Table of Contents
நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை செய்யும் இடத்தில அதிகாரிகள் கண்டிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை மனதில் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். நம்மில் முக்கால்வாசி பேருக்கு இதே நிலைமை தான். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்குறது. இதுவே, இறுதியில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது.
மருந்து மாத்திரைகளின் உதவியின்றி ரத்த அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் உணவில் மாற்றத்தையும் போதிய உடற்பயிற்சியினை செய்ய வேண்டும். இதனால், இயற்கையாகவே ரத்த அழுத்தத்தின் அளவை நம்மால் கட்டுக்குள் வைக்க முடிகிறது. இன்றைய காலத்தில் இளம்வயதினிலே நூற்றில் பத்து பேருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இவை சாதாரணமாக கருதினாலும் இவை நம் உடலிற்கு தீங்கானவை. அதாவது மாரடைப்பு,பக்கவாதம், கண் பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
ரத்த அழுத்தம்:
இருதயத்தில் ரத்த ஓட்டத்தால் ஏற்படும் அழுத்தத்தையே ரத்த அழுத்தம் என்கிறோம். அதாவது தமனிகள் மற்றும் நரம்புகளின் சுவருக்கும் செலுத்தப்படும் அழுத்தமே ஆகும். இவை இதய தசைகளின் சுருக்கத்தால் உற்பத்தி ஆகிறது. இப்படி தான் நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது.
நமது ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். ரத்த அழுத்தமானது நம் உடலில் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆக்ஸிஜனையும் கொடுக்கிறது. அதேபோல், உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை நீக்கி இன்சுலின் போன்ற ஹார்மோன்களை கொண்டு செல்கிறது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடல் உறுப்புகளை பாதுகாக்க வெள்ளையணுக்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது.
நம் உடலில் ரத்தம் ஆற்றில் தண்ணீர் எப்படி ஓடுகிறதோ அதேபோல தான் ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. ரத்த அழுத்தமானது நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடனே இருக்கும். அதாவது விழித்திருக்கும்போது சுறுசுறுப்பாகவும் அதிகமாகவும் இருக்கும். அதேபோல் தூங்கும்போது குறைந்தும் காணப்படும். இவை உடலிற்கு பெரிய ஆபத்தை உண்டாகும். அதிலும் ஒருசில நேரங்களில் உயிருக்கே பாதிப்பை எப்படுத்தும்.
ரத்த அழுத்தத்தின் வகைகள்:
பொதுவாகவே நம் உடலில் ரத்த அழுத்தம் சீரான சுழற்சியில் நடைபெற வேண்டும். ரத்த அழுத்தமானது சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் மற்றும் டையாலிஸ்டிக் ரத்த அழுத்தம் என பிரிக்கப்படுகிறது. பாதரசகுழாய் மூலமும் ஸ்பிக்மோமநோமீட்டர் மூலமும் ரத்த அழுத்தம் அளவிடப்படுகிறது. இவை மில்லிமீட்டர்களில் பாதரசத்தின் அளவை அளவிடுகிறது. டையாலிஸ்டிக் அழுத்தத்தின் மீது சிஸ்டாலிக் அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. மருத்துவமனையில் பொதுவாகவே அளவிடப்படும் அளவுகளில் ஒன்று ரத்த அழுத்தம்.
- உயர் ரத்த அழுத்தம்: நம் உடலில் ரத்தத்தின் அளவானது ஆரோக்கியமற்று இருக்கவேண்டிய அளவை விட அதிகமாக இருப்பதே உயர் ரத்த அளவு ஆகும். ஓய்வு ரத்த அழுத்தமானது தொடர்ந்து 130/80mmHg அல்லது 140/90mmHg மற்றும் இதற்கும் மேல் இருப்பதே உயர் ரத்த அழுத்தம் எனப்படும்.
- குறைந்த ரத்த அழுத்தம்: நம்மில் பெரும்பாலும் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி அறிவதில்லை. அதாவது ஒரு நபரின் சாதாரண ரத்த அழுத்த அவளைவிட குறைவாக அழுத்தம் இருப்பதையே குறைந்த ரத்த அழுத்தம் என்கிறோம். இதனால் சோர்வு, தலைசுற்றல், மயக்கம் ஆகியவை ஏற்படும். அதாவது 90/60mmHg அளவை விட குறைவாக ரத்தம் அழுத்தம் இருப்பவர்கள் குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்களே ஆகும்.
