Table of Contents
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர்.
கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக இருப்பது நல்லது அல்ல. இதனால், நம் மனமானது எப்பொழுதும் அழுத்தமாகவே இருக்கிறது. சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க நினைத்தால் கூட மனம் அதையே நினைத்து கவலைப்படும். எனவே ஒரு விஷயத்தையே முழுவதும் நினைத்து இருப்பதை குறைப்பது நல்லது.
மனஅழுத்தத்தை கைவிடுவதால் மனம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மனஅழுத்தத்தை நீண்ட நாட்களுக்கு தொடர விட கூடாது. ஏனெனில், இவை காலம் போக போக மோசமான விளைவை உடலிற்கு தருகிறது. எனவே, மனஅழுத்தத்தை தவிர்ப்பது நல்லது.
மனஅழுத்தம்:
மனஅழுத்தம் என்பது நமது நினைவு அல்லது உடல் அல்லது கனவு சம்பந்தப்பட்டது ஆகும். எனவே, தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களையே அழுத்தமாக உணருகிறோம். இதனால், உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இந்த நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரே இடத்தில அமர்ந்து வேலை செய்தால், பல்வேறு பிரச்சனைகளை நம் தலையில் போடுதல் போன்ற காரணங்களால் உடல் உழைப்பு குறைந்தும் மன அளவில் கவலையாகவும் இருக்கின்றனர். மனஅழுத்தம் இருக்குமேயானால் நமது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் தினசரி வாழ்க்கையானது பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சோர்வாகவும் கவலையாகவும் காணப்படுகிறார்கள்.
மனஅழுத்தமானது நம் வாழ்க்கையின் இயல்பான பகுதியாக ஒரு சில நேரங்களில் இருக்கிறது. இது எப்பொழுதும் மோசமானதாக கருதப்படாது மற்றும் இவை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. இது ஒரு உந்து சக்தியாக செயல்படுகிறது. ஏனெனில், மனஅழுத்தத்தால் ஆபத்து அல்லது உயிருக்கே பாதிப்பு தரும் சூழ்நிலைகளை நம்மால் எதிர்த்து போராட தயார்படுத்துகிறது.
மனஅழுத்தத்தின் வகைகள்:
மனஅழுத்தமானது அதன் பண்புகள், காலம் மற்றும் சிகிச்சை ஆகியவை பொறுத்து மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது.
1.கடுமையான மனஅழுத்தம்: இந்த மனஅழுத்தமானது அனைவருக்குமே ஏற்படும் பொதுவான அழுத்தமாகும். இந்த அழுத்தம் உள்ளவர்கள் பொதுவாகவே கடந்த காலத்தில் நடந்ததையோ அல்லது எதிர்காலத்தில் நிகழ்வதையோ நினைத்து சிந்தித்து கொண்டிருப்பார்கள். இது அனைவருக்குமே ஏற்படும் மனஅழுத்தம் ஆகும். கடுமையான மனஅழுத்தமானது நம் அனுபவிக்கும் போது தான் அறியப்படுகிறது மற்றும் இவை நமக்கு தீங்கை விளைவிப்பதில்லை.
2.எபிசோடிக் கடுமையான மனஅழுத்தம்: கடுமையான மனஅழுத்தத்தை உருவாக்குவது எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் ஆகும். இது பொதுவாகவே ஏதாவது ஒரு விஷயம் நடக்குமா நடக்காத என யோசிக்கும்போது கவலையுடன் இருப்பதால் ஏற்படுகிறது. இத்தகைய கடுமையான மனஅழுத்தத்தை தொடர்ந்து சந்தித்தால் இவை ஏற்படுகிறது.
3.நாள்பட்ட மனஅழுத்தம்: நாம் தொடர்ந்து மோசமான விஷயங்களை சிந்தித்து இருந்தாலோ மற்றும் இருக்கும் சுற்றுச்சூழல் சரியாக இல்லையெனில் இந்த அழுத்தம் வருகிறது. இந்த மனஅழுத்தம் உடலில் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை விளைவிக்கும்.
