு தான் நமக்கே தெரிய வருகிறது. ஏனெனில் அப்போதுதான் எனாமல் அடுக்கில் தொடங்கும் பல்சொத்தை பற்களின் ஆல்மட்டத்தில் பரவுகிறது. இதில் பாதிப்பு ஏற்படுமேயானால் பற்களில் விரைவில் சொத்தை ஏற்பட்டு இறுதியில் சொத்தை பல்லாக மாறுகிறது. இதற்கு ஆறு மாதங்கள் முதல் ஆறு வருடங்கள் கூட ஆகலாம். இது நம் உண்ணும் பழக்க வழக்கத்தை பொறுத்தது.

இந்த சொத்தைப் பல்லானது இரண்டு பற்களுக்கு இடையிலும் வரலாம் அல்லது பல்லின் மேற்பரப்பில் ஆரம்பித்து பல்லின் அடி வரை செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது. பல்லிற்கு சிகிச்சையளிக்காமல் விடுவதால் பல் சிதைவு அசௌகரியம் மற்றும் தொற்று ஏற்படுகின்றது. இதன் இறுதியில் பல்லை இழக்க கூட நேரிடும்.

சொத்தைப் பல் வருவதற்கான காரணம்:

சொத்தைப் பல் வருவதற்கான காரணம்
  • நமது நாக்கிற்கு சுவையாக உள்ளது என எதையெல்லாம் சாப்பிட கூடாதோ அதையெல்லாம் சாப்பிட்டு பல்லிற்கு தீங்கு விளைவிக்கிறோம்.
  • நம் பற்கள் சொத்தைப்பற்களாக மாற பாக்டீரியாவே முக்கிய காரணமாகும்.
  • நம் பற்களின் மேல் உள்ள எனாமல் முற்றிலும் கால்சியம் மற்றும் பாஸ்பேட் தாதுகளால் ஆனவை. இந்த தாதுக்கள் பல்லில் படும் கசடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு சொத்தைப்பல் வர வழிவகுக்கும். இந்த எனாமல் குறைவதாலோ அல்லது தெய்வதாலோ பல்லில் சிறிய குழி உருவாகி காலப்போக்கில் பெரிய குழியாக மாறுகிறது. இதுவே இறுதியில் சொத்தைபல்லாக மாறுகிறது.
  • சர்க்கரை அதிகம் சேர்க்கபட்டுள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதனால் பற்சொத்தை வருகிறது. இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் இவை பற்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பற்சொத்தைக்கு வழிவகுக்கிறது.
  • அதேபோல், எந்த ஒரு உணவை நாம் சாப்பிட்ட பிறகும் வாயை நன்கு கொப்பளிக்காமல் இருப்பது கூட ஒரு காரணம் ஆகும்.
  • குளிர்ச்சியான பானங்களை உண்பதாலும் பற்சொத்தை வருகிறது. ஒருவர் எப்போதாவது குளிர்பானங்களைஅருந்தினால் பரவாயில்லை ஆனால் தினமும் குளிர்பானங்களை குடிப்பது பற்களின் ஆரோக்கியத்தை குறைத்து பற்சிதைவை ஏற்படுத்தும்.
  • வைட்டமின் டி பற்றாக்குறை கூட சொத்தபல்லிற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
  • இரவு நேரங்களில் சாப்பிட்டு அப்படியே வாய் கூட கழுவாமல் தூங்குவதால் , வாய் துர்நாற்றம் மற்றும் சொத்தபல்லிற்கு காரணமாகிறது.
  • சரியாக பல் விளக்காமல் இருப்பது அல்லது நானும் பல்விலக்குகிறேன் என கூறிக்கொண்டு கடமைக்கு பல்லின் மேற்புறம் மட்டுமே தேய்த்து விட்டு நன்றாக பல் விலக்காமல் விடுவதாலும் பற்சொத்தை ஏற்படும்.
  • அதிக சூடான பானங்கள் மற்றும் உணவை சாப்பிடுவதன் மூலமும் பல்லின் எனாமல் சீக்கிரமாக தெளிவடைந்து பற்சொத்தைக்கு காரணமாகிறது.
  • தூக்கத்தில் பல்லை நறநறவென கடித்தல், தவறான பல் தேய்ப்பு முறை மற்றும் பல்பொடியை உபயோகிக்காமல் செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் பல் விலகுவதால் பல்லில் உள்ள எனாமல் தேய்ந்து சொத்தைபல்லிற்கு காரணமாகிறது.
  • பொதுவாகவே பெரியவர்கள் போடும் வெற்றிலை மற்றும் பாக்கு போன்றவை பற்களில் கறைகளை உண்டாக்குகிறது. இந்த கரையில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சந்தோசமாக துள்ளி குதித்து வாழ்கின்றன. இதன் விளைவாக பற்களில் சொத்தை வெகு விரைவில் ஏற்படும்.
  • அதேபோல் ஒரு பற்களில் உள்ள சொத்தையானது பக்கத்தில் உள்ள பற்களுக்கும் எளிதில் பரவும் தன்மையை கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு சொத்தைப்பல் என்பது படிப்படியாக அதிகரித்து கொண்டே எல்லா பற்களுக்கும் செல்கின்றது.

