நம்மில் நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றன. இவை பெரிய தொந்தரவாக இருக்கும். நம் என்னதான் பார்ப்பதற்கு ஆடம்பரமான ஆடை அணிந்து இருந்தாலும் கூட வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் யாருமே நம்மிடம் பேச முன்வர மாட்டார்கள். இதனாலே பலர் சங்கடம் ஏற்பட்டு வெளியில் செல்வதையே மறுக்கின்றன. வாய் துர்நாற்றம் உடையவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாய் துர்நாற்றத்தை நம் மருத்துவ பெயரில் ஹாலிடோசிஸ் என்று அழைக்கிறோம்.
உண்ணும் உணவே வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். தற்போதைய காலகட்டத்தில் அவசர காலநிலையினாலும் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் அதனை எதிர்த்து போராடி எப்படி சரிசெய்வது என பார்க்கலாம். இதனால் ஏற்படும் பலனானது வாயை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வெண்மையாகவும் வைத்திருக்க உதவும். மேலும் துர்நாற்றம் நீங்கி நல்ல மணமுள்ளதாக இருக்கும். என்னவெல்லாம் செய்தால் வாய் துர்நாற்றம் நீங்குநீக்கலாம் என்பதை பார்க்கலாம்.
Table of Contents
வாய் துர்நாற்றம் காரணங்கள்:
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். நம் விடும் மூச்சு காற்றானது வழக்கத்தை விட மோசமாக இருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.
1.ஈறு நோய்: ஈறு நோய்கள் முதலில் ஈறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் வாயில் பல் துலக்கும்போது சுத்தம் செய்ய முடியாத இடங்களிலும் வாயை கொப்பளிக்கும் போது சரியாக கொப்பளிக்காமல் விடுவதாலும் ஈறு நோய் வருகிறது. இதற்கு ஆரம்பத்திலே சிரிச்சையளிப்பது நல்லது. பின்னர், ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு வாய் துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கும்.
2.வாய்வழி சுகாதாரம் மோசமாக இருத்தல்: நம் வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உண்ணும் உணவு மூலமும் சுற்றுச்சூழலாலும் வருகின்றன. அந்த பாக்டீரியாக்கள் நம் வாயில் கந்தக அமிலங்களை உருவாக்குகிறது. இந்த அமிலங்கள் அழுகிய முட்டையின் வாசனையை போலவே இருக்கும்.
3.கடுமையான மனம் கொண்ட உணவு: வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை அதிக அளவு கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதற்கு சல்பர் கலவை உள்ளதே காரணமாகும். இவைகள் தான் நமது வாய்வழி குழியினுல் உடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்ணாவிரதம் இருக்கும்போதும் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில், உணவு மற்றும் திரவங்களை தவிர்ப்பதால் உமிழ்நீர் சுரப்பு குறைந்து வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. நம் எந்தவொரு உணவையும் ஒருமுறை சாப்பிட்டாலே வாயில் துர்நாற்றம் வரும். ஏனெனில், நம் உண்ணும் உணவானது முழுவதுமாக உடைந்து போவதில்லை. எனவே கடுமையான மனம் கொண்ட உணவை தவிர்க்க வேண்டும்.
4.குறைந்த தண்ணீர் குடிப்பது: போதிய அளவு தண்ணீர் பருகாமல் இருப்பதால் நம் வாயில் உமிழ்நீரின் சுரப்பு குறைந்து வறண்டு காணப்படுகிறது. இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
5.துவாரங்கள்: நம் வாயில் ஈறு நோய்களை தவிர கழிவுகள், உணவு குப்பைகள், பாக்டீரியா ஆகியவை துவாரங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது.
6.அமைப்பு சார்ந்த நோய்கள்: நீரிழிவு நோய், கல்லீரல் நோய், நுரையீரல் நோய், சைனஸ் தொற்று மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் அறிகுறியாக வாய் துர்நாற்றம் உள்ளது.
7.உமிழ்நீர்: வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் உமிழ்நீர் ஓட்டமே ஆகும். துப்புரவு விளைவையே உமிழ்நீர் விடுவிக்கிறது. நமது வாயில் சல்பர் கலவை அதிகரிக்க காரணமே உமிழ்நீர் ஓட்டம் குறைவதால் தான். இதனால் தான் பாக்டீரியாவை கையாளும் வகையில் இருக்கிறது மற்றும் துர்நாற்றத்தையும் வீசுகிறது.