மனஅழுத்தத்திற்கான காரணங்கள்:
- மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இந்த காலத்தில் அதிகரித்து வரும் மனித செயல்களாலும் சிந்தனைகளும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
- மனஅழுத்தத்திற்கு முதல் காரணமே கவலை ஆகும். கடந்த காலத்தில் நடந்ததையோ அல்லது நிகழ்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எண்ணியோ அடிக்கடி கவலைப்படுவதன் மூலம் பதட்டத்தையும் சோர்வையும் உணர வைக்கிறது.
அதிக நேரம் போன் பயன்படுத்துதல். - திடீரென நமது உயிர்க்கு எதாவது ஆபத்து நேர்ந்திடுமோ என்று எண்ணுதல். உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகள்.
- பொருளாதார ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ளுதல்.
- திருமணம் செய்வதில் பிரச்சனை.
- காயம் விபத்து அல்லது ஓய்வு என அனைத்தையும் நினைத்து வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை ஏற்படுதல்.
- எதையாவது நினைத்து தன்னை தானே தாழ்த்தி பேசுதல், எதிர்மறையான எண்ணம் கொண்டு இருத்தல்,சோர்வாக இருப்பது, வேலையில் அழுத்தம், குழந்தைகளை பராமரித்தல் நிதி சிக்கல்கள், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற காரணங்கள் மனஅழுத்தத்திற்கு காரணமாக உள்ளன.
மனஅழுத்தத்தின் அறிகுறிகள்:
மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் மனதளவிலும் உடல் அளவிலும் வெளிப்படுகிறது. மனஅழுத்தம் உள்ளவர்களுக்ளு அதிகமாக வியர்த்து கொண்டே இருக்கும். இது மனஅழுத்தம் அதிகமா இருப்பதற்கு அறிகுறியாகும்.
மனஅழுத்தம் ஏற்படுவதால் வாய் உலர்ந்து போய்விடும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், தலை வலி, எடை அதிகரிப்பது, மூச்சு திணறல், இதயம் வேகமாக துடிப்பது, வயிற்றுப்போக்கு, குமட்டல், மயக்கம், அதிகரித்த வியர்வை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளங்கை வேர்ப்பது, அஜீரண கோளாறுகள், மனச்சோர்வு, தூக்கமிம்மை, கவலை, பதட்டம், எரிச்சல் ,கோவம், சோகம், தனிமை, மறதி, எதிலும் கவனம் செலுத்தாமை போன்ற பல்வேறு அறிகுறிகள் காணப்படுகின்றன.
மனஅழுத்தத்தின் விளைவுகள்:
- மனஅழுத்தம் உள்ளவர்கள் உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை அனுபவிக்கின்றன. இது நீடித்து கொண்டே போனால் உடலில் பல்வேறு உடல்நல கோளாறுகல் வருகின்றன.
- செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடல் செயல்பாடுகள் படிப்படியாக குறைய தொடங்குகுன்றது. இதனால் வயிற்றி வலி, வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருகிறது.
- உடல் எப்பொழுதும் சோர்வாகவே இருக்கிறது. ஏனெனில் மனஅழுத்தத்தின் போது உடலானது ஏதாவது நினைத்து விழிப்புடன் இருக்கும்.
- நாம் மனஅழுத்தத்தில் இருக்கும்போது உடலின் வலு குறைந்து காணப்படுகிறது. இதனால் தசைகள் இறுக்கமாகி தசை வலி வருகிறது. இதுவே பதற்றம் தலை வலி, முதுகுவலி போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
- மன அழுத்தத்தின் விளைவாக இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படுகிறது.
- இவை சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- மன அழுத்தத்தினால் பசியின்மை ஏற்படுகின்றது.
- மனஅழுத்தம் உள்ளவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை. இதனால், இரைப்பை குடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. எனவே, செரிமானம் சரியாக இல்லாததால் உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
- மன அழுத்தத்தால் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. ஏனெனில், அடிக்கடி ஏதாவது நினைத்து கவலைப்படுவதால் உடல் நிலை சரியில்லாமல் போகிறது.