சொத்தைப்பல்லிர்கான அறிகுறிகள்:

சொத்தைப்பல்லிர்கான அறிகுறிகள்
  • சொத்தைப்பல்லிற்கான ஆரம்பகட்ட அறிகுறி பற்கூச்சம் ஆகும். அதாவது இந்த பர்கூச்சமானது நம் இனிப்பான உணவுகளை சாப்பிடுதல் குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை உண்பதால் வருகிறது.‌
  • பல்லின் கூச்சத்திற்கு அடுத்த படியாக பல்லில் வலி பயங்கரமாக ஏற்படும். அதிலும் இந்த பல் வலியானது உணவை மெல்லும்போது ரொம்ப வலி எடுக்கும்.
  • இந்த சொத்தைபல்லானது எனாமலை பாதிப்பதுடன் மட்டுமல்லாமல் டென்டைனையும் பாதிக்கிறது. டென்டைன் பாதிப்பதன் விளைவாக பற்களில் கோடு அல்லது கருப்பு புள்ளி தெரிகிறது. பிறகு அந்த பல்லில் குழி விழுகிறது. இந்த குழியானது காலப்போக்கில் வளர்ந்து பெரிய குழியாக மாரி முழு பல்லையும் பாக்டீரியாக்கள் தின்று விடுகின்றன.
  • பற்களின் ஒவ்வாமையால் மற்றும் பற்களின் தேய்மானத்தினாலும் கூட பல் வலி ஏற்படுகிறது.
  • தீவிர சொத்தைப் பல்லின் விளைவாக அதிக காய்ச்சல், காது வலி, கழுத்து வலி, தொண்டையை சுற்றி நெறி கட்டுதல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளை கொடுக்கும். எனவே, சொத்தைப்பல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறியான பற்கூச்சம் உள்ள போதே தகுந்த வீட்டு வைத்தியம் அல்லது மருத்துவமனை செய்து பல்லை சரிசெய்து கொள்ளவும்.
  • மேலும், சொத்தைப்பலிற்கு அறிகுறியாக பற்களின் நிறம் மாறி காணப்படும்.
  • பின்னர், வாயில் கெட்ட துர்நாற்றம் கூட வீசும்.
  • சொத்தைபல் காலப்போக்கில் உடைய துடங்குகிறது.
  • பல் வலி வர துடங்குவதே சொத்தைபல்லின் முக்கிய அறிகுறியாக கூட சொல்லலாம். அதன் பிறகு பல்லின் உணர்ச்சிகள் குறைந்து காணப்படும்.

