நமது தலைக்கு கீழ் மற்றும் முதுகிற்கு மேலேயும் ஏற்படும் வழியே கழுத்து வலி என்கின்றோம். இவை பொதுவான நிலையாகவே கருதப்படுகிறது. கழுத்து வலியானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வருகிறது.
நமது கழுத்தில் உருவாகும் தசைகள் தசைநார்கள் போன்றவற்றில் ஏதேனும் திரிபு இருக்கும்போது வலி ஏற்படுகிறது. இவை உடலில் அசௌகரியத்தையும் தொந்தரவையும் நமக்கு கொடுக்கிறது. தினசரி வாழ்க்கையில் நம்மில் மூன்று பேரில் இரண்டு பேர் வலியால் அவதிப்படுகின்றன.
கழுத்து வலி, “செர்விகல்ஜியா” என அழைக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது முக்கியமாக கழுத்து மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் இறுக்கமாகுவதாலும், எலும்புகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உருவாகிறது. இதனால் நம்மால் சரியாக நிமிர்ந்து பார்க்க முடியாது, திடீரென திரும்புவது சிரமமாகலாம், மேலும் கழுத்தை அசைப்பதும் வலியுடன் இருக்கும்.
கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது எப்படி? எளிய இயற்கை முறைகள், சரியான உடற்பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் மூலம் கழுத்து வலியை குறைக்கலாம். தவிர, தினசரி பழக்கவழக்கங்களில் சில சரியான சீர்திருத்தங்களை செய்து கொள்வதனால், நீண்ட காலத்திற்கு வலியிலிருந்து விடுபடலாம்.
கழுத்து வலியானது உடனடியாக தீர்வு காணாவிட்டால் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.
Table of Contents
கழுத்து வலியின் வகைகள்:
நமக்கு ஏற்படும் கழுத்து வலியை அதன் வலியின் தன்மையையும் காலத்தையும் பொறுத்தே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- அச்சு வலி: ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படுகிற வலியானது நீண்ட நேரம் குனிவதாலும் அசையாமல் இருப்பதாலும் ஏற்படுகிறது.
- கதிரியக்க வலி: இந்த வலியானது முதுகு தண்டில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு பரவுகிறது.
- மிலோபதி வலி: இந்த வலியானது நமது கழுத்தின் தண்டுவடத்தில் அழுத்தம் ஏற்படுவதால் வருகிறது.
- மென்மையான வலி: கழுத்து பகுதியில் மந்தமான வலி ஏற்படுகிறது.
- நரம்பியல் வலி: நமது உடலில் உள்ள நரம்புகளால் கழுத்தில் ஏற்படும் வலியையே நரம்பியல் வலி என்கிறோம்.
- குறிப்பிட்ட வலி: குறிப்பிட்ட வலியானது நமது கழுத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வருகிறது.
- கூர்மையான வலி: நமது கழுத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் மோசமான வலி ஏற்படுகிறது.
- ரெடிகுலர் வலி: உடலின் கர்ப்பப்பை வாயில் முதுகெலும்பில் உள்ள நரம்பு வீர் அலர்ஜியால் கழுத்தில் வலி ஏற்படுகிறது.
கழுத்து வலி வர காரணம் :
கழுத்து வலியால் ஏற்படும் வலியானது கடுமையாகவும் சில நேரங்களில் தாங்க முடியாமலும் இருக்கும். கழுத்து வலியானது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. நடுத்தர வயதினருக்கு கழுத்து வலியானது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல்வேறு காரணங்களால் கழுத்து வலியானது ஏற்படுகிறது.

- கூட்டு திரிபு: பொதுவாகவே, கழுத்து மூட்டுகள் வயதாகும் பொழுது பலவீனமடையும். இதனால் மூட்டுகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு கழுத்தில் வலி ஏற்படுகிறது.
- காயம்:விபத்துகளில் நமது தலையானது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி வேகமாக செல்வதால் இவை கழுத்தில் வலியை ஏற்படுகிறது.
- தலைவலி: இவை கழுத்து வலியை ஏற்படுத்துவதில்லை என்றாலும் ஏற்கனவே உள்ள தலைவலியை அதிகரிக்க செய்யும் தன்மையுடையது.
- தசைப்பிடிப்பு: கழுத்து தசைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கழுத்தில் வலியை உண்டாக்கும்.
- மனஅழுத்தம்: மனஅழுத்தத்தின் காரணமாக கழுத்து தசைகள் இறுகி கழுத்தில் வலியை ஏற்படுத்துகிறது.
- அதிக எடை: அதிக உடல் எடையானது கழுத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், தசைகள் பலவீனமாகி கழுத்து வலியை ஏற்படுத்துகிறது.