- இயல்பான ரத்த அழுத்தம்: இது தான் நம் உடலின் ஆரோக்கியமான நிலை ஆகும். இதனாலே உடலில் ரத்த அழுத்தமானது சீராக உடலில் பரவுகிறது. அதில் ரத்த அழுத்தமானது 100/70mmHg முதல் 140/90mmHg வரை உள்ள ரத்த அழுத்தம் ஆரோக்கியமானது ஆகும். இயல்பான ரத்த அழுத்தமே உடலின் சீரான இயக்கத்திற்கு காரணமாகிறது. இதனால் நமது உடலும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்:
ரத்த அழுத்தம் உருவாவதற்கு ஒன்றல்ல பல காரணிகள் உள்ளன.
அவை பரம்பரை மரபணுக்கள்,உடல் பருமன், புகை பிடித்தல், போதிய உடலுழைப்பு இல்லாததால், முதுமை, அதிகப்படியான மது அருந்துதல், மனஅழுத்தம், மூச்சுத்திணறல், அதிக அளவு உப்பை உணவில் சேர்த்தல், செயலற்ற தன்மை என பல்வேறு காரணிகள் ரத்த அழுத்தத்தை சீர்குலைக்கின்றன.
இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்:
ரத்த அழுத்தம் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் தருவதில்லை. எனவே, இவை அமைதியான கொலையாளி என அழைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு நிறைய அறிகுறிகளை ஆரம்பத்திலேயே காட்டுகிறது.
- அவை அடிக்கடி எதையாவது நினைத்து பதற்றமாகவே இருப்பது. இது பொதுவான ஒன்றாக இருந்தாலும் மனஅழுத்தம் உடையவர்கள் அடிக்கடி பதற்றமாகி, கோவபடுவது ரத்த அழுத்தத்தினால் ஏற்படும்.
- அதேபோல், காலையில் எழும்போது மயக்கமாக இருப்பது ரத்த அழுத்தத்திற்கான காரணமே.
- தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது. அதிலும் காலையில் எழும்போது தலைவலி உயிர் போகிற அளவிற்கு வலிக்கும்.
- எந்தவித அறிகுறியும் இல்லாமலே மூக்கில் இருந்து ரத்தம் வருவது.
- எப்படி மூக்கிலிருந்து ரத்தம் வடிக்குறதோ அதேபோல் சிறுநீரிலும் ரத்தம் வரும்.
- பொதுவாகவே ரத்த அழுத்தம் அதிகமாக இருக்குமேயானால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும்.
- பின்னர், கொஞ்ச தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுதல்.
- இதய துடிப்பு அளவிற்கி அதிகமாக துடிப்பதும் ஒரு அறிகுறியாகும்.
- ஒருசில சமயங்களில் வாந்தி, மயக்கமும் தொடர்ந்து வரும். இதனால், இவர்கள் எப்பவும் சோர்வாகவே இருப்பார்கள்.
- பேசுவதில் சிரமம் மற்றும் மங்கலான பார்வைகூட இதன் அறிகுறிகளாகும்.
ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே சரிசெய்யலாம்:
நம் இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் உடல் உழைப்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடல் உழைப்பே ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைப்பது என்பது வாழ்நாள் செயல்பாடாகும். நம் உண்ணும் உணவு பழக்கங்களை மாற்றுவதன் மூலமும் சரியான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் தினசரி பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாலும் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. என்னென்ன வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.

1.ஆரோக்கியமான உணவு:
நல்ல ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவை உண்பது உடல் ஆரோக்கியத்தையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
இவற்றில் தாது உப்புகள், விட்டமின்கள், புரதம், நார்ச்சத்துக்கள் அதிக அளவு உள்ளன.
ரத்த அழுத்தத்திற்கு அதிக அளவில் வாழைப்பழம், வெள்ளரிக்காய், இனிப்பு உருளைக்கிழங்கு, தக்காளி, செலரி, டார்க் சாக்லேட்,கிரீன் டீ, பெர்ரி, பீட், முழு தானியங்கள், பூண்டு, கொழுப்பு மீன், தயிர் ஆகியவற்றை அதிக அளவு சாப்பிட வேண்டும்.
உண்ணும் உணவில் அதிக அளவு கீரைகள், கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளை சேர்த்து கொள்ளவும்.
2.மது அருந்துவதை குறைக்கவும்:
அதிக அளவு மது அருந்துவதும் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுகிறது.
3.புகை பிடித்தலை குறைத்தல்:
ரத்த அழுத்தத்தை அதிகரிக்க புகையிலை கூட ஒரு காரணமாக கருதப்படுகிறது. தொடர்ந்து புகை பிடித்தல் மற்றும் புகையிலையை மெல்லுவதால் ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கிறது. சிகிரெட்டில் உள்ள நிகோடின் நமது இதயகுழாயில் பாய்ந்து செல்லும் ரத்தத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பல்வேறு உடல்நல குறைபாடுகள் வருகின்றன. இந்த பழக்கம் உள்ளவர்கள் புகைப்பிடித்தலை குறைத்தால் மட்டுமே ரத்த அழுத்தம் சீராக காணப்படும்.
