• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions
Monday, June 9, 2025
BFH News
No Result
View All Result
  • முகப்பு
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • பூஞ்சை நோய்கள்
  • வைரஸ் நோய்கள்
  • தொற்று நோய்கள்
  • முகப்பு
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • பூஞ்சை நோய்கள்
  • வைரஸ் நோய்கள்
  • தொற்று நோய்கள்
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home Health Tips

காது வலி எதனால் வரக்கூடும் எப்படி வீட்டிலேயே சரி செய்வது எளிய வழிமுறை!

Tamizharasan k by Tamizharasan k
June 7, 2025
in Health Tips
488 5
0
காது வலி
739
SHARES
3.5k
VIEWS
Share on Facebookhttps://www.facebook.com/profile.php?id=100018092919880Share on Twitterhttps://wa.me/qr/5HR2IDPTWT5YF1

நமது உடலில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை போலவே காதும் முக்கிய உறுப்பாகும். எனவே, காதை முறையாக பராமரிப்பது அவசியம். காது வலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத அளவுக்கு அதிக வலியை தரும். இதனால் ஏற்படும் வலி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்.

பொதுவாகவே, காது வலி காதில் ஏற்படும் அலர்ஜியால் வருகிறது. இந்த காது வலியானது அதிக அளவில் குழந்தைகளையே பாதிக்கிறது. பெரியவர்களுக்கும் உடலில் வேறு எங்கயாவது ஏற்படும் வலியின் காரணமாக கூட காது வலி வரும். காது வலி வந்தால் ஏதேனும் ஒரு காதை பாதிக்கலாம் அல்லது இரண்டு காதுகளையும் பாதிக்கலாம். ஆனால் அதிக அளவில் ஒரு காதை பாதிக்கிறது. காது வலி எப்போதும் அதிக வலியை தரும் அல்லது குறைந்து காணப்படும். அதேபோல், காது வலியானது விட்டு விட்டு ஏற்படும். இதனால் உடலில் அசௌகரியம் ஏற்படுகிறது.

READ ALSO

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

நமது காதுகளில் திரவம் குவிவதாலும் மந்தமான மற்றும் கூர்மையான வலி ஏற்படுகிறது. அதிக அளவு மன அழுத்தமே காது வலிக்கு முக்கிய காரணமாக உள்ளது. காது வலி பொதுவாகவே கொஞ்ச நேரத்தில் குணமாகும் அல்லது சிறிது நேரம் கழித்து குணமாகும். காது வலியானது மற்ற நேரங்களை விட குளிர்காலத்தில் அதிகம் வர வாய்ப்புள்ளது. ஏனெனில், இதற்கு மூளையையும் காதையும் இணைக்கும் யூஸ்டேஸன் குழாய் தான் காரணமே.

குளிர்காலத்தில் தான் வழக்கத்தை விட அதிக அளவு தூசி காற்றில் காணப்படும். இவை குளிர் காலத்தின்போது மூக்கின் வழியாக நுழையும் வறண்ட காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இதன் காரணமாகவே மூக்கு சவ்வுகள் இழுக்கப்பட்டு காது வலி ஏற்படுகிறது. நமது காதுகளில் எந்தவித கொழுப்பும் கிடையாது. அதனால் காதை சுற்றி பாதுகாக்க எந்த பாதுகாப்பு சுவரும் இல்லை. குளிர்காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிக காது வலி ஏற்படுகிறது. இதனை உரிய நேரத்தில் சரிசெய்வது நல்லது.

காது வலி:

பொதுவாகவே, காது நமது உடலின் கேட்கும் உறுப்புகளையும் நிலை உறுப்புகளையும் கட்டுப்படுத்தி சமநிலையில் வைக்கிறது. காது மட்டும் இல்லாவிட்டால் நம்மால் எதையும் கேட்க முடியாது. இதனால், பல அசௌவகரியங்கள் ஏற்பட்டு மனிதர்களுக்கிடையேயான பேச்சு வார்த்தை முற்றிலும் தடைபடும்.

நம் காதுக்கள் ஒவ்வொன்றும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற காது: இது காதின் வெளிப்புறம் ஆகும். இவை ஆரிக்கிள் மற்றும் காது கால்வாயை கொண்டுள்ளது. இதன் வேலையே ஒலி அலைகளை பிடித்து வைத்து அதனை பெருக்கி காது கால்வாயில் நகர்த்துவதே ஆகும்.

நடுத்தர காது: இவை வெளிப்புற காதிற்கும் உட்புற காதிற்கும் இடையில் அமைந்துள்ள திரவம் நிரப்பப்பட்ட பகுதியாகும். இதன் முக்கிய வேலையே உள்காதை பாதுகாப்பதும் ஒலி அலைகளை உள்காதிர்க்கு மாற்றுவதும் ஆகும்.

உள் காது: இவை கேட்கும் மற்றும் சமநிலையை பராமரிக்கும் உறுப்புகளை கொண்டுள்ளது. உள்காதின் முக்கிய பொறுப்பு ஒலி அலைகளை மூளைக்கு அனுப்பி மின் சமிச்சைகளாக மாற்றுவதாகும்.

காது வலி எதனால் வருகிறது:

காது வலிக்கு பல காரணங்கள் உள்ளது.

  • காதில் ஏற்படும் தொற்று காது வலிக்கு பொதுவான காரணமாகும். இவை பொதுவாகவே மற்ற நோய்களின் விளைவாகவோ அல்லது பல்வேறு வெளிப்புற காரணங்களாலோ ஏற்படுகிறது.
  • பொதுவாகவே காது வலியானது காதுகளில் உணரப்படும் பற்கள், தாடை அல்லது தொண்டை போன்ற வேறு சில பகுதிகளின் வலி காரணமாகும்.
  • நம் காதில் ஏற்படும் காயம், எரிச்சல் மற்றும் தொற்று காரணமாகவே வலி ஏற்படுகிறது.
  • காது தொற்று பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
  • தொண்டைப்புண், சளி போன்ற சுவாச பிரச்சனைகள் வந்த பிறகு வலியானது அடிக்கடி தொடரும்.
  • வெளிப்புறத்தில் ஏற்படும் காது தொற்றானது நீச்சல், காது கால்வாயில் ஹெட்போனை பயன்படுத்துவது‌, தோலை பாதிக்கும் பருத்தி துணியை காதில் வைப்பதாலும் இது ஏற்படுகிறது.
  • நடுத்தர காது தொற்றானது செவிப்பறைக்கும் காதின் நடுப்பகுதியிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது. செவிப்பறைக்கு பின்னால் திரவம் குவிவதற்கு இவை காரணமாகும்.
  • உள்காது தொற்றானது சில நேரங்களில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது.
  • பெரியவர்களுக்கு காது வலி ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன. அவை தாடை வலி,தாடை கீல்வாதம், பல் தொற்று, சைனஸ் தொற்று, தொண்டை தொற்று, காதில் பொருட்கள் பதிந்தன, காதில் அதிக அளவு நீர் தேங்குவதால், விமானத்தில் பறக்கும் போது உயர மாற்றங்களால் கூட காது வலியை ஏற்படுத்தும் துளையிடப்பட்ட காது ஒவ்வாமை போன்றவற்றாலும் காது வலி ஏற்படும்.

காது வலியின் அறிகுறிகள்:

நமது காதில் ஏற்படும் வலியானது காதில் ஏற்படும் அழுத்தத்தால் வருகிறது. இந்த வலியானது திடீரெனவோ அல்லது படிப்படியாகவோ தொடங்கி கடுமையான வழியை கொடுக்கிறது.

வலியானது ஒரு குறிப்பிட்ட இடத்தில ஆரம்பித்து காது முழுவதுமே வலி ஏற்படுகிறது.

காது வலிக்கான அறிகுறிகள் பெரியவர்களும் குழந்தைகளுக்கும் வேறுபாடும்.

பெரியவர்களுக்கு காய்ச்சல் வரும், அடிக்கடி காது கேட்காமல் இருப்பது, அதேபோல் காதில் இருந்து திரவம் வடிகால், அதிக அளவு சத்தம் காதில் கேட்டல் மற்றும் வெர்டிகோ ஆகியனவே அறிகுறிகளாகும்.

இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு காதில் எரிச்சல் ஏற்படும், காய்ச்சல் வரும் , காதை இழுத்தல், எப்பொழுதும் சாப்பிடாமல் இருப்பது அதாவது பசியின்மை, நிம்மதியாக தூங்க முடியாமல் சிரமப்படுவது , கேட்கும் ஒலிகளுக்கு பதிலளிப்பதில் சிரமம் ஏற்படுவது, வயிற்றுப்போக்கு, செவிப்புலன் பிரச்சனைகள், அடிக்கடி இழுப்பது அல்லது அழுவது மற்றும் சமநிலயை இழப்பது ஆகியவை அறிகுறிகளாகும்.

பொதுவாகவே, காது வலி வரும்போது அனைவருக்குமே தலை வலி, குமட்டல், காய்ச்சல், சாப்பிடும்போது மென்று சாப்பிட சிரமப்படுவது, கேட்கும் திறன் இழப்பு போன்றவை குறிப்பிடலாம்.

காது வலிக்கான எளிய வீட்டு மருத்துவம்:

காது வலிக்கான எளிய வீட்டு மருத்துவம்

காது வலி வந்தால் நிறைய சிரமங்களை நாம் அனுபவிக்க நேரிடும். இதை சமாளிப்பதே ஒரு சவாலாக கருதப்படுகிறது.

கிராம்பு: கிராம்பு வலி நிவாரணியாக செயல்படுகிறது. ஏனெனில், இதில் வலி நிவாரணி எனப்படும் கலவை உள்ளது. அதிக அளவு அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை காதுகளின் நோய்தொற்றுக்கு மருந்தாகவும் காது வழியை குறைக்கவும் பயன்படுகிறது.

அதிக காது வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையில் ஒரு கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின்னர் அதனை வடிகட்டி ஒன்று அல்லது இரண்டு சொட்டு காதில் விடுவதன் மூலம் காது வலி சரியாகும்.

துளசி: ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி மைக்ரோபையாடிக்ஸ் போன்ற பண்புகள் துளசியில் நிறைந்துள்ளது. அதோடு அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை காது வலியை குறைக்க உதவுகிறது.

காது வழியை சரிசெய்ய சில துளசி இலைகளை எடுத்து அரைத்து கொள்ளவும். பின்னர், இதனை வடிகட்டி சாற்றை மட்டும் ஒன்று அல்லது இரண்டு துளிகள் காதில் விடவும். இதனால் காது வலி முற்றிலும் குணமாக வாய்ப்புள்ளது.

பூண்டு: பல்வேறு பாக்டீரியாக்களுக்கு எதிரியாக பூண்டு செயல்படுகிறது. இவை வீக்கத்தை குறைக்கும் பண்பை அதிக அளவு கொண்டுள்ளது என அனைவருக்குமே நன்கு தெரியும். பூண்டு காது மற்றும் தொண்டையில் ஏற்படும் பாக்டீரியாக்களை குறைக்க உதவுகிறது. காது தொற்றினால் ஏற்படும் காது வலியை குறைக்க உதவுகிறது.

தினமும் ஒரு பல் பூண்டை நசுக்கி சாப்பிடலாம். அதேபோல், பூண்டில் தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து காதின் மேல்புறம் பூசலாம். காது வழியை குறைக்க யூக்கலிப்டஸ் எண்ணெய் மற்றும் பூண்டையும் சம அளவு எடுத்து சூடு பண்ணி ஆர வைக்கவும். பின்னர் வடிகட்டி 2 சொட்டு வலியுள்ள காதில் விட்டால் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயானது லேசான அதாவது காது வலி குறைவாக இருக்கும்போது பயன்படுத்தலாம். காது வலியை குறைக்க ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை சூடுபடுத்தி ஆறவிடவும். பின்னர் எந்த காதில் வலி உள்ளதோ அங்கே ஒன்று அல்லது இரண்டு சொட்டு விடவதன் மூலம் காது வலி குறைகிறது.

வெங்காயம்: வெங்காயம் மிக எளிதில் வீட்டிலேயே கிடைக்கின்றன. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், ஆன்டிபையோட்டிக் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. ஒன்று அல்லது இரண்டு வெங்காயத்தை அரைத்து அதிலுள்ள திரவத்தை வடிகட்டவும். பின்னர் இதனை வலியுள்ள காதில் 3 சொட்டு விடுவதன் மூலம் காது வலி குணமாகும்.

சூயிங் கம்: நம் விமானத்தில் பயணிக்கும்போது ஏற்படும் காற்றழுத்த வேறுபட்டாலும் கூட காது வலி வரும். இதை பயன்படுத்துவதால் நடுத்தர காதின் அழுத்தத்தை குறைக்க மிகவும் அழுத்தமுள்ளதாக இருக்கும்.

சிறிதளவு தில்ல எண்ணெய்யில் ஒருசில கிராம்பு மற்றும் பூண்டை சேர்த்து நன்கு சூடாக்க வேண்டும். இதை வடிகட்டி ஒருசில துளி எண்ணையை காதின் வெளிப்புறம் தடவினாலே காதுவலி சரிசெய்கிறது.

அஜ்வின்: காது வழியை சமாளிக்க அஜ்வின் விதைகள் உதவுகிறது. ஒரு சில அஜ்வின் விதைகளை எடுத்து சில பூண்டு பற்களை சேர்த்துவிடவும். இவை நன்கு சூடாக்கி ஆர விடவும். பின்னர், இதனை வடிகட்டி 2 சொட்டு வலியுள்ள காதில் விடுவதன் மூலம் காது வலி குணமாக வாய்ப்புள்ளது.

டில்(எள்): டில் என்பது எள் எண்ணெய் விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் ஆயுர்வேத பயன்பாட்டில் மேலாண்மை நிலைமைக்கு உதவுகிறது. வீட்டிலேயே காது வழியை குணப்படுத்த இவை முக்கிய பொருளாக கடுத்தப்படுகிறது. இது காது மெழுகை மென்மையாக்க உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் நொறுக்கப்பட்ட பூண்டு மற்றும் கிராம்பு சேர்க்கவும். அதனுடன் சிறிது எல் எண்ணையை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அவை நிறமாகும் வரையிலும் கொதிக்க விடவும். பின்னர் இதனை வடிகட்டி வலியுள்ள காதில் 3 சொட்டு விடுவதன் மூலம் காது வலியை குறைக்கலாம்.

காது வலிக்கு செய்ய வேண்டியவை:

  • காதிற்கு அடிக்கடி குளிர் மற்றும் வெப்ப பொதிகளை வைக்கலாம். ஹீட்டிங் பாட்டிலில் வரும் வெப்பமானது தசைகளை தளர்ந்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி காதின் அழுத்தம் குறைக்கப்பட்டு காது வலி காணாமலே போய்விடும்.
  • குளிர் வெப்பநிலையானது வலியையும் வீக்கத்தையும் குறைகிறது.
  • வெதுவெதுப்பான உப்பு நீரினால் வாய் கொப்பளிப்பதன் மூலமாகவும் காதின் அழுத்தம் மாற்றப்படுகிறது. இதனால், காது வலியை குறைக்க காதிலுள்ள திரவம் வெளியேற்றப்படுகிறது.
  • கழுத்து சுழற்சி பயிற்சிகளை செய்வது நல்லது. ஏனெனில் வெவ்வேறு கழுத்து சுழற்சி பயிற்சிகள் செய்வதால் காது கால்வாயில் அழுத்தங்கள் ஏற்படும் காதுவலிக்கு சிகிச்சையளிப்பது சுலபமானது.
  • ஆவி பிடிப்பதன் மூலம் உடலிற்குல் போகும் நீராவியானது காது வலியை குறைக்க உதவுகிறது.
  • தூங்கும் நிலையை மாற்றுவதன் மூலமும் காது வலியை குறைக்கலாம். பாதிக்கப்பட்ட காதை தலையணையின் மீது வைத்து தூங்காமல் இருக்கவேண்டும். அளவில் சிறிய தலையணையை பயன்படுத்துவது நல்லது.
  • காதில் மென்மையாக மசாஜ் செய்வது காது வலியையும் தலை வலியையும் குறைக்கும்.

காது வலிக்கு‌ தவிர்க்க வேண்டியவை:

  • நீச்சலடித்தல் மற்றும் குளித்த பிறகு காது ஈரமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • புகை பிடித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • இயர்பட்ஸ் பயன்பாடு கூட அதிக அளவு காது கோளாறுகளுக்கு காரணமாகிறது. ஏனெனில், இதன் வழியே காதிற்கு கேட்கும் ஒலியானது அதிக அதிர்வுகளை வெளிப்படுத்தும். அதிக நேரம் இயர்பட்ஸ் அணிவதை தடுக்க வேண்டும்.
  • கூர்மையான பொருட்களை வைத்து காதை குத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • இறுக்கமான தலைக்கவசம் மற்றும் சரியாக பொருத்தப்பட்டது தலைக்கவசம் அணிவதை முற்றிலும் தவிர்க்கவும்.
  • மிகவும் கடினமாக உள்ள இடங்களில் தூங்குவதை தவிர்க்கவும்.
  • நம் காதுகளை சுத்தம் செய்ய பட்ஸை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதற்குப் பதிலாக காட்டன் துணியை பயன்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Related Posts

நகத்தின் நிறம் மாற காரணம்
Health Tips

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

May 25, 2025
நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?
Health Tips

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

May 25, 2025
பரம்பரை நோய்கள்
Health Tips

பரம்பரை நோய்கள்: உங்கள் உடலின் மரபியல் ரகசியங்கள்!

June 6, 2025
"Create a realistic illustration showing a person with visible dark circles under their eyes. The focus should be on the face, especially the tired-looking eyes with prominent under-eye darkness. Include subtle signs of fatigue such as puffy eyes, dull skin, or slightly drooped eyelids. Next to the person, display natural remedies like cucumber slices, aloe vera gel, rose water, and a bowl of cold green tea bags to visually suggest home treatments. The setting should feel calm and home-like, using soft lighting and neutral tones. No words or labels in the image—only clear visuals
Health Tips

கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!

May 25, 2025
ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!
Health Tips

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

May 25, 2025
கடலை மாவின் அழகு அதிசயங்கள்
Health Tips

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

May 25, 2025
Next Post
வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காரணம் முதல் சரியான சிகிச்சை வரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

May 25, 2025
இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

May 11, 2025

EDITOR'S PICK

கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது

கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது எப்படி?

May 11, 2025
தலை வலி

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

June 7, 2025
இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

June 7, 2025
தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

June 7, 2025

Categories

  • Health Tips

Recent Posts

  • நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்
  • நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?
  • பரம்பரை நோய்கள்: உங்கள் உடலின் மரபியல் ரகசியங்கள்!
  • கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions

Copyright (c) 2025 BFH News All Right Reseved

No Result
View All Result
  • முகப்பு
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • பூஞ்சை நோய்கள்
  • வைரஸ் நோய்கள்
  • தொற்று நோய்கள்

Copyright (c) 2025 BFH News All Right Reseved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In