- வளர்ச்சிகள்: நமது உடலில் ஏற்படும் நீர்க்கட்டிகள்,கட்டிகள் போன்றவற்றால் கழுத்தில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.
- செர்வீக்ஸ் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ்: இவை கழுத்து, தண்டு மற்றும் நரம்பு வேர்களில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் கழுத்து, கை,கால்களில் வலி ஏற்படுகிறது.
- முதுமை: முதுமை பருவத்தை அடையும்பொழுது இயற்கையாகவே கழுத்து வலி ஏற்படுகிறது.
- கடுமையான உடல் செயல்பாடுகள்: நாம் கடுமையான வேலையை செய்வதாலும் உடற்பயிற்சிகளை செய்யும்போது கழுத்தை அதிக அளவில் உபயோகிப்பதால் வலி ஏற்படுகிறது.
- மேலும் நரம்பு சுருக்கம், கீல்வாதம், நரம்பு தண்டில் அழுத்தம் ஏற்படுதல், தேய்ந்த மூட்டுகள், நோய்கள், தவறான தூக்க நிலை மற்றும் உட்காரும் நிலை, கழுத்து எலும்பு முறிவுகள், மோசமான தோரணை, முடக்குவாதம் போன்ற பல்வேறு காரணங்களாலும் கழுத்து வலி ஏற்படுகிறது.
கழுத்து வலி அறிகுறிகள்:
கழுத்து வலியின் அறிகுறியானது நமக்கு உடல் உபாதைகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். கழுத்து வலியின் சில அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்.
- கழுத்தானது விறைப்பு தன்மையுடன் இருத்தல்.
- கழுத்தில் கடுமையான வலி ஏற்படுதல்.
- நமது கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமாக காணப்படும்.
- கழுத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் இருத்தல்.
- கழுத்தை திருப்பும் போதும் கழுத்தை சுழற்ற முயற்ச்சி செய்யும் போதும் வலி ஏற்படுதல்.
- கழுத்தை தொட்டால் கூச்சமாக இருத்தல்.
- அடிக்கடி தலைவலி ஏற்படுதல்.
- தூங்குவதில் சிரமம் ஏற்படுதல்.
- நம்மால் வழக்கம்போல தலையை நகர்த்த முடியாமல் போதல்.
- மனஅழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரித்தல்.
- ஒருவித தட்டுதல் அல்லது உடைத்தல் போன்று சத்தம் கழுத்தில் ஏற்படுதல்.
- அடிக்கடி தலை சுற்றுதல் மற்றும் இயக்கமற்ற தன்மை ஏற்படுதல்.
- ஒருசில பொருட்களை பிடிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
எளிய முறையில் கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்:
கழுத்து வலியை முழுவதுமே வீட்டிலேயே இருந்து குணப்படுத்த முடியும். அன்றாட வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும் கழுத்து வழியை சரிசெய்ய முடிகிறது.
- ஆப்பிள் சீடர் வினிகர்:ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் அல்ர்ஜி எதிர்ப்பி பண்புகள் இதில் அதிக அளவில் உள்ளன. ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினீகரையும் ரெண்டு தேக்கரண்டி நீரையும் சமமாக எடுத்து கொள்ளவேண்டும். பின்னர் இதனை ஒரு துணியில் தடவி வலி உள்ள இடத்தின் மேற்பரப்பில் சிறிது நேரம் வைப்பதன் மூலம் கழுத்து வலி குறையும்.
- நல்ல தோரணையையை பின்பற்றவும்: நாம் பொதுவாகவே குனிந்து கொண்டு வேலை செய்வதாலும் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி அல்லது மொபைல் பயன்படுத்தினாலும் கழுத்து வலி மோசமாக போய்விடும். எனவே சாய்வதையும் கழுத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதையும் தவிர்த்து நல்ல தோரணையை பின்பற்றுவதன் மூலம் கழுத்து வலி சரியாகும்.
- இஞ்சி: இஞ்சி நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் அதனை வடிகட்டி தேன் சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை குடிப்பதன்மூலம் விரைவில் வலி குறையும்.
- மென்மையான மசாஜ்: பொதுவாகவே வலி உள்ள இடத்தில மெதுவாக ஏதேனும் ஒரு எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கழுத்தில் உள்ள அழுத்தம் குறைந்து வலி முற்றிலும் இல்லாமல் போய்விடும்.
- ஓய்வு எடுத்தல் : நமக்கு நீண்ட நேரம் வேலை செய்தல் மற்றும் தொடர்ந்து பயணம் சென்றாலும் அடிக்கடி ஓய்வு எடுப்பது நல்லது. அந்த ஓய்வின் போது தோள்பட்டை மற்றும் கழுத்தினை நீட்ட வேண்டியது அவசியம்.