- மனஅழுத்தம் உள்ளவர்கள் அதிகம் யோசித்து கொண்டே இருப்பதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதன் இறுதியில் ஆஸ்துமா வர காரணமாகிறது.
- மனஅழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- மனஅழுத்தம் அதிகரிப்பதால் சீக்கிரமாகவே முதுமை தோற்றம் ஏற்படுகிறது.
- இதனால், கோவம் அல்லது எரிச்சல் ஏற்படுகிறது.
- மனஅழுத்தம் அதிகரித்து கொண்டே போனால் இளம் வயதிலே நரை முடி வருகிறது. முடி உதிர்வதற்கு முக்கிய காரணமே மனஅழுத்தம் ஆகும்.
- மன அழுத்தினால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் உற்பத்தி அதிகமாகி உடல் பருமனாக மாறுகிறது.
- தற்காலிகமாக நியாபக மரதி ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி தலை வலியும் வருகிறது.
- மனஅழுத்தம் நம் இதயத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் வரும்.
மன அழுத்தத்தை குறைத்தல்:
நமது அன்றாட செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது மற்றும் வெவ்வேறு முறைகளை பின்பற்றி ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை குறைக்க முடியும். மனஅழுத்தத்தை குறைக்க பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எனவே, ஏதாவது ஒன்றை அவ்வப்போது செய்து நம்மை நாமே பிசியாக வைத்துக்கொள்ளவும். மனஅழுத்தத்தை குறைக்க முனைபவர்கள் செய்ய வேண்டிய விஷயம் நிறைய உள்ளன. அதில் சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
சுய பாதுகாப்பு: மன அழுத்தத்தில் இருந்து வெளிப்பட முதலில் நம்மை நாமே பாத்துக்க கொள்ள வேண்டியது அவசியம். மனதை இலகுவாகும் செயல்களை செய்ய மறுத்தல், வேலையை சரியாக செய்ய முடியாமல் போதல், உடல்நலத்தில் அக்கரை இல்லாமல் இருப்பது போன்றவற்றை புறக்கணிக்க வேண்டும்.
கால மேலாண்மை: எப்பொழுதும் குறிப்பிட்ட நேரத்தில் வேலையினை செய்ய முயற்சிக்கவும். அதுபோல், நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்.
நல்ல இசை கேட்டல் மற்றும் சினிமா பார்த்தல்: நல்ல இசையையும் பிடித்த பாடல்களையும் அடிக்கடி கேட்பதாலும் மனஅழுத்தம் குறையும். சினிமா பார்ப்பதும் மனஅழுத்தத்தை குறைகிறது. ஆனால், சினிமாவை அதிக அளவில் பார்ப்பதை தடுக்கவும்.
கனவு காணுங்கள்: நாம் நமக்கு பிடித்த விஷயங்களை நினைத்து கனவு காண்பது மனஅழுத்தத்தை குறைக்கிறது. கனவு என்பது நம் நினைக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். அதனால், நமக்கு பிடித்ததை கற்பனை செய்து மகிழ்வதன் மூலமும் மனஅழுத்தம் குறையும்.
ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுதல்: மனஅழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் உடனே வீட்டிலுள்ள சிறிய சிறிய வேலைகளை செய்வது மனதை அலைபாய விடாமல் தடுக்கிறது. இதனால் அழுத்தம் குறைந்து வேலையில் கவனம் செலுத்தப்படுகிறது.
அதிகம் யோசிக்காதீர்கள்: நமக்கு ஏற்படும் பதட்டத்திற்கு பின்னால் இருக்கும் காரணத்தை கண்டறிந்து அதனை தடுக்க வேண்டும். எனவே, பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டுமேயானால் தேவையில்லாததை யோசிப்பதை தவிர்த்து விடவும்.