சொத்தை பல் வலி குணமாக வைத்தியம் வீட்டு வைத்தியம்:

இன்றைய காலக்கட்டத்தில் நிறைய மருத்துவ வசதிகள் வந்தாலும் கூட இன்னுமே சிலர் வீட்டு வைத்தியத்தில் ஆர்வம் காட்டுகின்றன. இதன் மூலமே சொத்தை பல் வலி குணமாக அனைத்து செயல்பாடுகளையும் செய்கின்றன. நம் அன்றாடம் வீட்டில் சமயலறையில் உள்ள பொருட்களை வைத்தே சொத்தப்பல்லை சரிசெய்யலாம்.

சொத்தை பல் வலி குணமாக வைத்தியம் வீட்டு வைத்தியம்

கிராம்பு: கிராம்பு சொத்தைப்பல்லிற்கு சிறந்த இயற்கை மருந்தாகும். இந்த கிராம்புகளில் யூகேனல் என்ற கலவை உள்ளது. இவை சொத்தைப்பல்லால் ஏற்படும் வழியையும் வீக்கத்தையும் குறைக்க பெரிதும் உதவுகிறது. சொத்தைப்பல் உள்ளவர்கள் பல் துலக்கிய பிறகும் பற்களில் மஞ்சள் நிறம் காணப்படுமேயானால் இருப்பவை பயன்படுத்தியே சொத்தைப்பல்லை குணப்படுத்த முடிகிறது.

கிராம்புகள் பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. கிராம்புகளில் அதிக அளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனாலே, கிராம்பு பயன்படுத்துவதால் பல்வலியை ஏற்படுத்தும் தொற்றுக்களை எதிர்த்து பல்வலியை சரிசெய்கிறது. கிராம்பு எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாகும். இவை பல் சம்மந்தப்பட்ட அனைத்து வலிகளையும் குறைகிறது.

கிராம்பை நேரடியாக சொத்தைப்பலின் மீது வைத்தாலே போதும் அல்லது இந்த கிராம்பு எண்ணெயை இரண்டு சொட்டு காட்டன் துணியில் விட்டு அதனை சொத்தைப்பல் மேல் தடவுவதால் சொத்தைப்பல் விரைவில் குணமாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

உப்பு தண்ணீர்: உப்பு தண்ணீர் பல்வலிக்கு இயற்கையான கிருமி நாசினியாகும். இவை பற்களின் உண்டாகும் கிருமிகளை கொள்ள உதவுகிறது. காலையில் எந்திரித்த உடன் வெதுவெதுப்பான உப்பு தண்ணீரை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிப்பதால் சொத்தைப்பல் வலியிலிருந்து விடுபடலாம்.

வேப்பிலை: வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் பல்வேறு உடல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. வேப்பந்தலையை நன்கு அரைத்து அதன் சாறை சொத்தைப்பல்லின் மீது தடவி 10 நிமிடங்களில் அப்படியே விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிப்பதன் மூலம் சொத்தைபல்லை சரிசெய்யலாம். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சியால் பல்லவிலக்குவது பல்லிற்கு ரொம்ப ஆரோக்கியமானது.

மஞ்சள்: மஞ்சள் ஒரு மருத்துவ குணம் நிறைந்த கிருமிநாசினியாகும். சிறிதளவு மஞ்சள் சொத்தைப்பல்லை குணப்படுத்திவதில் உதவுகிறது. எனவே மஞ்சள்தூளை சொத்தைப்பல்லின் மீது நன்றாக வைத்து தேய்க்க வேண்டும். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் கழுவிவிடவும். சொத்தைப்பல் உள்ளவர்கள் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் குணமடையும்.

ஆயில்: ஆயில் மூலம் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எளிதில் விரட்ட முடியும். எண்ணையை நம் வாயில் முழுவதுமாக ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே ஊர விடவும். பின்னர், வாயை நன்கு கொப்பளித்து வெது வெதுப்பான நீரினால் வாயை கழுவி விடுவதன் மூலம் சொத்தைப்பல் விரைவில் சரியாகும்.