- மிளகு: மிளகையும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயும் சேர்த்து சூடேற்றி ஆற விடவும். பின்னர் அதனை வலியுள்ள இடத்தில் சிறிது நேரம் போடுவதன் மூலம் வலி விரைவில் குணமாகும்.
- கழுத்தை ஈரமாக வைத்தல்: கழுத்து பகுதியில் உள்ள தோள்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்க ஏதேனும் மருத்துவ கலவையை பயன்படுத்தவும். இதனால் கழுத்து தசைகள் சோர்வடையாமல் இருக்கும். மேலும் கழுத்தை நீரினால் கழுவி ஈரப்பதம் ஆக்குவதன் மூலம் வலியானது சரியாகும்.
- தூக்க அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதல்: எப்பொழுதும் போதிய அளவு தூங்குவது அவசியம். அப்படி தூங்கும்பொழுது அசௌகரியம் ஏற்படும் வகையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். பெரிய அளவிலான தலையணையை தவிர்த்து சிறிய அளவிலான தலையணையை பயன்படுத்தவும்.
- மஞ்சள்: மஞ்சளில் உள்ள நோய் எதிரிப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்ணுங்கள் கழுத்து வழியை விரைவில் குணமாகும். ஒரு டம்ளர் அளவிலான பாலை சூடேற்றி இறக்கிவிடவும். பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலக்கி விடவும். இந்த கலவையை தினமும் இரவில் தூங்கும் முன்பு குடிப்பதன் மூலம் கழுத்து வலி விரைவில் குணமாகும்.
- சூடான தண்ணீர்: பொதுவாகவே நாம் குளிக்கும்பொழுது சூடான தண்ணீரால் குளிக்க வேண்டும் மற்றும் சூடான துண்டை பயன்படுத்துவதாலும் கழுத்து வலியை குறைக்கலாம்.
- மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்: நாம் மொபைல் உபயோகிக்கும்பொழுது எப்பொழுதும் நேராக அமராததால் தசை நகர்வுகளில் இருக்கம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.
- மனஅழுத்தத்தை குறைக்க வேண்டும்: மனஅழுத்தம் உள்ளதால் தோள்களானது பாதிக்கபட்டு கழுத்தில் வலி மற்றும் விறைப்பு ஏற்படுகிறது. எனவே மனஅழுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எப்பொழுதும் பிடிச்ச செயல்களை செய்ய வேண்டும்.
- அசையாமல் இருப்பது: நாம் திடீரென கழுத்தை திழுப்புவதையும் கழுத்தை சுழற்றுவது போன்ற வலிமைமிக்க அசைவுகளை முற்றிலும் தவிர்த்து பொறுமையான அசைவுகளை மேற்கொள்ளவும்.
- சுமையை தோலில் எடுத்து செல்வதை தடுக்கவும்: நமது தோள்பட்டையில் மீது அதிக சுமையுள்ள பொருட்களை வைத்து தூக்கி கொண்டு நீண்ட நேரம் செல்வதை தவிர்க்கவேண்டும்.
- நீரேற்றத்துடன் இருப்பது: நமக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் கழுத்து பகுதியானது நீரேற்றத்துடன் வைக்கும். இதனால் கழுத்து வட்டுகள் மிருதுவாகவும் திடகமாகவும் இருப்பதோடு வலியையும் குறைக்குறது.
- சூடான மற்றும் குளிர்ந்த நீர்: கழுத்து வழியை குறைக்க வலி உள்ள இடத்தில் சூடான அல்லது குளிர்ச்சியான நீரினால் ஒத்தடம் கொடுப்பதால் வலி விரைவில் காணாமல் போகும்.
- கழுத்து தசைகளை நீட்டுதல்: நமது கழுத்து தசைகளை மெதுவாக நீட்டுவதன்மூலம் கழுத்து தசைகள் தளர்ந்து வலியை குறைக்கவும் முடிகிறது.
- உடற்பயிற்சி: நாம் ஒரு சில உடற்பயிற்சி செய்வதால் தசைகள் வலுவாவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இதனால் வலியிலிருந்து விடுபட முடியும். ஏனெனில் நாம் செயலற்ற நிலையில் இருக்கும்பொழுது உடல் விறைப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க வாரத்திற்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது. உதாரணமாக கழுத்து சுழற்ச்சிகள்,பக்கவாட்டு, கழுத்து நீடு, பலாசனம், மார்ஜரியாசனம், பற்சுவை பகசனம் போன்றவற்றை செய்வதன் மூலம் கழுத்து வலி குறையும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்