நன்றாக தூங்குவது: தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. எனவே, சரியான நேரத்தில் தூங்கி எழுவது மன அழுத்தத்தை குறைக்கிறது.
பழைய நினைவுகளை மீட்டெடுத்தல்: நம் கடந்த காலத்தை நினைவில் கொண்டால் எண்ணற்ற இனிமையான விஷயங்கள் இருக்கும். அவற்றின் புகைப்படங்களை பார்த்து மனதை மகிழ்ச்சியாக்குவதன் மூலம் மனஅழுத்தம் குறைகிறது.
தியானம் செய்தல்: தியானம் செய்வதன் மூலம் மனதில் ஓடும் அனைத்து எண்ணங்களையும் ஒருமைப்படுத்தி குழப்பங்களை நீக்கி அமைதியாக வாழ முடிகின்றது. இதனால், மனஅழுத்தம் குறைந்து அமைதியும் சமநிலை உணர்வும் ஏற்படுகிறது.

செல்லப்பிராணியுடன் விளையாடுதல்: மனஅழுத்தத்தை குறைப்பதில் செல்லப்பிராணிகள் பெரும்பாலும் உதவுகிறது. அதனால் தான் செல்லப்பிராணிகளை வழப்பவர்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும் சந்தோசமாகவும் பதட்டம் மற்றும் தனிமை இல்லாமலும் வாழ்கின்றனர்.
உடற்பயிற்சி செய்தல்: காலையில் எழுந்தவுடனே உடற்பயிற்சி செய்வதால் மனஅழுத்தத்தை எளிதில் விரட்ட முடிகிறது. இதனால், உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
சுற்றுலா செலுத்தல்: மனஅழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் தனியாக அல்லது நண்பர்கள், உறவினருடன் பிடித்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம். இதனால் மனம் புத்துணர்ச்சி பெற்று நிம்மதியாக வாழ முடிகிறது.
இயற்கையில் நேரத்தை செலவிடுதல்: எப்பொழுதும் ஒரே இடத்தில் இருந்து எதையோ நினைத்து கவலை படுவதை விட்டு நல்ல இயற்க்கை காட்சிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அதை ரசிக்கலாம். அமைதியான சுற்றுசூழலில் இயற்கையை ரசிப்பதும் ஒரு வரப்பிரசாதமே. இதனால் மனஅழுத்தம் குறைந்து சந்தோசமாக இருக்கலாம்.
ஆரோக்கியமாக சாப்பிடுதல்: மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற உணவு மாற்றமானது அதிகம் சாப்பிடுதல் அல்லது குறைவாக சாப்பிடுதல் போன்ற விளைவுகளை தருகிறது. ஆரோக்கியமான உணவை சரிவிகித அளவில் உண்பதும் உடலிற்கு நல்லது. ஏனெனில், நல்ல உணவு திட்டமானது நமது மனநிலையையும் ஆரோக்யத்தையும் உறுதிப்படுத்துகிறது.
சண்டை போடுவதை தவிர்க்கவும்: சண்டை போடுவதும் மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, சண்டையினை தவிர்ப்பதன் மூலம் மனஅழுத்தம் குறைகிறது.
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்: நம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து இருப்பது மனஅழுத்தத்தை குறைக்கும். ஏனெனில், தனிமையில் இருந்தால் தான் நிறைய யோசனைகளை வந்து மனஅழுத்தம் ஏற்படும்.
புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல்: புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆரம்பத்தில் மனஅழுத்தத்தை குறைத்தாலும் காலப்போக்கில் இவையே மனஅழுத்தத்தை அதிகரிக்கின்றன. எனவே, புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை முற்றிலும் குறைக்க வேண்டும்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல்: நாம் மகிழ்ச்சியாகவும் சுற்றுப்புறத்தை அமைதியாகவும் வைத்திருப்பது மனத்திற்கு நிம்மதியை தரும். எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பது கஷ்டம் தான். ஆனால், முடிந்த வரை மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மனஅழுத்தம் எளிதில் காணாமல் போய்விடும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.