8.புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்: அடிக்கடி புகை பிடிப்பதன்மூலம் நம் வாயில் உள்ள துவாரங்களில் பாதிப்பு ஏற்பட்டு துர்நாற்றத்தை வெளியிடுகிறது. மது அருந்துதல் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் இவை வாய் துவாரத்தை பாதித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.
9.வாய் உலரும் பிரச்சனை: வயதாக வயதாக நம் வாயில் உமிழ்நீர் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். இதுவே வாய் துர்நாற்றத்திற்கு காரணம். இதனை தடுக்க தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
வாய் துர்நாற்றம் அறிகுறிகள்:
- வாய் துர்நாற்றமானது நமக்கு தெரிவதற்கு முன்னரே நம்மை சுற்றியுள்ளவர்கள் கண்டுபிடித்து விடுகின்றன.
- வாய் துர்நாற்றதின் முக்கிய அறிகுறி வாயில் இருந்து துர்நாற்றம் வருவதே ஆகும்.
- வாய் துர்நாற்றம் உடையவர்களின் வாய் எப்பொழுதுமே உளர்ந்தே காணப்படும்.
- வாயில் தொடர்ந்து புளிப்பு மற்றும் கசப்பான சுவை இருத்தல்.
- நம் உண்ணும் உணவின் சுவையை சரியாக உணர முடியாது. அதேபோல், நாக்கில் வெள்ளைப்பூச்சு, பிந்தைய நாசி சொட்டு போன்றவை அனுபவிக்கப்படும்.
- அதனோடு தொண்டையை அடிக்கடி துடைக்க வேண்டியதாகிருக்கும்.
- வாய் துர்நாற்றத்தை ஆரம்ப கட்டத்தில் யாருமே கண்டு கொள்வதில்லை. இதன் அறிகுறிகள் மோசமாகிய பிறகு துர்நாற்றம் அதிகரித்த பின்னரே கவனித்து சரிசெய்ய எண்ணுகின்றனர்.
வீட்டு வைத்தியம்:
வாய் துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிப்பது ஒன்றும் கடினம் அல்ல. தினமும் சரியான வாய்வழி சுகாதாரத்தை கடைபிடித்தாலே துர்நாற்றம் வராமல் தடுக்க முடியும். வாயில் துர்நாற்றம் வருமேயானால் உடலில் வேறு எந்த பகுதியிலோ குறைபாடு இருக்கிறது என்பதை குறிக்கிறது.

பண்டைய காலங்களிலே பல்வேறு நோய்களை குணப்படுத்த வீட்டு வைத்தியத்தை கையாண்டனர். எனவே, நம் வாயை புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க சிறிய குறிப்புகளை பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல்: வாய் துர்நாற்றத்தை தடுக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்லை துலக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதால் வாயில் உள்ள கேட்ட பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அத்தோடு இரவில் தூங்குவதற்கு முன்பு பல் துலக்க வேண்டும். இதனால் நம் வாயில் எஞ்சியுள்ள உணவு துகள்களை நீக்க முடியும்.
பல்துலக்கியை மாற்றுவது அவசியம்: தினமும் உபயோகிக்கும் பல் துலக்கியில் பாக்டீரியாக்கள் நிறைய தங்கியிருக்கும். நம் தூரிகையின் முற்கள் ஒருகட்டத்தில் சிதைந்து அதன் செயல்திறனை குறைகிறது. எனவே, மாதத்திற்கு ஒரு முறை பல் துலக்கியை மாற்ற வேண்டியது அவசியம்.
உப்பு நீரால் வாயை கொப்பளிக்கவும்: தண்ணீரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி கொள்ளவும். பின்னர், இதனை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதன் மூலம் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அத்தோடு வாயை புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது.
துளசி: துளசியில் குளோரோபில் நிறைந்துள்ளது. இது வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. சில துளசி இலைகளை நேரடியாக வாயில் போட்டு மெல்லலாம். அத்தோடு துளசியை அரைத்து அதன் பொடியை வைத்து தேநீர் செய்து குடிப்பதன் மூலமும் வாய் துர்நாற்றத்தை குறைக்க முடிகிறதது.
மவுத்வாசரை பயன்படுத்தவும்: மவுத்வாசரை பயன்படுத்துவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் உணவு துகள்களை அழிக்க உதவுகிறது. இவை வாய் துர்நாற்றத்தை குறைத்து இனிமையான வாசனையை தருகிறது.