பூண்டு: சொத்தைப்பல்லை நீக்க பூண்டும் ஒரு காரணியாக செயல்படுகிறது. சொத்தைப்பல் உள்ளவர்கள் 3 அல்லது 4 பள்ளு பூண்டை எடுத்து அதில் சிறிதளவு கல்லு உப்பை சேர்த்து சொத்தைப்பல்லின் மீது வைத்து 10 நிமிடங்கள் நன்றாக அழுத்தி பிடிக்கவும். இதனை தினமும் இரண்டு முறை செய்வதன்மூலம் சொத்தைப்பல்லில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழித்து கிருமிகளை வெளியேற்றுகிறது. இதனை தினமும் செய்வதால் நாளடைவில் சொத்தைப்பற்கள் குணமாகிறது.

கொய்யா இலை: கொய்யா பழத்தை போலவே கொய்யா இலையிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. புதிதாக துளிர்விட்டு கொஞ்சமாக வளர்ந்த கொய்யா இலையை நன்றாக நசுக்கி அதனை சொத்தைப்பல்லின் மேல் வைத்து சிறிது நேரம் அப்படியே விடுவதன் மூலம் சொத்தைப்பல்லின் வலியிலிருந்து தப்பிக்க முடியும்.

அதேபோல் கொய்யா இலையையும் 3 அல்லது 4 கிராம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின்னர், இந்த தண்ணீரை கொண்டு கொஞ்ச கொஞ்சமாக வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் சொத்தைப்பல் விரைவில் குணமாகும்.

கிரீன் டீ: கிரீன் டீ அதிக அளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கிரீன் டீயில் அதிக அளவு புலூரைடு உள்ளது. இவை புலூரைடு தாதுக்களை மீட்டு எடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் பல்லின் சிதைவை பாதுகாக்க உதவுகிறது. கிரீன்டீ தினமும் பருகுவதால் நம் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து காலப்போக்கில் சொத்தப்பல் குணமாகிறது.

சொத்தைப்பல்லை தவிர்க்க செய்ய வேண்டியவை:

சொத்தைப்பல்லை தவிர்க்க செய்ய வேண்டியவை
  • தினமும் காலை இரவு என இரண்டு வேலையும் பல் துலக்க வேண்டும்.
  • பல் விளக்கும்போது மேல்தாடை பற்களை கீழ்நோக்கியும் கீழ்தாடைபற்களை மேல்நோக்கியும் நன்கு சுழற்றி துலக்க வேண்டியது அரோக்யமான பல்லிற்கு வலி வகுக்கும்.
  • பல் துலக்கும்போதே நமது நாக்கையும் சேர்த்தே சுத்தம் செய்ய வேண்டும்.
  • பற்களில் எளிதில் ஒட்டக்கூடிய சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு உடனடியாக வாயை கழுவ வேண்டும். ஏனெனில் இவை அதிக இனிப்பை கொண்டுள்ளதால் எளிதில் பல்லை பாதிக்கும்.
  • பல்துலக்க பல்பொடியை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஒரு சிலர் கரி,உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல் போன்றவற்றால் பல் விலகுகின்றன. இவை பற்களிடையே எதிர்வினையை உண்டாக்கும்.
  • வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சைப்பழம், நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், மீன் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல் ஈறுகளும் எனாமலும் நன்கு வளர்ச்சி அடைகிறது.
  • தினசரி பால் அருந்துவதன் மூலம் பல்லிற்கு கால்சியம் கிடைத்து பல்லை பாதுகாக்கிறது.
  • நம் நகத்தை கடிக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், இதன் மூலமே விரலில் உள்ள கிருமிகள் பல்லிற்கு பரவுகிறது.
  • கூரான ஊசிகள் அல்லது கம்பியினால் பல் குத்துவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
  • அதேபோல், தீய பழக்கங்களான புகை பிடித்தல், மது அருந்துதல், பான்மசாலா பயன்படுத்துவது மற்றும் வெற்றிலை போடுவது என அனைத்து பழக்கங்களையும் கைவிட வேண்டும். இதன் மூலமே பல் ஆரோக்கியமாக வளரும்.
  • ஐஸ்கிரீம் போன்ற குளிர் பானங்களையும் காபி, டி போன்ற அதிக சூடான பானங்களையும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *