இருமலானது நாம் பொதுவாக அனுபவிக்கும் உடல்நல பிரச்சனைகளில் ஒன்று ஆகும். இதன் ஆரம்ப கட்டத்தில் கவலைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் மாசுக்கள், உடல் உபாதைகள், கிருமிகள் ஆகிய பல்வேறு காரணங்களும் நம் இருமலை சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல், தொண்டையில் உட்புறத்தில் புண் அல்லது காயம் இருந்தாலும் கூட இருமல் வரும். நம் சுவாசப்பாதையில் அல்லது தொண்டையில் எதாவது எரிச்சல் ஏற்படுவதன் விளைவாகவே இருமல் வருகிறது. அதும், வானிலை மாற்றங்கள் அல்லது மலை காலங்களில் சளி போன்றவற்றுடன் இருமலும் சேர்ந்து வரும். இருமலானது குறைந்த காலமோ அல்லது குறைவாகவோ, அதிகமாகவோ அல்லது நிறைய நாள்கள் நீடிக்கும். இவை பொதுவாகவே 3 வாரங்களில் சரியாகிவிடும். அதற்கு மேலும் சரியாகவில்லை என்றால் இவை உடலிற்கு ஆபத்தையும் வாழ்க்கையின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இருமல் எப்போதாவது வருமானால் அவை சாதாரணமானவைமே ஆகும்.
Table of Contents
இருமல்:
சளி, பாக்டீரியா மற்றும் பிற திசுக்களை வெளியேற்றும் ஒரு பாதுகாப்பான அனிச்சையே இருமல் ஆகும். இருமல் நம் சுவாச பாதையில் ஏதேனும் சிக்கிக் கொண்டால் அதனை சுவாசக்குழாய் வழியாக எளிதில் வெளியேற்ற உதவுகிறது. தும்மல் மற்றும் கண் சிமிட்டுதகள் போலவே இவையும் பாதுகாப்பானவை தான். இவை காற்று பாதையையும் நுரையீரலையும் பாதுகாக்க உதவுகிறது. இருமலானது தொண்டை, நுரையீரல் மாசுபடும் போது அவற்றில் அலர்ஜி ஏற்பட்டு மாசை வெளியேற்ற நுரையீரலுக்கு உதவுகிறது. ஆகவே, நுரையீரலானது சுருங்கி விரியும் போது மாசுவை வெளியேற்றவே இருமல் வருகிறது. இந்த இருமலானது சீரான முறையில் நுரையீரலில் இருந்து தொண்டைக்கு செல்கிறது. பின்னர் இருமலானது தொண்டையிலிருந்து வாய் வழியாக வெளியே வருகிறது.
இருமலின் வகைகள்:
இருமல் அதன் அடிப்படை காரணத்தை பொறுத்து பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் இருமலானது இரண்டு வகையாக பிரிந்துள்ளது. அதாவது இரும்பினால் சத்தம் வருவதை ஒரு வகையாகவும் இரும்பும்போது சளியுடன் இருமல் வருவது ஒரு வகையாகும். எனவே, இருமலானது சளியின் நிறம், அதன் தன்மை மற்றும் இருமலின் அறிகுறிகளின் கால அளவை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.
- வறட்டு இருமல்: இருமல் ஏற்படும்போது சளி அல்லது சளியை உருவாக்காத இருமல் வறண்ட இரும்பல் ஆகும்.
- ஈரமான இருமல்: இருமல் ஏற்படும்போது சளியை உருவாக்கும் இரும்பல் ஈரமான இரும்பல் ஆகும். இத்தகைய இருமல் ஆஸ்துமா, நிமோனியா போன்றவற்றால் ஏற்படுகிறது.
- குரூப் இருமல்: இந்த வைரஸ் தொற்றானது நமது மேல் சுவாச பாதையில் வீக்கத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே சுவாசிப்பது கனினமாகிறது. இது அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கிறது.
- பிரக்சிஸ்மல் இருமல்: இந்த இருமலானது கடினமாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருக்கும். இதனால் சோர்வு மற்றும் வலி ஏற்படும்.
- கக்குவான் இருமல்: இது ஒரு கடுமையான சுவாச தொற்று நொய்யாகும். ஏனெனில், இது நுரையீரலில் இருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இதனால் இருமல் மோசமாக ஏற்படும். எனவே கண்டறியப்பட்ட உடனே இதற்கு சிகிச்சை தொடங்குவது நல்லது.
- மூச்சுத்திணறல் இருமல்: நம் எப்பொழுதாவது உணவை சீக்கிரமாக சாப்பிட முயற்சிக்கும்போதோ அல்லது குழந்தைகள் வாயில் எதாவது போடுவதாலோ இந்த இருமல் ஏற்படும்.
- ஆஸ்துமா இருமல்: ஆஸ்துமாவால் நுரையீரல் வீங்கி காணப்படுவதால் இரும்பல் ஏற்படுகிறது.
- நாள்பட்ட இரும்பல்: நமக்கு ஏற்படும் இருமலானது 8 வாரங்கள் கடந்தும் நீடித்தால் நாள்பட்ட இருமல் எனப்படுகிறது.
இருமலிற்கான கரணங்கள்:
- நாம் அனைவருக்கும் இருமல் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இப்படி ஏற்படும் இரும்பலானது அசௌவரியதையும் உடலிற்கு சோர்வையும் தருகிறது.
- நமது உடலில் சளியின் அளவானது அதிகமாக இருக்குமேயானால் இருமல் அடிக்கடி வருகிறது.நம் வாயிலோ அல்லது மூக்கிலோ பாக்டீரியா தொற்று, வைரஸ் தொற்று ஏற்படுவதாலும் இருமல் வருகிறது.
- நமக்கு ஆக்ஸிஜனின் அளவு அதிகமாக அல்லது குறைவாக கிடைக்கும்போது இருமல் ஏற்படும்.புகை பிடிப்பவர்களின் சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலின் உட்புறத்தில் ரசாயனத்தை உடல் வெளியேற்ற முயல்வதால் இரும்பல் ஏற்படுகிறது.
- செல்லப்பிராணிகள், பூச்சிகள் ஆகியவை ஏற்படுத்தும் ஒவ்வாமை இருமலை ஏற்படுத்தும்.
- காய்ச்சல் இருப்பவர்களுக்கும் இருமல் ஏற்படுகிறது.தொண்டையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சீர்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு கரகரப்பான குரலும் இருமலுக்கு காரணமாகிறது.
- நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாலும் இருமல் ஏற்படுகிறது. இதன் விளைவாக நுரையீரலில் அதிகப்படியான சளி உற்பத்தி ஆகிறது. இது இருமலுக்கு வழிவகுக்கும். இத்தகைய அதிகப்படியான சளியை இருமலால் முழுவதும் அகற்ற முடியாததால் உடலில் ஆங்காங்கே ஒட்டி கொள்கிறது.
- அதிக நேரம் கத்தி பேசுவதால் இருமல் வரும். மனஅழுத்தம் மற்றும் பதட்டம் கூட இருமல் வர காரணமாகிறது.
- இருமல் வர காசநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும் ஒரு காரணமாகும்.
- கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா, மேல் சுவாச தொற்று, எரிச்சல் அல்லது ஒவ்வாமையை உள்ளிழுத்தல், சிஸ்டிக் பைவரோலிஸ், மூச்சுக்குழாய் அடைப்பு, நுரையீரல் தக்கையடைப்பு, இரைப்பை உணவுக்குழாய் ரெப்ளக்ஸ் நோய்(GERD), நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய் ஆகிய பல காரணங்களால் இருமல் ஏற்படுகிறது.
இருமலிற்கான அறிகுறிகள்:
- நாம் பொதுவாகவே இருமலை ஒரு நோய் என்று நிகைக்கிறோம். ஆனால், இருமலானது நமது காற்றுப்பாதையில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இருமல் இருப்பதை கண்டறிய ஒரு சில அறிகுறிகளை பார்க்கலாம். தலையில் பொறுக்க முடியாத அளவு வலி ஏற்படுவது.
- சரியாக தூங்க முடியாமல் போதல்.
- அதிக வியர்வை ஏற்படுத்தும் மற்றும் வாந்தி வருதல்.
- நம் இருமும்போது கக்குவான் சத்தம் வந்தால் கக்குவான் இருமல் என்று அர்த்தம். இதனை லூப்பிங் ஒலி என்கிறோம்.
- மார்பில் வலி அல்லது இறுக்கமாக இருப்பது.
நாம் பேசும்போது குரலானது கரகரப்பாக இருக்கும்.
எப்பொழுதும் வாய் உலர்ந்து இருப்பது.
மீண்டும் மீண்டும் இருமல் தொடர்ந்து ஏற்படுதல்.
அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவது.
சளி மற்றும் காய்ச்சல் வருவது.
எப்பொழுதுமே சோர்வாக காணப்படுவது.
தொண்டையில் வலி ஏற்படுதல்.
இருமலை குறைக்க வீட்டு வைத்தியம்:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்களை வைத்தே இருமலை குணப்படுத்த முடியும். மாறிவரும் பருவநிலை மாற்றங்களால் இருமல், சளி ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால், இதனை செய்தும் ஒரு வாரமாகியும் குணமாகாமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
- தேன்: தேன் இயற்கையாகவே நோயை குணப்படுத்தும் தன்மையையும் சுவாச கோளாறுகளை குறைக்கவும் பயன்படுகிறது. இது வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டுள்ளதால் நமக்கு ஏற்படும் இருமலின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீருடன் தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் குறையும்.
- கிரீன்டீ மற்றும் சூப்: சூடான பானங்களான கிரீன்டீ, சூப் போன்றவற்றை அருந்துவதால் இருமலை குறைக்க முடிகிறது.
கிராம்பு: கிராம்பை நெய்யில் வறுத்த பின்னர் வாயில் வைத்து நன்கு உறிஞ்ச வேண்டும். இதன்மூலம் இருமலை எளிதில் குறைக்க முடிகிறது. - மிளகு கீரை: நம் ஆரோக்கியத்திற்கு மிளகு கீரை நல்லது. நாம் மிளகுக்கீரை தேநீர் அருந்துதல் அல்லது மிளகுக்கீரை நீராவியை சுவாசிப்பதால் நமது சுவாசம் சீராக செயல்பட்டு இருமல் குணமாகும்.
- இஞ்சி: இருமலை குறைக்கும் வீடு வைத்தியத்தில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. ஏனெனில், இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஆன்டி மைக்ரோபியன்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் இருமலை குறைக்க முடியும். இஞ்சி சாறு மற்றும் இஞ்சி டி ஆகியவற்றையும் அருந்தலாம்.
- எலுமிச்ச்சை: வெதுவெதுப்பான நீரில் எலுமிச்ச்சை சாரை கலந்து குடிப்பதால் இருமல் குறைகிறது.
- மஞ்சள்: மஞ்சள் பெரும்பாலும் அனைத்து நோய்களுக்கும் பிரபலமான வீட்டு வைத்தியமாகும். மஞ்சுளை பாலில் கலந்து மஞ்சள் பாலாக குடிக்கலாம். மஞ்சள் பயன்படுத்துவதால் இருமல் மற்றும் தொண்டைப்புண் விரைவில் சரியாகிறது. மஞ்சளில் குர்குமின் இருப்பதே இதற்கு காரணம். வறண்ட இருமலை நீக்க பாலுடன் மஞ்சள்தூள் மற்றும் மிளகு பொடி சேர்த்து சாப்பிடலாம்.
- துளசி: துளசியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. சிறிதளவு துளசி இலைகளை எடுத்து நன்கு மென்னு சாப்பிடுவதன்மூலம் இருமல் குறைய வாய்ப்பு உள்ளது.
- தைம்: பொதுவாகவே தைம் நுரையீரல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதனுடன் இரண்டு தேக்கரண்டி நொறுக்கப்பட்ட தைம் இலையை சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர், இதனை பயன்படுத்துவதன் மூலம் இருமல் சரியாகிறது.
- பூண்டு: பூண்டு காய்ச்சல் மற்றும் சளியை எதிர்த்து போராட உதவுகிறது. பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்திகள் நிறைய உள்ளன. நம் உண்ணும் உணவில் தினமும் ஒரு பகுதியாக பூண்டை சேர்ப்பதால் இருமலை குறைக்க முடியும்.
இருமலை குறைக்க பின்பற்ற வேண்டியவை:
- நம் மூக்கை அவ்வப்போது துணியால் துடைப்பதாலும் மெதுவாக ஊதுவதாலும் நாசிப்பதையில் உள்ள சளி நீங்குவதால் இருமல் வருவதை தடுக்கலாம்.
- உடலிற்கு தேவையான அளவு நீர்ச்சத்தினை பெறுவதன் மூலம் தொண்டையில் உள்ள சளியானது நீர்ந்து போக செய்கிறது.
- இதனால் சுவாசப்பாதையில் உள்ள தடைகள் அகற்றப்பட்டு இருமலும் ஏற்படுவது குறைகிறது.
- நாம் தூங்கும் விதத்தை மாற்றுவதன் மூலமும் இருமலை கட்டுப்படுத்தலாம். நாம் தூங்கும்போது எப்பொழுதும் தலைகாணியை கழுத்து மற்றும் தலைக்கு மேல் இருக்குமாறு வைத்து தூங்க வேண்டும்.
- எப்பொழுதும் இருமும்போது வாயை மூடி இரும வேண்டும். இப்படி செய்வதன்மூலம் நம் வாயில் உள்ள கிருமிகள் மற்றவர்கள் மீது பரவுவதை தடுக்க முடியும்.
- உப்பு நீரினால் வாயை கொப்பளிப்பதன் மூலம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து சளியை குறைகிறது. மேலும், இவை இருமலை முற்றிலும் குறைக்கிறது.
- வெதுவெதுப்பான பானங்களான டீ, வெந்நீர், சூப் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.
- கொதிக்க வைத்த நீரால் ஆவி பிடிப்பதன்மூலம் நாசி எரிச்சல் குணமாவதோடு சுவாசமும் எளிதாகிறது. இதனால் சளியானது குறைந்து இருமலை வர விடாமல் தடுக்கும்.
- நமக்கு எரிச்சலூட்டும் தூசு, புகை, நாற்றத்தை ஏற்படுத்தும் வாசனைகள், பூஞ்சை ஆகியவை இருமல் வருவதை தூண்டுகின்றன. எனவே இவற்றை தடுப்பது நல்லது. எப்பொழுதும் வேலை அல்லது எதையாவது யோசித்து ஏற்படும் மனஅழுத்தத்தை குறைத்து சிறிதளவு ஓய்வு எடுக்க வேண்டும்.
- புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
- போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வத்தையும் மாசு உள்ள இடத்திற்கு செல்வத்தையும் தவிர்க்கவும்.
- வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.