ஆல்கஹால் இல்லாத மௌத்வாசரை பயன்படுத்துவது வாயை அதிக புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, நம் உபயோகிக்கும் மௌத்வாசரில் எத்தனால் இருந்தால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், ஆல்கஹால் நம் வாயின் உட்புறத்தை வறண்டு நீரேற்றம் இல்லாமலும் வைத்திருக்கிறது.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்: நம் அனைவருமே அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது பருக வேண்டியது அவசியம். அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் தான் நம் உடல் நீரேற்றத்துடன் இருக்கிறது. உடல் நீரேற்றத்துடன் இருப்பதன் மூலம் உமிழ்நீரானது பிசுபிசுவென ஆகும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் வாயை சுத்தம் செய்து உடலின் உணவு குப்பைகளையும் சுத்தம் செய்கிறது.
தினமும் காலையில் நாக்கை துடைக்கவும்: நாம் தினமும் காலையில் எழுந்த பிறகு பல் துலக்கிய பின்னர் வாயை நன்கு தேய்த்து துடைக்க வேண்டும். ஏனெனில், நாக்கில் உள்ள பாக்டீரியாக்கள் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாகிறது. நம் நாக்கை பின்னால் இருந்து முன்னால் வரும்படு பல்துலக்கியின் பின்புறத்தை பயன்பயடுத்துவதன் மூலம் நாக்கு சுத்தமாகிறது.
புகைபிடித்தலை கைவிடவும்: புகைபிடித்தல் மற்றும் புகையிலையை பயன்படுத்துதல் பல் ஈறுகளை சேதப்படுத்தும் மற்றும் பற்களை கறைபடுத்துகிறது. இதனால், வாயில் துர்நாற்றமும் புற்றுநோயும் ஏற்பட காரணமாகிறது. எனவே, புகைப்பிடித்தலை கைவிடுவது மிக நல்லது.
உணவு சாப்பிட பிறகு வாயை கொப்பளிக்கவும்: நம் ஒவ்வொரு முறை உணவை சாப்பிட்ட பிறகும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் பற்களில் சிக்கியுள்ள உணவு துகள்கள் வெளியே வருகின்றன. இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியே வருகின்றன.
இயற்கை மூலிகைகளை உணவிற்கி பின்னர் சாப்பிடுதல்: கிராம்பு, லவங்கப்பட்டை, பெருஞ்சீரக விதைகள், வோக்கோசு, மிளகுக்கீரை ஆகிய மூலிகை மற்றும் மசாலா பொருட்களை மதியம் அல்லது இரவு உணவிற்கு பிறகு குறைந்த அளவு எடுத்து மென்று சாப்பிடவும். இதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
எலுமிச்சை: எலுமிச்சைப்பழம் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் சிட்ரிக் வாசனையை பெற சிறிதளவு எலுமிச்சை துண்டை எடுத்து நன்கு மெல்ல வேண்டும். இதிலுள்ள சிட்ரிக் அமிலம் உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் வாய் துர்நாற்றத்தை குறைகிறது.
ஆப்பிள் சீடர் வினிகர்: இவை இயற்கையாகவே அசிட்டிக் அமிலத்தை கொண்டுள்ளது. எனவே இதனை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிப்பதன் மூலம் வாயிலுள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு துர்நாற்றம் வருவதை குறைகிறது.
வாய் துர்நாற்றம் நீங்க: தவிர்க்கவேண்டிய செயல்கள்
வாய் துர்நாற்றம் நம்மில் காணப்படும் பொதுவான பிரச்சனையே ஆகும். இவை குறைந்த சுயமரியாதை உணர்வை நமக்கு கொடுக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறையில் உடலிற்கு அதிக தீங்கு விளைவிக்கும் செயல்களையே நாம் செய்கின்றோம். நாம் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து வாழ்க்கை முறையை கடைபிடிப்பது நல்லது.

- பல்துலக்காமல் இருப்பதை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம் பற்களிலும் நாக்கின் அடியிலும் தான் கிருமிகள் தங்கி நாற்றத்தை வெளியிடுகின்றன. எனவே, பல்லை நன்கு துலக்க வேண்டும்.
சர்க்கரை உள்ள சுவிங்கம்களை அதிக அளவு மெல்லுவதை தவிர்க்கவும்.
இரவில் உணவு சாப்பிட்ட உடனே தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு சர்க்கரை உள்ள பானங்களையும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
புகையிலை மற்றும் புகைபிடித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எனவே, குறைவாக அவ்வப்போது பசிக்கும்போது செரிமானம் ஆகுற அளவிற்கு சாப்பிடலாம். - செயற்கை பற்களை பயன்படுத்துபவர்கள் அதை இரவிலும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தூங்கும்பொழுது செயற்கை பற்களை கழட்டி வைத்து விட்டு தூங்க வேண்டும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.