4.தூக்கத்தை கட்டுப்படுத்தவும்:
அதிக நேரம் தூங்குவது கூட இரத்த அழுத்தத்தை அப்படியே குறைக்க செய்கிறது. இதனால் உடலில் மயக்கம், பதற்றம், தலை சுத்துதல் ஆகியவை ஏற்படும். எனவே, போதிய அளவு தூக்கம் உடலிற்கு தேவை. அதாவது நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். நமது உடல் இரவில் தான் தூங்குவதை ஏற்கிறது. பகலில் தூங்குவதால் ரத்த அழுத்தம் தடைபட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுக்க வழிசெய்கிறது.
5.மனஅழுத்தத்தை குறைக்கவும்:
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலபேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு எதையாவது நினைத்து கவலையாகவே உள்ளனர். மனஅழுத்தத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மனஅழுத்தத்தை அடியோடு தகர்த்து மகிழ்ச்சியாக வாழ்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
6.உடல் எடையை குறைக்க வேண்டும்:
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளில் முக்கியமானது உடல் பருமன். அதிக உடல் எடை இதயத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். நம் உடலில் எடை அதிகரிக்க அதிகரிக்க ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். அதற்கான போதிய உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்களை பின்பற்றி உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
7.மருந்துகள்:
மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஸ்டீராய்டு இல்லாத அலர்ஜி எதிர்ப்பு மருந்துகள் ரத்த அழுத்தத்திற்கு ஆபத்தானவையே.
8.தண்ணீர் மேலாண்மை:
நாள் ஒன்றிற்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதற்கேற்ற அளவுக்கு நமது உடல் சுறுசுறுப்பாகவும் புதத்துணர்சியாகவும் இருக்க உதவும். போதிய தண்ணீர் குடிப்பது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.
9.உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைக்கவும்:
ரத்த அழுத்தத்தை தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் உண்ணும் உணவில் உப்பின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஏனெனில், சோடியம் உட்கொள்ளுவது ரத்த அழுத்தத்தின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே உணவில் உப்பின் அளவு குறைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
10.உடற்பயிற்சி:
பொதுவாகவே நாம் அனைவருமே உடற்பயிற்சியினை செய்ய சிரமப்படுகிறோம். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள தசைகளும் எலும்புகளும் அரோக்கியமாக இருக்கின்றது. இதனால், ரத்த அழுத்தமானது சீராக செயல்பட உதவுகிறது.
இன்றைய சுற்றுச்சூழல் காரணிகளை அடிப்படையாக கொண்டு ரத்த அழுத்தத்தை குறைக்க ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓடுதல் ஆகியவை பரிந்துரைக்க படுகின்றன. தசைகளை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சிகளான வால் ஸ்குவாட்ஸ், பிளாங் ஆகியவை எளிதில் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
தினமும் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும். அதேபோல், உடற்பயிற்சிகளை வாரத்திற்கு 5 நாட்களில் காலையிலோ அல்லது மாலையிலோ 45 நிமிடங்கள் செய்வது ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
பழு தூக்குதல், ஜாகிங் மற்றும் எடை தூக்குதல் ஆகியவை அதிக கலோரிகளை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நம் உடலில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரித்தால் ரத்த ஓட்டம் சீராக ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். தினசரி யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்வதனால் ரத்த அழுத்தத்தை குறைக்க முடிகிறது.
தவிர்க்க வேண்டியவை:

- எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகளான பலகாரங்கள், சிப்ஸ், பக்கோடா ஆகியவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.
- ஒரே இடத்தில பல மணி நேரம் உடலுழைப்பு இல்லாமல் இருப்பதை தவிர்க்கலாம்.
- பாக்கெட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை குறைக்க வேண்டும்.
- மதிய நேரத்தில் அதிகமாக தூங்காமல் இருக்க வேண்டும்.
- தீய பழக்கங்களை கைவிட வேண்டும்.
- காலையில் தூங்கி எழும்போது அப்படியே எழுவதை விட எழுவதற்கு முன் கால்கள் கைகளுக்கு சிறிது அசைவு குடுப்பது நல்லது.
- உணவில் உப்பு மட்டும் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும்.
- எப்பொழுதும் சோகமாக இருப்பதை தவிர்த்து மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.